ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

Go down

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Empty கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

Post by ayyasamy ram Mon May 04, 2020 7:53 am

சென்னை,

உயிர் கொல்லி வைரஸ் கிருமியான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள்
அனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ்
தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை
தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு
தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று
(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்
என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று
அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் பச்சை மண்டல பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம்
உள்ளது. ஆரஞ்சு மண்டல பட்டியலில் 24 மாவட்டங்களும், சிவப்பு மண்டல பட்டியலில்
12 மாவட்டங்களும் இருக்கின்றன.

கடைகள் திறப்பு

கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், இன்று முதல் கடைகளை பொறுத்தவரை,
கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர்,
மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி
வரை திறந்திருக்கும்.

செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி
விற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்து செயல்பட்டால் அவைகள்
திறந்திருக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி
வரை திறந்திருக்கும். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
ஆனால், யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.
பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள்
செயல்படாது. தனியாக இயங்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
செயல்படும்.

சுய தொழில்

சுய தொழில் செய்பவர்களில், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், சாலையோர
டெய்லர், செருப்பு தைப்பவர், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர், காய்கனி வியாபாரிகள்,
சாலையோர டிபன் கடைகள், தனி நபர் நகைத் தொழிலாளி, இஸ்திரி போடுபவர், பூ வியாபாரி
உள்ளிட்டோர் பணியாற்றலாம்.

கடைகளை பொறுத்தவரை, எலக்ட்ரிக்கல் கடை, பேன்சி ஸ்டோர், நோட்டு புத்தக கடை,
ஜெராக்ஸ் கடை, தட்டச்சு கடைகள், பத்திரம் எழுதுபவர், மொபைல் போன் விற்பனை
மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செருப்பு கடைகள், டி.வி., பிரிட்ஜ் விற்பனை கடைகள்,
ஹார்டுவேர் கடைகள், மளிகை கடைகள், சிறு தனிநபர் நடத்தும் துணி கடைகள், பேக்கரி
கடை ஆகியவை இயங்கும்.

அதே நேரத்தில், சலூன், பியூட்டி பார்லர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இயங்க அனுமதி
அளிக்கப்படவில்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Empty Re: கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

Post by ayyasamy ram Mon May 04, 2020 7:55 am

தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை 6-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. நோய்
தாக்கம் குறைந்த ஆரஞ்சு மண்டலத்தில், பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில்
உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படும்.

அதே நேரத்தில், பேரூராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை
இருந்தால், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கு ஏற்ப ஜவுளித்துறை
நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கலாம்
என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில்
நகரியங்கள், தொழிற்பேட்டைகளும் 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்படும்.

நகர்ப்பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க
அனுமதி கிடையாது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து
சூழ்நிலைக்கு ஏற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்க அரசு
உத்தரவிட்டுள்ளது.

5 பேருக்கு மேல் கூடக்கூடாது


மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும்.
கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களை
கொண்டு இயங்கும்.

நகர்புற பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு
மற்றும் மாதிரிகள் உருவாக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து 30 பணியாளர்களை
கொண்டு செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில்
கூடக்கூடாது. சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். அனைவரும்
முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை முறையாக
கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
» டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பு: எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? - தமிழக அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
» 9 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று முழு அளவில் பள்ளிகள் திறப்பு
» 31 கடைகள், 29 ஓட்டல்கள் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum