புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_m10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10 
6 Posts - 67%
heezulia
வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_m10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_m10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_m10வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 06, 2010 7:12 pm


வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Bits_verline
வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை P20b'வெள்ளப் புள்ளே பா... பா...' ஒரே குரல்தான்... எங்கிருந்தோ பறந்து வந்து, கூப்பிட்டவரின் அருகில் அமர்கிறது அந்தக் கொக்கு! கூப்பிட்டவரோ, மண்ணைக் களைந்து மண்புழுவை எடுத்து அதற்குக் கொடுக்கிறார். அது அலட்டாமல் அமர்ந்து சாப்பிடுகிறது. பெத்த பிள்ளைக்கு சாப்பாடு கொடுப்பது போல், பக்கத்தில் அமர்ந்து அது சாப்பிடும் அழகையே பார்த் துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெரியவர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு அருகில் உள்ளது தாணிக்கோட்டகம். திருத்துறைப்பூண்டியிலிருந்து வாய்மேடு செல்லும் பிரதான சாலையில் இருக்கும் அந்த ஊரின் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் மேடு பள்ளம் நிறைந்த மண் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர்பயணித்தால் வரும் அந்த வீட்டில்தான் நாம் கண்ட காட்சி! சம்பந்தப்பட்ட பெரியவரிடம் பேசினோம்.
''எம்பேரு மாணிக்கம். 15 வருஷத்துக்கு முந்தி ஒரு புரட்டாசி மாசத்துல இந்த கொக்கு எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னுச்சி. என் மனைவி சமுத்திரவள்ளி மீன் ஆய்ஞ்சிக்கிட்டு இருந்தா. அவளுக்குப் பக்கத்துல






பச்சப் புள்ளையாட்டம் போய் இந்த கொக்கு உக்காந்துச்சி. என் பொண்டாட்டியும் மீன் ஆய்ஞ்ச மிச்சத்த அந்த கொக்குக்கு போட்டா. அதுலருந்து காலையில 6 மணிக்கு வரும்... சாயந்திரம் 6 மணிக்கு திரும்பிப் போயிடும். தினமும் தீனி கெடைக்கிறதாலதான் இந்த கொக்கு வருதுன்னு நினைச்சோம். 6 மாசம் அப்படியே இருந்துட்டு சித்திரை மாசம் வாக்குல அது வேறொரு பகுதிக்குத் திரும்பிப் போயிடுச்சி.
ஆனா, அடுத்த வருஷமும் அந்த கொக்கு மிகச் சரியா எங்களை நினைப்பு வச்சிக்கிட்டு திரும்ப வந்துச்சி. காணாமப் போன புள்ளையே திரும்பக் கெடைச்சா எப்படி சந்தோஷமா இருக்குமோ... அப்படி சந்தோஷப்பட்டா எம் மனைவி. 'வெள்ளைப் புள்ளை'ன்னு அதுக்குப் பேரு வெச்சா. அதுலிருந்து இன்னிக்கு வரைக்கும் வெள்ளைப்புள்ளைன்னு ஒரு சத்தம் குடுத்தா போதும்... எங்கிருந்தாலும் உடனே வந்து இறங்கிடும். எங்க வீட்டுக்கு மட்டுமே தத்துப் புள்ளையா இருந்த இந்த வெள்ளைப்புள்ள, மெதுவா எல்லார் வீட்டுக்கும் போச்சு. இப்ப எல்லார் வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை P20aவீட்டுக்கும் அது தத்துப் புள்ளைதான். இது யார் வீட்டுக்குப் போனாலும் மண்ணைக் கௌறி பூச்சி ஊட்டி விடுவாங்க...'' என்றார் நெகிழ்ச்சியாக.
விஜயலெட்சுமி என்பவர், ''வந்த ரெண்டாவது வருஷமே அதோட ஒத்தக் கால் அடிப்பட்டுச்சு. அத மெதுவா புடிச்சி மஞ்சப்பத்து போட்டு சிம்பு கட்டி வைத்தியம் பார்த்தோம். ஒரு மாசத்துல கால் சரியாகிடுச்சு. அந்த நன்றிக் கடனுக்காக வருஷம் தவறாம சீஸனுக்கு இங்க வருதோ என்னவோ... 6 மாசம் இருந்துட்டு மறுபடி போய்டும்!'' என்றார்.
கோவிந்தராஜ் என்பவர், ''எங்கிட்டு மேயப் போனாலும் சாயந்திரம் 6 மணிக்கு கூரை மேல உக்காந்து றெக்கையால படபடன்னு அடிச்சிட்டு கொர்ன்னு மூணு தடவை கத்தும். அப்பவே அது உறங்கப் போகுதுன்னு கண்டுக்கலாம். அதேமாதிரி காலைல 6 மணியில் இருந்து 6.30-க்குள் வந்து கூரைல உக்காந்து றெக்கையால அடிக்கும். தூங்கிட்டு இருக்கவங்களை எழுப்பி விட்டுடும். நாங்களும் ஓய்வா இருக்கப்ப அதக் கூப்பிட்டுக்கிட்டு மண்வெட்டிய எடுத்துக்கிட்டுப் போவோம். சின்னப் புள்ளையா பின்னாலேயே எட்ட எட்ட காலெடுத்து வச்சு அழகா நடந்து வரும். வயக்காட்டுல அதுக்கு பூச்சிகளைப் புடிச்சுக் குடுப்போம்...'' என்றார்.
வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை P20

நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே நமது போட்டோ கிராபர் 'வெள்ளைப் புள்ளை'யைப் படமெடுக்க... 'ம்...ம்... சீக்கிரம் எடுத்துக்கோ... நிறைய வேலைவெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை P21இருக்கு' என்பது போலவும், 'இது எப்படி இருக்கு?' என்பதாகவும் ஸ்டைல் காட்டி, பயமற்று மாறி மாறி நின்றது.
நாகப்பட்டினம் மாவட்ட வன காப்பாளரான திருநாவுக் கரசிடம் கொக்கு பற்றி கேட்டோம். ''மனிதர்களின்பாஷையை கொக்கு நன்றாகவே புரிந்துகொள்ளும். உதாரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தக்குளம் என்ற ஊரில் ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவர் வளர்க்கும் பறவைகளைப் பெயர் சொல்லித்தான் அழைப்பார். அவர் சொல்வதை அப்பறவைகளும் கேட்கும். அதேபோல்தான் இந்தக் கொக்கும். பொதுவாகப் பறவைகள் சீஸனுக்கு இங்கு வருவது உணவுக்காகவே. அதேபோல்தான் இந்த கொக்கும் வந்திருக்க வேண்டும். அவ்வூர் மக்களின் அரவணைப்பு அதற்கு பிடித்துப் போனதால் வருடந்தோறும் வந்து போகிறது போலிருக்கிறது. நீங்கள் கூறும் இந்தக் கொக்கு லிட்டில் ஈகிரெட் (Little Egrat) வகையைச் சார்ந்தது. அதற்கு ஆயுள்காலம் சுமார் 25 ஆண்டுகள்!'' என்றார். இந்த 'ஈகிரெட்'டிலேயே சில வகை கொக்குகள் மிக அழகாக நடனமாடக் கூடியதாம். பார்க்கும்போதே அள்ளும் கொள்ளை அழகாம் அது!
உருவங்கள் வேறு... உயிர்கள் ஒன்றே என்ற நெகிழ்வான நினைவை அழுத்தமாக விதைக்கிறது இந்த கிராமத்து கொக்குபாசம்!




வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 06, 2010 7:37 pm

ஆச்சரியமாக உள்ளது!!!

சிலரின் கையில் கிடைத்திருந்தால் அன்றே கொக்கு ரசம் உடலுக்கு நல்லது என்று அதன் கதையை அன்றே முடித்திருப்பார்கள்!!!



வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jan 06, 2010 7:43 pm

வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Icon_razz

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 06, 2010 7:46 pm

சிவா wrote:ஆச்சரியமாக உள்ளது!!!

சிலரின் கையில் கிடைத்திருந்தால் அன்றே கொக்கு ரசம் உடலுக்கு நல்லது என்று அதன் கதையை அன்றே முடித்திருப்பார்கள்!!!

நீங்கதானே சிவா அந்த சிலரின் ஒருவர் கண்ணடி



வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 06, 2010 8:14 pm

kirupairajah wrote:
சிவா wrote:ஆச்சரியமாக உள்ளது!!!

சிலரின் கையில் கிடைத்திருந்தால் அன்றே கொக்கு ரசம் உடலுக்கு நல்லது என்று அதன் கதையை அன்றே முடித்திருப்பார்கள்!!!

நீங்கதானே சிவா அந்த சிலரின் ஒருவர் கண்ணடி

நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!!



வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 06, 2010 8:20 pm

வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை 230655



வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 06, 2010 8:23 pm

ஹா ஹா ஹா ஹா.... வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை 359383



வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக