Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாத மின் கட்டணம் தள்ளுபடி: வைகோ கோரிக்கை
2 posters
Page 1 of 1
அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாத மின் கட்டணம் தள்ளுபடி: வைகோ கோரிக்கை
அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணத்தைத் தள்ளுபடி
செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை
உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஏப்.13) வெளியிட்ட அறிக்கையில்,
"ஊரடங்கு நீட்டித்து இருக்கின்ற நிலையில், தற்போது எழுந்துள்ள
பல பிரச்சினைகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் உடனடித் தீர்வு
கண்டாக வேண்டும்.
வளைகுடா நாடுகளில் 2 கோடிக்கும் கூடுதலான இந்தியத் தொழிலாளர்கள்
பணிபுரிந்து வருகின்றார்கள். அங்கே கரோனா தாக்கத்தால், நமக்கும்
முன்பாகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்று வரையிலும் எல்லோரும்
முடங்கி இருக்கின்றார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை,
மருத்துவமனைகளில் சேர்க்க இடம் இல்லை.
எனவே, வீட்டிலேயே வைத்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி
விடுகின்றார்கள். அப்படிப் பல தொழிலாளர்கள் தங்களுடைய
இருப்பிடங்களிலேயே இருக்கின்றார்கள். இதனால், மற்ற
தொழிலாளர்களுக்கும் தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால்,
அவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள்.
குவைத் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்கள் குழுவை, இந்திய
அரசு அனுப்பி வைத்துள்ளது. அதுபோல, ஏனைய வளைகுடா நாடுகளுக்கும்
மருத்துவர்கள் குழுவை அனுப்ப வேண்டும்.
அயல்நாடுகளுக்கு சுற்றுலா சென்ற பயணிகள், நாடு திரும்ப முடியவில்லை.
அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த குறுகிய கால விசா முடிந்து போனதால்,
கூடுதலாகத் தங்கி இருக்கின்ற நாட்களுக்கு அந்த நாட்டுச் சட்டங்களின்படி,
ஒவ்வொரு நாளும் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அபராதத் தொகை, ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய்க்கு மேல் ஆகின்றது.
ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்திற்கு 50 ஆயிரத்திற்கு மேல் கட்டினால்தான்,
அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியும் என்ற நெருக்கடி
ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகையைக் கட்டுவதற்கு அவர்களிடம் பணம்
இல்லை.
நாடு முழுமையும் பொருட்கள் ஏற்றப்பட்ட 3.5 லட்சம் சரக்கு லாரிகள்,
ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், அனைத்துப்
பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. அன்றாடத் தேவைப்
பொருட்கள் இருப்பு தீர்ந்து விட்டதால், சரக்கு லாரிகளை இயக்குவதற்கு,
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிக் கடன்களைக் கட்ட, தவணை நீட்டிப்பை மத்திய அரசு அறிவித்த
போதிலும், தனியார் வங்கிகள் அதைப் பொருட்படுத்தாமல், மாதத்
தவணையைப் பிடித்தம் செய்து கொண்டார்கள். கரோனா காலத்திற்கான
வட்டித் தள்ளுபடி குறித்து, மத்திய அரசு உரிய அறிவிப்பு எதுவும்
வெளியிடவில்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், தொழில்களை இயக்குவதற்கு
அரசு பெருந்தொகையை நிதி உதவியாக அறிவித்து உள்ளன.
அதுபோல, தமிழ்நாட்டில், தொழில்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன.
மின் கட்டணம் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில்
அன்றாட உணவுக்கும் உறுதி இல்லை. எனவே, தொழிற்சாலைகள்,
வீடுகள் அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணத்தைத்
தள்ளுபடி செய்ய வேண்டும்.
நாட்டுப்புறக் கிராமியக் கலைஞர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்கள்
நல வாரியங்களில் சில ஆயிரம் பேர் பதிவு பெற்று இருக்கின்றார்கள்.
அந்த வாரியங்களின் சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகை அவர்களுக்கு
மட்டுமே கிடைத்து இருக்கின்றது. ஆனால், லட்சக்கணக்கான கலைஞர்கள்
பதிவு பெறாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க
வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்து தமிழ் திசை
Re: அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாத மின் கட்டணம் தள்ளுபடி: வைகோ கோரிக்கை
ஆமாம் ஒரு மாதமென்ன சொல்லறதுதான் சொல்லுகிறீர்கள்
மூணு மாதம் ஆறு மாதமென கூறவேண்டியதுதானே.
உங்களுக்கு என்ன நஷ்டம்?
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
கருமம் நம்ம தமிழ்நாட்டுக்கு என வந்து வாச்சிருங்காங்களே!
ரமணியன்
மூணு மாதம் ஆறு மாதமென கூறவேண்டியதுதானே.
உங்களுக்கு என்ன நஷ்டம்?
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
கருமம் நம்ம தமிழ்நாட்டுக்கு என வந்து வாச்சிருங்காங்களே!
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Apr 15, 2020 10:17 am; edited 1 time in total (Reason for editing : spelling)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாத மின் கட்டணம் தள்ளுபடி: வைகோ கோரிக்கை
எல்லா இடத்திலும் அரசியல் இருக்கவே செய்கிறது. ஆனாலும் இப்படியான சமயங்களில் அரசியல் செய்வது என்பது.................?கொரோனா முடிவுக்கு வந்ததும் கஜானா காலி,கடன் சுமை என கூக்குரலிடப் போவதும் இந்த அரசியல்வாதிகளே! கொள்ளையிட்ட பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாமே!அவர்களுக்கு? சொல்லுங்கள் ஐயா வைகோ.
Guest- Guest
Similar topics
» மின் கட்டணம் உயர்வு
» 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!
» இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» மின் கட்டணம்: 2.70 சதவீதம் வட்டி நிர்ணயம்
» 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!
» இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» மின் கட்டணம்: 2.70 சதவீதம் வட்டி நிர்ணயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|