Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
3 posters
Page 1 of 1
முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
கடந்த வியாழக்கிழமை (26-03-20) அன்று முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரானா வைரஸ் சோதனைக் கருவி சந்தைக்கு வந்துள்ளது. இது, நோயாளிகளுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ மிகவும் உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள Mylab Discovery நிறுவனம், அரசிடன் சோதனைக் கருவிகளைத் தயாரிக்கவும், விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் 150 கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் புனே, மும்பை, டெல்லி, கோவா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு ஆய்வகங்களுக்கு முதல் தொகுதியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மருத்துவ விவகாரத் துறை இயக்குநர் டாக்டர் கெளதம் வான்கடே, பிபிசியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது, "எங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு, வார இறுதி நாட்களிலும் பணிபுரிகிறது. எங்கள் கொரானா வைரஸ் சோதனைக் கருவியின் அடுத்த தொகுப்பு வரும் திங்கள்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது,” என்றார்.
மூலக்கூறு பரிசோதனை மேற்கொண்டு வரும் Mylab நிறுவனம் எச்.ஐ.வி. மற்றும் ஹெப்பாடைட்டிஸ் பி, சி மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைக் கருவிகளையும் உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் ஒரே வாரத்தில் சுமார் 100,000 கோவிட் -19 வைரஸ் பரிசோதனைக் கருவிகளை உருவாக்கி வழங்க முடியும் என உறுதி கூறியுள்ளது. தேவைப்பட்டால் 200,000 வரை கூட உற்பத்தி செய்யமுடியும் என்றும் திட்டவட்டமாக கூறுகிறது.
ஒவ்வொரு Mylab பரிசோதனைக் கருவியிலும் 100 மாதிரிகளைச் சோதிக்க முடியும் என்றும், இதற்கு ரூ.1,200 மட்டுமே செலவாகும் என்றும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது நாம் வெளிநாட்டிலிருந்து கோவிட்-19 சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்ய செலுத்தும் ரூ.4,500ல், இது கால் பங்கு மட்டுமேயாகும்.
"எங்கள் Mylab கிட்(KIT) இரண்டரை மணி நேரத்தில் நோயறிதல் குறித்த பரிசோதனை முடிவுகளை துல்லியமாக கொடுக்கிறது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட சோதனைக் கருவிகள் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை முடிவுகளைத் தெரிவிக்க நேரமெடுத்துக் கொள்கின்றன," என்கிறார்
Mylab-ன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரும், வைராலஜிஸ்ட்டுமான மினல் தகாவ் போஸ்லே. இந்த கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவியை வடிவமைத்த குழுவுக்குத் தலைமை வகித்த போஸ்லே, 4 மாதங்களில் முடிக்கவேண்டிய பணியை 6 வாரங்களில் முடிக்கவேண்டிய மிக இக்கட்டான காலக்கெடுவில் பணிபுரிந்ததாக தெரிவிக்கிறார்.
மேலும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த போஸ்லே virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief ), தனது குழந்தை இந்த மண்ணைத் தொடுவதற்குள் இக்கருவியை கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற லட்சியத்தில் இப்பணியை காலநேரமின்றி கடும் சிரமத்துக்கிடையே மேற்கொண்டிருந்தார்.
"இது ஒரு அவசர நிலை, எனவே இதை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். நான் எனது தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனது 10 பேர் கொண்ட குழுவுடன் மிகவும் கடினமாக உழைத்து இதை கண்டறிந்துள்ளோம்," என்கிறார்.
இறுதியில் அவர் தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆம், அவர் தனது மகளை பிரசவிப்பதற்கு ஓர் நாள் முன்பே, அதாவது மார்ச் 18ஆம் தேதியே தேசிய வைராலஜி நிறுவனத்தின் (என்.ஐ.வி) மதிப்பீட்டிற்காக இந்த பரிசோதனை உபகரணத்தை சமர்ப்பித்து விட்டார். அன்றே இதனை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வணிக ஒப்புதலுக்காகவும் சமர்ப்பித்தார்.
"நாங்கள் நேரத்திற்கு எதிராகவும், தேசத்துக்காகவும் ஓடிக் கொண்டிருந்தோம்," என்கிறார் டாக்டர் வான்கடே. ஆனால் போஸ்லே எங்கள் முயற்சிகளை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். மதிப்பீட்டிற்கான கருவிகளைச் சமர்ப்பிக்கும் முன், எங்கள் குழு அதன் முடிவுகளை துல்லியமாகவும், அனைத்து அளவுருக்களையும், உள்ளீடுகளையும் மீண்டும், மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்தது. "ஒரே மாதிரியில் நீங்கள் 10 சோதனைகளை மேற்கொண்டால், அந்த 10 முடிவுகளும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்," என்று போஸ்லே கூறினார். "நாங்கள் அதை அடைந்தோம், எங்கள் பரிசோதனை கிட் மிகச் சரியாக வேலை செய்தது," என்கிறார்.
இறுதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) 100% முடிவுகளை துல்லியமாக எட்டிய ஒரே இந்திய நிறுவனம் MYLAB என்று அறிவித்தது. இந்தியா போதுமான அளவு கொரானா வைரஸ் பரிசோதனைகளைச் செய்யவில்லை என உலகமே விமர்சிக்கிறது. அது உண்மையும்கூட. இங்கு ஒரு மில்லியனுக்கு வெறும் 6.8 சோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
முதலில், வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்குச் சென்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபர் அல்லது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுடன் தொடர்பு கொண்டவர்களை மட்டுமே பரிசோதிக்க இந்தியா வலியுறுத்தியது.
கடுமையான சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என பின்னர் அறிவித்தது. ஆரம்பத்தில், மாநில ஆய்வகங்கள் மட்டுமே கொரானா வைரஸை சோதிக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் தற்போது பல தனியார் ஆய்வகங்களுக்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் வான்கடே கூறுகிறார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், "மிகச் சிறிய தென் கொரியாவில் 650 ஆய்வகங்களில் கொரானா வைரஸ் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆனால் இங்கே இந்தியாவில் 118 அரசு ஆய்வகங்கள் மட்டுமே உள்ளன, மேலும் 50 தனியார் ஆய்வகங்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 1.3 பில்லியன் மக்கள்தொகைக்கு இது போதுமானது இல்லை.
"இந்தியா இன்னும் பல ஆய்வகங்களை நிறுவி, அங்கு போதுமான சோதனைக் கருவிகளை அமைக்கவேண்டும். அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். இவ்வாறு உள்கட்டமைப்பை அதிகரிக்க மிகுந்த நேரமாகும். ஆனால் அதற்குள் சோதனை முடிவுகளில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தால் இந்திய சமாளிப்பது கடினமாகும். எனவே இந்தியா அதற்குள் விழித்துக் கொள்ளவேண்டும்," என திருமதி ராவ் கூறுகிறார்.
(YS-தகவல் உதவி: பிபிசி)
virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief, அவருக்கும் அவர் பெண்குழந்தைக்கும் வாழ்த்துகள்.
புனேவில் உள்ள Mylab Discovery நிறுவனம், அரசிடன் சோதனைக் கருவிகளைத் தயாரிக்கவும், விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் 150 கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் புனே, மும்பை, டெல்லி, கோவா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு ஆய்வகங்களுக்கு முதல் தொகுதியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மருத்துவ விவகாரத் துறை இயக்குநர் டாக்டர் கெளதம் வான்கடே, பிபிசியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது, "எங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு, வார இறுதி நாட்களிலும் பணிபுரிகிறது. எங்கள் கொரானா வைரஸ் சோதனைக் கருவியின் அடுத்த தொகுப்பு வரும் திங்கள்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது,” என்றார்.
மூலக்கூறு பரிசோதனை மேற்கொண்டு வரும் Mylab நிறுவனம் எச்.ஐ.வி. மற்றும் ஹெப்பாடைட்டிஸ் பி, சி மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைக் கருவிகளையும் உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் ஒரே வாரத்தில் சுமார் 100,000 கோவிட் -19 வைரஸ் பரிசோதனைக் கருவிகளை உருவாக்கி வழங்க முடியும் என உறுதி கூறியுள்ளது. தேவைப்பட்டால் 200,000 வரை கூட உற்பத்தி செய்யமுடியும் என்றும் திட்டவட்டமாக கூறுகிறது.
ஒவ்வொரு Mylab பரிசோதனைக் கருவியிலும் 100 மாதிரிகளைச் சோதிக்க முடியும் என்றும், இதற்கு ரூ.1,200 மட்டுமே செலவாகும் என்றும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது நாம் வெளிநாட்டிலிருந்து கோவிட்-19 சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்ய செலுத்தும் ரூ.4,500ல், இது கால் பங்கு மட்டுமேயாகும்.
"எங்கள் Mylab கிட்(KIT) இரண்டரை மணி நேரத்தில் நோயறிதல் குறித்த பரிசோதனை முடிவுகளை துல்லியமாக கொடுக்கிறது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட சோதனைக் கருவிகள் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை முடிவுகளைத் தெரிவிக்க நேரமெடுத்துக் கொள்கின்றன," என்கிறார்
Mylab-ன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரும், வைராலஜிஸ்ட்டுமான மினல் தகாவ் போஸ்லே. இந்த கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவியை வடிவமைத்த குழுவுக்குத் தலைமை வகித்த போஸ்லே, 4 மாதங்களில் முடிக்கவேண்டிய பணியை 6 வாரங்களில் முடிக்கவேண்டிய மிக இக்கட்டான காலக்கெடுவில் பணிபுரிந்ததாக தெரிவிக்கிறார்.
மேலும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த போஸ்லே virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief ), தனது குழந்தை இந்த மண்ணைத் தொடுவதற்குள் இக்கருவியை கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற லட்சியத்தில் இப்பணியை காலநேரமின்றி கடும் சிரமத்துக்கிடையே மேற்கொண்டிருந்தார்.
"இது ஒரு அவசர நிலை, எனவே இதை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். நான் எனது தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனது 10 பேர் கொண்ட குழுவுடன் மிகவும் கடினமாக உழைத்து இதை கண்டறிந்துள்ளோம்," என்கிறார்.
இறுதியில் அவர் தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆம், அவர் தனது மகளை பிரசவிப்பதற்கு ஓர் நாள் முன்பே, அதாவது மார்ச் 18ஆம் தேதியே தேசிய வைராலஜி நிறுவனத்தின் (என்.ஐ.வி) மதிப்பீட்டிற்காக இந்த பரிசோதனை உபகரணத்தை சமர்ப்பித்து விட்டார். அன்றே இதனை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வணிக ஒப்புதலுக்காகவும் சமர்ப்பித்தார்.
"நாங்கள் நேரத்திற்கு எதிராகவும், தேசத்துக்காகவும் ஓடிக் கொண்டிருந்தோம்," என்கிறார் டாக்டர் வான்கடே. ஆனால் போஸ்லே எங்கள் முயற்சிகளை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். மதிப்பீட்டிற்கான கருவிகளைச் சமர்ப்பிக்கும் முன், எங்கள் குழு அதன் முடிவுகளை துல்லியமாகவும், அனைத்து அளவுருக்களையும், உள்ளீடுகளையும் மீண்டும், மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்தது. "ஒரே மாதிரியில் நீங்கள் 10 சோதனைகளை மேற்கொண்டால், அந்த 10 முடிவுகளும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்," என்று போஸ்லே கூறினார். "நாங்கள் அதை அடைந்தோம், எங்கள் பரிசோதனை கிட் மிகச் சரியாக வேலை செய்தது," என்கிறார்.
இறுதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) 100% முடிவுகளை துல்லியமாக எட்டிய ஒரே இந்திய நிறுவனம் MYLAB என்று அறிவித்தது. இந்தியா போதுமான அளவு கொரானா வைரஸ் பரிசோதனைகளைச் செய்யவில்லை என உலகமே விமர்சிக்கிறது. அது உண்மையும்கூட. இங்கு ஒரு மில்லியனுக்கு வெறும் 6.8 சோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
முதலில், வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்குச் சென்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபர் அல்லது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுடன் தொடர்பு கொண்டவர்களை மட்டுமே பரிசோதிக்க இந்தியா வலியுறுத்தியது.
கடுமையான சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என பின்னர் அறிவித்தது. ஆரம்பத்தில், மாநில ஆய்வகங்கள் மட்டுமே கொரானா வைரஸை சோதிக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் தற்போது பல தனியார் ஆய்வகங்களுக்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் வான்கடே கூறுகிறார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், "மிகச் சிறிய தென் கொரியாவில் 650 ஆய்வகங்களில் கொரானா வைரஸ் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆனால் இங்கே இந்தியாவில் 118 அரசு ஆய்வகங்கள் மட்டுமே உள்ளன, மேலும் 50 தனியார் ஆய்வகங்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 1.3 பில்லியன் மக்கள்தொகைக்கு இது போதுமானது இல்லை.
"இந்தியா இன்னும் பல ஆய்வகங்களை நிறுவி, அங்கு போதுமான சோதனைக் கருவிகளை அமைக்கவேண்டும். அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். இவ்வாறு உள்கட்டமைப்பை அதிகரிக்க மிகுந்த நேரமாகும். ஆனால் அதற்குள் சோதனை முடிவுகளில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தால் இந்திய சமாளிப்பது கடினமாகும். எனவே இந்தியா அதற்குள் விழித்துக் கொள்ளவேண்டும்," என திருமதி ராவ் கூறுகிறார்.
(YS-தகவல் உதவி: பிபிசி)
virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief, அவருக்கும் அவர் பெண்குழந்தைக்கும் வாழ்த்துகள்.
Guest- Guest
Re: முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
மினாள் அவர்களுக்கும் குட்டி பாப்பாவிற்கும் வாழ்த்துகள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
- Code:
virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief, அவருக்கும் அவர் பெண்குழந்தைக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துகள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
நிறைமாதக்புனே நகரில் இயங்கிவரும் ’மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ்’
என்ற ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான
நிறுவனத்தின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையின்
தலைவர் மினல் போஸ்லே. அவர்களுக்கு வாழ்த்துகள்
என்ற ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான
நிறுவனத்தின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையின்
தலைவர் மினல் போஸ்லே. அவர்களுக்கு வாழ்த்துகள்
Similar topics
» இந்தியா-ஆஸி., 3 வது டெஸ்ட்: முதல் நாள்
» 2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு
» இந்தியா-இங்கி., முதல் டெஸ்ட்:3 ம் நாள் முதல் இன்னிங்ஸ்:இந்தியா 241/9
» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
» 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம்
» 2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு
» இந்தியா-இங்கி., முதல் டெஸ்ட்:3 ம் நாள் முதல் இன்னிங்ஸ்:இந்தியா 241/9
» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
» 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|