புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 7%
heezulia
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_m10அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி? K7

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

எனது வயது 77. எனக்கு சர்க்கரை நோயோ,
உயர் ரத்த அழுத்தமோ வேறு கோளாறுகளோ இல்லை.
ஆயினும் சாப்பிட்ட பின் உடனே மோஷன் வருகிறது.

இரவு 9.30 மணிக்குத் தூங்கச் சென்றால் ஒரு மணி
நேரத்துக்கு ஒரு தடவை இரவு முழுவதும் சிறுநீர் கழிக்க
வேண்டி வருகிறது. பிராஸ்டேட் சுரப்பி பிரச்னை இல்லை.

10 மி.லி. சிறுநீர் கழிக்க பத்து நிமிடம் ஆகிறது. சிறுநீர்
உடனே போவதில்லை. இதுவே எனது பிரச்னை. சிறுநீர்
பகலிலும் இரவிலும் சிரமமில்லாமல் போக என்ன செய்ய
வேண்டும்?

-சங்கர வெங்கடராமன், விருகம்பாக்கம், சென்னை.
உணவு வயிற்றில் வந்து விழுந்தவுடன், அந்தச் செய்தியானது
மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மலப்பைக்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மலம் வெளியேறுகிறது.

இந்த அவசரநிலைப் பிரகடனத்திற்குக் காரணமாக, நரம்புகளின்
அதிவேக செயல்பாட்டைக் குறிப்பிடலாம். அவற்றைச்
சாந்தப்படுத்தி, மலத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய
அவசியமிருக்கிறது.

மனிதர்களுக்கு மலமே பலமாக இருப்பதாலும், உங்களுக்கு
வயதாகிவிட்டதாலும் உடல் வலுவை இழக்கக் கூடாது. அதற்கு
தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி
காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்ட பின், சிறிது சூடான
வெந்நீர் அருந்தவும்.

இதனால், குடலில் ஏற்படும் வாத பித்தங்களின் சீற்ற நிலைமாறி,
குடல் சார்ந்த நரம்புகள் வலுப்பெறும்.

Gastro Colic Reflex எனப்படும் இந்த உபாதை,
மூளையின் நரம்புகளின் தூண்டுதலாலேயே நடைபெறுவதால்,
அவற்றின் தூண்டுதலை சாந்தப்படுத்தும் விதமாக தலைக்குக்
க்ஷீரபலா தைலம் அல்லது கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்
உபயோகிக்க நல்லது.

தைலத்தை இளஞ்சூடாகப் பஞ்சில் முக்கி எடுத்து, தலையில்
சுமார் அரை – முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான
நீரினால் தலைக்குக் குளித்து, உச்சந்தலையில் ராஸ்னாதி எனும்
சூரண மருந்தைத் தேய்த்துவிடலாம்.

இதனால், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றைத்
தடுக்கலாம்.

இரவில் சிறுநீரகங்கள் துரிதகதியில் சிறுநீரைச் சுரக்கச் செய்து
சிறுநீர்ப்பையில் சேர்த்து அதைக் கழிக்க வேண்டிய நரம்புகள்
தூண்டப்படுவதால், நீங்கள் மதியம் முதலே நீரின் ஆதிக்கம் கொண்ட
கறிகாய்களையும் பழங்களையும் தவிர்க்க வேண்டிய நிலையில்
இருக்கிறீர்கள்.

வெள்ளரி, பீர்க்கு, புடலை, பூசணி, பரங்கி, முள்ளங்கி, ஆரஞ்சு,
திராட்சை, சாத்துக்குடி, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றை அதிகம்
பயன்படுத்தக் கூடாது. ஆனாலும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும்
தாமதத்தைப் போக்க, இவை அனைத்தையும் காலையில்
ஓர் அட்டவணை தயாரித்து ஒன்றிரண்டாக தினமும் பயன்படுத்த
முயற்சிக்கவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

சுகுமாரம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, காலை, இரவு
உணவிற்கு முன்பும் பின்பும் என்ற ரீதியில் சுமார் 10 மி.லி.
சாப்பிடவும். இதனால், சிறு நீரங்களின் செயல் ஊக்கியான
நரம்புகள், சுரப்பிகள் அனைத்தும் வலுப்படும்.

சிறுநீர்ப்பையினுள்ளே அமைந்துள்ள தசைப்பகுதியின் நரம்புகளும்
வால்வுகளும் தங்களுடைய முதுமையின் காரணமாக, செயலிழக்கும்
நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

அவற்றிற்கு செயலூட்டம் தரும் மருந்தாக இந்த நெய் மருந்து
இருந்தாலும், மஹாமாஷ தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம்
போன்றவற்றை வெது வெதுப்பாக இடுப்பு, அடிவயிறு, தொடை
இடுக்கு, தொடை ஆகிய பகுதிகளில் தடவிவிட்டு, சுமார்
அரை – முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெந்நீரால் அலம்பி
எண்ணெய்ப் பசையை அகற்றி, அன்று மதியம் சூடான ரசம்
சாதத்துடன் சிறுகீரை அல்லது மூக்கரட்டைக் கீரை
போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.

மேற்குறிப்பிட்ட இருநிலைகளிலும் உங்களுக்கு பசியின் வலுவான
தன்மை குறைந்திருப்பதையே காட்டுகிறது. கறிவேப்பிலை,
புதினா, கொத்தமல்லி முதலியவற்றின் துவையலையும், தயிரைக்
கடைந்து வெண்ணெய் எடுத்த மோரையும், அந்த மோரையும்
லேசாகச் சூடாக்கி ஓமம் தாளித்து உணவில் சேர்ப்பதையும்
வழக்கமாக்கிக் கொள்ள, குடல் சார்ந்த உபாதைகள் மாறுவதுடன்,
பசியும் நன்றாக எடுக்கத் தொடங்கும். அதனால், உணவின் சத்து
உடலுக்கு நன்கு கொண்டு செல்லப்பட்டு தாதுபலம் வளரும்.

குடல் இழந்துள்ள சக்தியை மீட்டுத் தருபனவற்றில், ஜீரகபில்வாதி
லேகியம், குடஜாரிஷ்டம், அஷ்ட சூரணம் போன்ற ஆயுர்வேத
மருந்துகள் நல்ல பலன் தருபவை.

சிறுநீர் சரியாக வெளியேறவில்லையே என்று நினைத்து அடிக்கடி
சிறுநீரை வெளியேற்றும் மருந்தை உபயோகிப்பதை விட,
சிறுநீர் தெளிவாவதை உறுதி செய்யும் பாகற்காய், சுண்டைக்காய்,
வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி,
நெல்லிமுள்ளி, ஆடை ஏற்படுமாறு இளந்தீயில் காய்ச்சி ஆடை
நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை,
பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், உளுந்து, பகல்தூக்கம்

முதலியவற்றைத் தவிர்க்கலாம்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600 123

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக