Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
3 posters
Page 1 of 1
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த வைரஸ்
முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்றால்
கண்டிப்பாக இல்லை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லட்சக்கணக்கான
நபர்களைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது கோவிட்-19
கொரோனா வைரஸ். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு
எளிதாகப் பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள்
மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இது முதியவர்களை எளிதில் பாதிக்கும் என்று
கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா
வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மூவருமே
60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் கொரோனா வைரஸ்
முதியவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துமா...?
நம் வீட்டில் உள்ள வயதானவர்களை இதிலிருந்து காப்பது
எப்படி?
என்பது பற்றி முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம்
பேசினோம்.
-
முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
----------------------
"தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் முதியவர்களை
அதிகம் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது
இந்தியாவில் உயிரிழந்த மூவருமே வயதானவர்கள் என்பதால்
கொரோனா வைரஸ் முதியவர்களைப் பாதிக்கும்போது
தீவிர விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் மக்களுக்கு
எழலாம்.
எந்தவொரு நோய்க்கிருமியாக இருந்தாலும் அது தங்கள்
உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களையே
எளிதில் தாக்கும்.
எனவே வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன்
குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் எளிதில் நோய்க்கு
உட்படலாம். பொதுவாகவே வயதாக ஆக நம் உடலின் நோய்
எதிர்ப்புத்திறன் குறைந்துகொண்டே செல்வது இயல்புதான்.
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த வைரஸ்
முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்றால்
கண்டிப்பாக இல்லை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லட்சக்கணக்கான
நபர்களைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது கோவிட்-19
கொரோனா வைரஸ். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு
எளிதாகப் பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள்
மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இது முதியவர்களை எளிதில் பாதிக்கும் என்று
கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா
வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மூவருமே
60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் கொரோனா வைரஸ்
முதியவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துமா...?
நம் வீட்டில் உள்ள வயதானவர்களை இதிலிருந்து காப்பது
எப்படி?
என்பது பற்றி முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம்
பேசினோம்.
-
முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
----------------------
"தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் முதியவர்களை
அதிகம் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது
இந்தியாவில் உயிரிழந்த மூவருமே வயதானவர்கள் என்பதால்
கொரோனா வைரஸ் முதியவர்களைப் பாதிக்கும்போது
தீவிர விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் மக்களுக்கு
எழலாம்.
எந்தவொரு நோய்க்கிருமியாக இருந்தாலும் அது தங்கள்
உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களையே
எளிதில் தாக்கும்.
எனவே வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன்
குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் எளிதில் நோய்க்கு
உட்படலாம். பொதுவாகவே வயதாக ஆக நம் உடலின் நோய்
எதிர்ப்புத்திறன் குறைந்துகொண்டே செல்வது இயல்புதான்.
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
இதற்கு வயதானவர்களின் உணவு முறை, அவர்களுக்கு
ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மற்ற உடல்
கோளாறுகளும் அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும்
ஸ்டீராய்டு வகை மருந்துகளும் முக்கியக் காரணங்கள்.
எனவே எந்தவொரு வைரஸ், பாக்டீரியாவாக இருந்தாலும்
அவை இளைஞர்களைவிட முதியவர்களைத்தான் எளிதில்
தாக்குகின்றன.
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த
வைரஸ் முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா
என்றால் கண்டிப்பாக இல்லை.
தற்போது உயிரிழந்த மூவரும் வயதானவர்கள் என்பதால்
அவர்களுக்கு ஏற்கெனவே நுரையீரல், சிறுநீரகப் பிரச்னை
போன்ற ஏதாவது குறைபாடுகள் இருந்திருக்கலாம்.
-
-
அதனுடன் கொரோனா தொற்றும் சேர்ந்தபோது அது
உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ஆரோக்கியமாக
இருக்கும் ஒரு முதியவருக்குக் கொரோனா தொற்று
ஏற்பட்டால் அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி
முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம்.
பொதுவாக நோய் வந்தபிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வதை
விட அது வராமல் தடுக்க நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளே சிறந்தவை.
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முதியவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப்
பரவக்கூடியது என்பதால் மற்றவர்களிடமிருந்து சற்று
விலகியே இருப்பது நல்லது.
அதிகம் கூட்டம் கூடும் இடங்களான பார்க், கடைத்தெரு,
திருமண விழாக்கள், கோயில்கள் போன்றவற்றிற்குச்
செல்வதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வெளியில்
செல்வதையே தவிர்ப்பது சிறந்தது.
ஹேண்ட் வாஷ்
அடிப்படை சுகாதார தற்காப்பு முறைகளைப் பின்பற்ற
வேண்டும். மாஸ்க் பயன்படுத்தலாம். கைகளை சோப்
அல்லது ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்தி சுத்தமாக
வைத்துக்கொள்ள வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்
உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். தூய்மையான
முறையில் நன்றாக வேகவைக்கப்பட்டுச் சமைத்த
உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த நீரை விடக் கொதிக்க வைத்த நீரையே பருக
வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்.
சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு போன்ற
பிரச்னைகள் இருந்தால் அவற்றுக்கான மருந்துகளை
மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று அல்லது காய்ச்சல் போன்ற
அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து வயதானவர்கள்
விலகியே இருக்க வேண்டும்.
வீட்டில் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது உடல்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வெளியில் செல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்
மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் செல்லலாம்.
குளுமையான இடங்களில் வைரஸ் எளிதாகப் பரவும்
என்பதால் வெதுவெதுப்பான இடங்களில் இருக்க வேண்டும்.
ஒருவேளை காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள்
ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரைச் சென்று
பார்க்கவேண்டும்.
கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் மருத்துவ
மனையில் சேர்ந்து முறையான சிகிச்சைகளை எடுத்துக்
கொண்டால் நிச்சயம் அதிலிருந்து மீளலாம்" என்றார்
மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.
-
-----------------------------மா.அருந்ததி
நன்றி-விகடன்
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
எங்க நாட்டிலேயும் இதே பிரச்சனை தான் சார், எங்கேயும் போக முடியல, சிறையில கொஞ்சம் வசதியோட இருக்குற மாதிரி இருக்கு. பல இடங்கள்ல போலீசுகாரங்க இருக்காங்க, தப்பித் தவறி வெளியில போயிட்டு பல கேள்வி மேல கேள்வியா கேக்குறாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
தனித்து நில்லுங்கள்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
தனிமைப்படுத்தல் - social distancing
Guest- Guest
Similar topics
» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
» ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம்
» திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை
» உணவு உண்டவுடன் செய்ய கூடாதவை..!!
» சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை
» ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் அறிவோம்
» திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை
» உணவு உண்டவுடன் செய்ய கூடாதவை..!!
» சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|