ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது

Go down

விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Empty விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது

Post by ayyasamy ram Sun Mar 01, 2020 5:08 am


வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரும்புலி
கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). விவசாயி.
இவருக்கு பூர்வீக சொத்தாக 1 ஏக்கர் 47 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை கடந்தாண்டு தனது பெயருக்கு ரஞ்சித்குமார்
மாற்றினார். பின்னர் அவர், அதனை கண்ணமங்கலம் சார்
பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம்
அளித்தார். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது
ரஞ்சித்குமார் நிலத்தின் மதிப்பை விட முத்திரைத்தாள் கட்டணம்
குறைவாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகள் வேலூர் கலெக்டர் அலுவலக
வளாகத்தில் செயல்பட்டு வரும் வேலூர், திருவண்ணாமலை
மாவட்ட முத்திரைதாள் கட்டண அலுவலகத்துக்கு கடிதம்
அனுப்பினர். அதன்பேரில் இதுதொடர்பாக விசாரிக்க
21 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று
ரஞ்சித்குமாருக்கு அந்த அலுவலகத்தில் இருந்து கடிதம்
அனுப்பப்பட்டது.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி ரஞ்சித்குமார் முத்திரைதாள்
கட்டண அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த தனித்துணை கலெக்டர் (
முத்திரைதாள் கட்டணம்) தினகரன் முத்திரைதாள் கட்டணமாக கூடுதலாக
ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு ரஞ்சித்குமார், நான் விவசாயம் செய்து வருகிறேன். என்னிடம்
இவ்வளவு பெரிய தொகை கிடையாது என்று கூறிவிட்டு அங்கிருந்து
சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் வேலூர்
மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தினகரன் செல்போன் மூலம் ரஞ்சித்குமாரை தொடர்பு
கொண்டு நான் சில நாட்களில் இப்பணியில் இருந்து செல்ல உள்ளேன்.

எனவே முத்திரைத்தாள் கட்டணம் தொடர்பான உனது நிலப்பத்திரத்தை
விடுவித்து, பிரச்சினையை முடித்து வைக்கிறேன். அதற்கு
ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சினிமா பாணியில் விரட்டி சென்று...

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார் இதுகுறித்து
வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு
போலீசார் தினகரனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம்
போலீசார் வழங்கி, அதனை தினகரனிடம் கொடுக்கும்படி கூறினர்.
அதையடுத்து ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் செல்போனில்
தினகரனை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் தயாராக இருப்பதாகவும்,
அதனை எங்கு வந்து கொடுப்பது என்று கேட்டுள்ளார்.

அதற்கு தினகரன் இரவு 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம்
அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்து தரும்படி தெரிவித்துள்ளார்.
அதன்படி இரவு 9.30 மணியளவில் ரஞ்சித்குமாரும் அங்கு சென்றார்.

சிறிதுநேரத்தில் அங்கு தனது சொந்த காரில் வந்த தினகரன்,
ரஞ்சித்குமாரை காரில் ஏற்றி சென்றார். அந்த காரை லஞ்ச ஒழிப்பு
போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். காரில் வைத்து
ரூ.50 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட தினகரன் வேலூர் புதிய
பஸ்நிலையம் அருகே ரஞ்சித்குமாரை இறக்கி விட்டு விட்டு
சத்துவாச்சாரி சாலையில் சென்றார்.

2 பேர் கைது

ரசாயனம் தடவிய பணத்தை தினகரன் பெற்றதை உறுதிப்படுத்திக்
கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை விரட்டிச் சென்றனர்.
போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த தினகரன் காரை
வேகமாக ஓட்டுமாறு போளூரை சேர்ந்த அவரது டிரைவர் ர
மேஷ்குமாரிடம் (45) தெரிவித்தார். கார் வேகமாக சென்று கொண்டிருந்த
போது சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்று சென்னை-பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில்
அருகே காரை மடக்கினர். தொடர்ந்து

போலீசார் அவரை லஞ்ச பணத்துடன் கைது செய்ய முயன்றனர்.
அதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.

தினகரன், டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை காரில் இருந்து
வெளியேற்றி போலீசார் சோதனையிட்டனர். காரில், ரசாயனம்
தடவிய ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் என
ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து தினகரனை அவருடைய அலுவலகத்துக்கு அழைத்து
சென்றனர். அங்கு வைத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு
தேவநாதன் (பொறுப்பு) தினகரனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அலுவலகத்தை போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்த
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து தினகரன்,
டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு பெட்டியில் ரூ.76½ லட்சம்

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் காட்பாடி
பிரம்மபுரம் தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தினகரனின் வீட்டில்
துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார்
சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு இரும்பு பெட்டியில் ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள்
கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை எண்ண 2 பணம்
எண்ணும் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அவற்றின் மூலம் பணம்
எண்ணப்பட்டது.

அந்த இரும்பு பெட்டியில் ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 600 இருந்தது.
வீட்டில் இருந்த மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள், இரும்பு பெட்டியுடன்
பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரும்பு
பெட்டியில் இருந்த பணத்தை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்
எடுத்து சென்று வேலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

7 மணி நேரம் நடந்த சோதனை பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட குடியாத்தம் வருவாய் கோட்ட உதவி கலெக்டர்
பணியை தினகரன் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தனித்துணை கலெக்டர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம்
கைப்பற்றப்பட்டது வேலூர், காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

போளூரில் சோதனை

மேலும் போளூரில் வசந்தம் நகரில் உள்ள தனித்துணை கலெக்டர்
தினகரனின் சொந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம்
12 மணி முதல் மாலை 5 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இந்த
சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Empty Re: விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது

Post by Guest Sun Mar 01, 2020 12:34 pm

ஆஹா இது நல்லாயிருக்கே! பொலிசாரில் சிலர் அப்பாவிகளிடம் புடுங்குவது போல்....
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum