ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!

Go down

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Empty கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!

Post by ayyasamy ram Wed Feb 26, 2020 10:18 am

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F66dd1353-7ade-4fab-9eae-0e6ac245608f%2Fvavvaalkal
-
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F371acbfc-a695-49df-a72c-23a68bcd1ccc%2Fvavvaalkal_1
-


இந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் பத்துக்கும்
மேற்பட்ட புளிய மரங்களும், வேப்ப மரங்களும் இருக்கின்றன.
இந்த மரங்களில்தான், ஆயிரக்கணக்கான பழம்தின்னி
வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், மரக்கிளைகளில்
தொங்கியபடி வாழ்ந்து வருகின்றன.

பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான்
வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள்
பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும்.

ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில்,
அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான
வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது
ஆச்சர்யம்தான்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர்
கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக
மாறியிருக்கிறது.

க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத்
தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக
அளவில் முதலிடம் பிடித்துவருகிறது.

இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது.
இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத்தின்
முகப்பில் இருக்கிறது, ராஜலிங்கமூர்த்தி கோயில்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Empty Re: கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!

Post by ayyasamy ram Wed Feb 26, 2020 10:20 am

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2Fa049652d-a95e-441d-b675-e49f0e40a6a9%2Fvavvaal_2
-
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F09f02393-aafc-4174-a449-a8f00344e9c9%2Fvavvaal_1
-


இந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் பத்துக்கும்
மேற்பட்ட புளிய மரங்களும், வேப்ப மரங்களும் இருக்கின்றன.
இந்த மரங்களில்தான், ஆயிரக்கணக்கான பழம்தின்னி
வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், மரக்கிளைகளில்
தொங்கியபடி வாழ்ந்து வருகின்றன.

இந்த வௌவால்களைப் பற்றிச் சொல்வதற்கு அந்த ஊர்
மக்களிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. ஓர்
அதிகாலையில், அந்தக் கிராமத்துக்குப் பயணமானோம்.

ஊர் முகப்பில் உள்ள ராஜலிங்கமூர்த்தி கோயிலை
நெருங்கியதுமே, இருள் விலகியும் விலகாததுமான அந்த
அதிகாலை பொழுதில் வானத்தில் வட்டமிட்டப்படி எண்ணற்ற
வௌவால்கள் சுற்றிக்கொண்டிருந்தன.
-
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2Febc025fb-4548-4d74-8b2a-35023c33add4%2Fshanmygavel
-


ரம்மியமான அந்தக் காட்சிகளை உள்வாங்கியபடி,
கோயிலை வலம் வந்தோம். அதற்குள் நாம் வந்திருப்பதை
அறிந்த அந்தக் கோயிலின் நிர்வாகி எம்.என்.சண்முகவேல்,
"இன்னைக்கு நேத்தியில்லை, 600 வருஷங்களுக்கு முன்னால
இந்தக் கோயில் அமைஞ்சப்ப இருந்தே, இந்த வௌவால்களும்
கூட்டம் கூட்டமா இருந்திருக்கு.
எதனால் அதுங்களுக்கு எங்க ஊர் புடிச்சுச்சுங்கிற காரணம்
தெரியலை.

எங்க ஊர் அப்ப இருந்தே வறட்சியான ஊரா, வானம் பார்த்த
பூமியாதான் இருந்திருக்கு. பழ மரங்களும் எங்க ஊர்ல இல்லை.
ஆனா, பகல் முழுவதும் இந்த வௌவால்கள் கோயிலுக்கு
உள்ளேயும், வெளியேயும் இருக்கும் மரங்களில் தங்கும்.

மாலை ஆறு மணிக்கெல்லாம், 300 கிலோமீட்டர்களுக்கு
அப்பால் உள்ள கொடைக்கானல் மலைகளுக்கு இரைக்காகப்
பறந்து போய்விடும். விடியக்காலை அஞ்சு மணிக்கெல்லாம்
மறுபடியும் எங்க ஊருக்கு வந்துவிடும்.


சுமார் நூறு வருடங்களுக்கு முன்னாடி, யாரோ வெளியூர்
ஆள் எங்க ஊர் மக்களை கேட்காமல், வைத்தியத்துக்காக
வௌவால் ஒன்றை வேட்டையாடிட்டார். அதனால், எல்லா
வௌவால்களும் மறுநாள் எங்க ஊருக்கு வராம
கோச்சுக்கிட்டுப் போய், நாமக்கல் மாவட்டத்துல உள்ள
நஞ்சை இடையார்ங்கிற ஊர்ல போய் தங்கிவிட்டதாம்.

இதனால், பரிதவித்துப்போன எங்க ஊர் மக்கள் எல்லோரும்
சேர்ந்து போய் வௌவால்கள்கிட்ட மன்னிப்பு கேட்டதோடு,
மேளதாளம் வைத்து, அதுங்களை மறுபடியும் எங்க ஊருக்கு
அழைச்சுக்கிட்டு வந்திருக்காங்க.

அஞ்சு மணியில் இருந்து ஆறு மணி வரை வர்ற
வௌவால்கள் எல்லாம், கோயிலுக்கு உள்ளே உள்ள
மரங்களில் அடையும். ஆறு மணிக்குப் பிறகு வர்ற
வௌவால்கள், கோயிலுக்கு வெளியே உள்ள மரங்களில்
தங்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Empty Re: கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!

Post by ayyasamy ram Wed Feb 26, 2020 10:21 am

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F7ca66304-8f13-4b19-8bd2-3aad2bc9f6be%2Frasappan__poosari_
-



ராஜலிங்கமூர்த்தி கோயிலின் பூசாரி ராசப்பனிடம்
பேசினோம்.

"பழ மரங்களே இல்லாத எங்க ஊர்ல இவ்வளவு
வௌவால்கள் தங்குவதற்கு காரணம், ராஜலிங்கமூர்த்திதான்.
அதனால், 'ராஜலிங்கமூர்த்தியும், வௌவால்களும்
வேறில்லை'னு நெனச்சு, இந்த வௌவால்களை சாமியா
வணங்குறோம். வௌவால்களுக்கு நாங்க எந்த இடைஞ்சலும்
கொடுக்கமாட்டோம்.

அறுபது வருஷத்துக்கு முன்னாடி வரை, கோயில் பிராகாரத்துல
உள்ள கருப்பண்ணசாமிக்கு கொடையின்போது, அதிர்வேட்டுப்
போடுவோம்.

அந்தச் சத்தம் வௌவால்களுக்கு இடைஞ்சலா இருந்ததால்,
அப்படி வெடி போடுறதை நிறுத்திட்டோம். அதேபோல், தீபாவளி
போன்ற பண்டிகை காலம், கோயில் திருவிழா காலம், வீடுகளில்
நடக்கும் விசேஷங்களின்போதும் வெடி போடுறதை நாங்க
அனுமதிக்கிறதில்லை.

எங்க ஊரை மத்த கிராம மக்கள், 'வௌவால் கிராமம்'னுதான்
சொல்லுவாங்க. பழ சீசன் காலத்துல, 3000 க்கும் மேற்பட்ட
வௌவால்கள் பெருகிடும். ஆனா, கோடைக்காலங்களில்
வௌவால்களின் எண்ணிக்கை கணிசமா குறைஞ்சுரும்.

இந்த வௌவால்கள் வாழும் மரங்களை நாங்க எந்தக்
காரணத்துக்காவும் வெட்டமாட்டோம்'னு உறுதி
எடுத்திருக்கிறோம்.

வௌவால்கள் இயற்கையா இறக்க நேர்ந்தா, ஊரே சேர்ந்து
அதை அடக்கம் பண்ணுவோம். பழம்தின்னி வௌவால் கறி
குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான், டி.பி நோய்களுக்கு
நல்ல மருந்துனு சொல்லிட்டு, சிலர் எங்க கிராமத்துக்கு வந்து,
'ஒரு வௌவாலை அடிச்சுக்கிறோம்'னு கேட்பாங்க.

ஆனா, அவங்களை திட்டி விரட்டிவிட்டிருவோம். எங்க
காலத்துக்குப் பிறகும் இந்த வௌவால்களை சாமியா நெனச்சு
பாதுகாக்க, அடுத்தடுத்த தலைமுறையையும் அறிவுறுத்தியே
வளர்க்கிறோம்" என்றார்.
-
--------------------------
துரை.வேம்பையன்
புகைப்படம் - நா.ராஜமுருகன்
நன்றி- விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Empty Re: கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டத்துக்கு நான்கு பேரை அழைத்து வந்த …
» ஹெலிகாப்டரில் "ஹேப்பியாக" பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை
» மானம் காத்த மாதரசி.. ஆடையின்றி நடந்து வந்த மனநலம் பாதித்த ஆணுக்கு "தாயாக மாறிய" சிங்கப்பெண்!
» பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி
» திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum