புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: பாரம் Poll_c10முதல் பார்வை: பாரம் Poll_m10முதல் பார்வை: பாரம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
முதல் பார்வை: பாரம் Poll_c10முதல் பார்வை: பாரம் Poll_m10முதல் பார்வை: பாரம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முதல் பார்வை: பாரம் Poll_c10முதல் பார்வை: பாரம் Poll_m10முதல் பார்வை: பாரம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: பாரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2020 4:49 pm

முதல் பார்வை: பாரம் 1582019309855
-
முதல் பார்வை: பாரம் 1582019321855
-
படுத்த படுக்கையாகக் கிடக்கும் தந்தையைக் கவனித்துக்
கொள்ளாமல், அவரைப் பாரமாக நினைக்கும் குடும்பத்தின்
கதைதான் ‘பாரம்’

மகன், மருமகள், பேத்தி மூவரும் கிராமத்தில் வசிக்க,
நகரத்தில் உள்ள தன் தங்கையின் வீட்டில் இருந்துகொண்டு
இரவுநேர வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறார்
கருப்பசாமி.

அவருடைய தங்கை மட்டுமின்றி, தங்கையின் மகன்கள்
முருகன், மணி, வீரா மூவரும் கூட அவரிடம் மிகப் பாசமாக
உள்ளனர்.

அதுவும், வீராவுக்கு கருப்பசாமி மாமா மீது தனிப் பிரியம்.
‘இந்த வயசுல உன்ன யாரு வேலைக்குப் போகச்சொன்னா?
நாங்க மூணு பேரும் உன்னைப் பார்த்துக்க மாட்டோமா?’
என்று அன்புடன் கோபித்துக் கொள்கிறார் வீரா.

‘விட்டில் பூச்சிதான்டா விளக்கைத் தேடிப்போகும்.
நான் மின்மினிப் பூச்சிடா’ எனத் தத்துவம் சொல்கிறார்
கருப்பசாமி.

ஒருநாள், இரவுப் பணி முடித்துத் திரும்பும்போது, கருப்பசாமிக்கு
விபத்து நேர்கிறது. விஷயம் அவருடைய தங்கை மகன்களுக்குத்
தெரியவர, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், இடுப்பு எலும்பு முறிந்து
விட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
என்றும் கூறுகிறார். இல்லையென்றால், கடைசி வரை அவரால்
எழுந்து நடமாட முடியாது என்றும் கூறுகிறார்.

எனவே, விஷயத்தைக் கருப்பசாமியின் மகன் செந்திலுக்குச்
சொல்கின்றனர். ஆனால், தான் வேலையில் இருப்பதாகவும்,
கிராமத்திலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்றும்
அவரை கிராமத்துக்கு தூக்கிவரச் சொல்கிறார் செந்தில்.

எனவே, ஒரு குட்டி யானை வண்டியில் கருப்பசாமியை ஏற்றிச்
செல்கின்றனர் தங்கை மகன்கள்.

கருப்பசாமியைக் கிராமத்தில் விட்டுவந்த சில நாட்களில்,
அவர் இறந்துவிட்டார் எனத் தங்கை மகன்களுக்கு போன்
வருகிறது. கருப்பசாமி தானாக இறந்தாரா அல்லது கொலை
செய்யப்பட்டாரா? அதன் பிறகு நடந்தது என்ன? என்பது மீதிக்
கதை.

66-வது தேசிய விருது விழாவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான
விருதைப் பெற்ற படம் இது. ஆனால், ஆவணப் படத்துக்கான
கூறுகள்தான் அதிக அளவில் இருந்தன.

----


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2020 4:51 pm

முதல் பார்வை: பாரம் 1582019331855
-
முதல் பார்வை: பாரம் 1582019343855
படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்கள். பெரும்பாலும் புதுமுக
நடிகர்கள். எனவே, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை,
நேரடியாகப் பார்ப்பது போல் உணர முடிகிறது. குறிப்பாக,
கருப்பசாமி, அவருடைய தங்கை, மீனா ஆகிய
3 கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக எதார்த்தம். அதேபோல்,
வசனங்களும். இதுதான் வசனம் எனச் சொல்லி, அவர்களை
ஒப்புவிக்கச் சொல்லாமல், பெரும்பாலும் சூழ்நிலையைச் சொல்லி,
நடிகர்களையே பேச வைத்தது போல் அவ்வளவு இயல்பாக உள்ளது.

அதேசமயம், ஆவணப்படமாக நினைக்கத் தோன்றுவதற்கு இதுவும்
ஒரு காரணமாகிறது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால், தனியாக
டப்பிங் பேசாமல், லைவ் டப்பிங்கைப் பயன்படுத்தியுள்ளனர்.
அதேபோல், ஒளிப்பதிவிலும் பெரிதும் மெனக்கெடாமல், இயல்பாகக்
கிடைத்த வெளிச்சத்தையே பயன்படுத்தி எடுத்துள்ளனர். இவையும்
இதுவொரு ஆவணப்படம் என்ற கருத்தையே நம்முள் தொடர்ந்து
வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது.

தமிழகக் கிராமங்களில் சில தலைமுறைகளாக இருந்து வந்த/வரும்
‘தலைக்கூத்தல்’ முறையை அடிப்படையாகக் கொண்டு இந்தப்
படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.

ஆனால், ஊர்ப் பெயரைச் சொன்னால் பிரச்சினையாகும் என்பதால்,
படத்தில் எந்த ஊர் எனக் குறிப்பிடவில்லை.

அதுபோல், 26 வகையான ‘தலைக்கூத்தல்’ முறை இருக்கிறது
என்று தான் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலமாகப் படத்தில் வசனம்
வைத்துள்ளார். அதில், ஏதாவது ஒரு முறையைப் படத்தில்
கையாண்டிருந்தாலும், அதை வைத்தே எந்த ஊர் எனக் கண்டு
பிடித்து விடலாம் என்பதால், அதை அறவே தவிர்த்து, தன்னுடைய
புத்திசாலித்தனத்தைக் காட்டியுள்ளார்.

அதற்காக, விஷ ஊசி போட்டுக் கொல்வது என்பது எப்படி
‘தலைக்கூத்தல்’ முறைக்குள் வரும் என்பது இயக்குநருக்கே
வெளிச்சம்.

அதேசமயம், தாத்தா - பேத்திக்கான உறவு இடைவெளி, மாமா -
தங்கை மகன் உறவின் பிணைப்பு போன்ற சின்னச் சின்ன
விஷயங்கள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சின்ன வயதில்,
திருவிழாவில் பீப்பீ வாங்கி ஊதுவதை அண்ணனும் தங்கையும்
சிரித்துப் பேசும் காட்சி, அழகியல்.
அதேசமயம், சில மிகை எதார்த்தக் காட்சிகளும் படத்தில் ஆங்காங்கே
இடம்பெற்றுள்ளன.

மிகப்பெரிய உணர்வு குறித்துப் பேசியிருக்கும் படம், அந்த
உணர்வைப் பார்வையாளனுக்கும் கடத்த வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை
அடைய முடியும்.

ஆனால், அப்படி ஒரு உணர்வை இந்தப் படம் உண்டாக்கவில்லை.
-
-----------------------------
இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக