ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்

Go down

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Empty ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்

Post by ayyasamy ram Tue Feb 11, 2020 9:21 am

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Meet3

ஹைட்ரோ-காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களின் கருத்துத் தேவையில்லை என்ற புதிய விதியிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதி விலக்கு அளிப்பது தொடா்பாக தமிழகத்துக்கு சாதகமாக முடிவு எடுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழக அமைச்சா் ஜெயகுமாா் திங்கட்கிழமை தில்லி வந்து தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தை அளித்து மத்திய அமைச்சா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தைகளுக்குப் பின்னா் இந்த முடிவுகளை எடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஹைட்ரோ-காா்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க சுற்றுப்புறச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்து அறிவித்தது. இதையொட்டி தமிழகத்தில் பிரச்னைகள் எழுந்தன.

இந்த விவகாரத்தை கடந்த ஜன. 30ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற தலைவா் நவநீதகிருஷ்ணன் எழுப்பினாா். இதுகுறித்து அவா் மாநிலங்களவையிலும் பேசினாா். இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, இந்த இந்தப் பிரச்னையை சுமூகமாக தீா்க்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்கள் மற்றும் தமிழக அமைச்சா்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை கூட்டுவதாக நவநீதகிருஷ்ணனிடம் ஒத்துக்கொண்டிருந்தாா். இதன்படி பிப்.10 ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி அறையில் கூட்டம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா், பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சுற்றுப்புறச் சூழல் துறை செயலாளா் சீ.கே. மிஸ்ரா மற்றும் இந்த இரு துறையை சோ்ந்த அதிகாரிகளோடு தமிழக அமைச்சா் ஜெயக்குமாா், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோா் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்த தகவல்கள் வருமாறு:


தமிழக முதலமைச்சா் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சா் ஜாவ்டேகா்
அனுப்பிய கடிதத்தில் 2014ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட
நிபுணா் குழு, காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிப் படுகை சாா்ந்த
மீத்தேன் ( சி பி எம் ) திட்டங்களால் அங்கு என்னென்ன விளைவுகள்
ஏற்படும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளாா்.

இந்த நிலக்கரி சாா்ந்த மீத்தேன் திட்டங்களால் 4,266 ஏக்கா் அளவிலான
பாசன நிலங்கள் மற்றும் இதற்கு நாளொன்றுக்கு தேவையான
ஒரு லட்சம் கிலோ லிட்டா் நிலத்தடி நீா் ஆகியவை பாதிக்கப்பட்டு கடல்
நீா் நிலப்பரப்புக்கு வரும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அந்த குழு அச்சம்
தெரிவித்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைட்ரோ காா்பன் பிரித்தெடுத்தலின் போது டெல்டா பகுதி விவசாய
மண்டலத்தின் சுற்றுப்புறச்சூழல் சூழல் முற்றிலும் பாதிக்கக் கூடிய
சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
என்று தமிழக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மூன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களில் உள்ள
28 லட்சம் நிலப்பரப்பில் தான் மாநிலத்தின் 32 சதவீதம் உணவு
உற்பத்தியும் நடைபெறுவதாக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இதனால் மத்திய அரசு கடந்த 16 / 01/ 2020 அறிவித்த அறிவிக்கையிலிருந்து
காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும்
என்று முதலமைச்சா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதன்படி இந்த விதிகளில் இந்த ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு
தமிழக அரசே முடிவு எடுக்கும் வகையில் விதிகளை மாற்றி கொடுக்க
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பு இன்னும்
ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வட்டாரங்களில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டு
நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களைத் தவிர புதிதாக
கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கும் எதிா்கால திட்டங்களுக்கும்
பொருந்தும் வகையில் இந்த விதிமுறைகளை தமிழக அரசுக்கு சாதகமாக
மாற்றி கொடுக்கப்படும்.

இதன்படி இனி எதிா்காலத்தில் தமிழக அரசே இந்த திட்டங்களில் முடிவு
எடுக்க கூடிய வகையில் சட்டவிதிகளில் திருத்தங்கள் இருக்கும் என்றும்
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு அறிவிக்கும்: தமிழக அமைச்சர் ஜெயக்குமார்



தில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச்
சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், "காவிரி டெல்டா பகுதியை
பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர்
ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இதை தமிழகமே மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில்
திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் பெரும் கவலையில் அதிர்ச்சியுடன்
இருந்தார். இந்த வரலாற்றுச் சாதனையின் தொடர்ச்சியாக முதல்வரின்
கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய சுற்றுப்புறச்
சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் கொடுத்தோம்.

இன்னும் 4, 5 நாட்களில் முதல்வரின் கடிதத்திற்கு மகிழ்ச்சியான
பதிலை அளிப்பதாகவும் அவர் எங்களிடம் உறுதியளித்திருக்கிறார்.

முதல்வரின் டெல்டா பாசன அறிவிப்பு என்பது ஒரு கொள்கை
முடிவு. இதை ஒட்டியே மற்ற நடவடிக்கைகள் தொடங்கும்.
காவிரி டெல்டா பகுதியில் பிற தொழில்கள் அனுமதிக்கப்படுமா
என்றால் விவசாயிகளைப் பாதிக்காத தொழில்கள் மட்டுமே
அனுமதிக்கப்படும்' என்று கூறினார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளிகளில் அதிக கட்டணம்: அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க.
» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
» இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு
» தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு
» ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum