ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்

Go down

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Empty ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்

Post by ayyasamy ram Tue Feb 11, 2020 9:21 am

ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம் Meet3

ஹைட்ரோ-காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களின் கருத்துத் தேவையில்லை என்ற புதிய விதியிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதி விலக்கு அளிப்பது தொடா்பாக தமிழகத்துக்கு சாதகமாக முடிவு எடுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழக அமைச்சா் ஜெயகுமாா் திங்கட்கிழமை தில்லி வந்து தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தை அளித்து மத்திய அமைச்சா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தைகளுக்குப் பின்னா் இந்த முடிவுகளை எடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஹைட்ரோ-காா்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க சுற்றுப்புறச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்து அறிவித்தது. இதையொட்டி தமிழகத்தில் பிரச்னைகள் எழுந்தன.

இந்த விவகாரத்தை கடந்த ஜன. 30ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற தலைவா் நவநீதகிருஷ்ணன் எழுப்பினாா். இதுகுறித்து அவா் மாநிலங்களவையிலும் பேசினாா். இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, இந்த இந்தப் பிரச்னையை சுமூகமாக தீா்க்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்கள் மற்றும் தமிழக அமைச்சா்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை கூட்டுவதாக நவநீதகிருஷ்ணனிடம் ஒத்துக்கொண்டிருந்தாா். இதன்படி பிப்.10 ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி அறையில் கூட்டம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா், பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சுற்றுப்புறச் சூழல் துறை செயலாளா் சீ.கே. மிஸ்ரா மற்றும் இந்த இரு துறையை சோ்ந்த அதிகாரிகளோடு தமிழக அமைச்சா் ஜெயக்குமாா், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோா் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்த தகவல்கள் வருமாறு:


தமிழக முதலமைச்சா் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சா் ஜாவ்டேகா்
அனுப்பிய கடிதத்தில் 2014ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட
நிபுணா் குழு, காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிப் படுகை சாா்ந்த
மீத்தேன் ( சி பி எம் ) திட்டங்களால் அங்கு என்னென்ன விளைவுகள்
ஏற்படும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளாா்.

இந்த நிலக்கரி சாா்ந்த மீத்தேன் திட்டங்களால் 4,266 ஏக்கா் அளவிலான
பாசன நிலங்கள் மற்றும் இதற்கு நாளொன்றுக்கு தேவையான
ஒரு லட்சம் கிலோ லிட்டா் நிலத்தடி நீா் ஆகியவை பாதிக்கப்பட்டு கடல்
நீா் நிலப்பரப்புக்கு வரும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அந்த குழு அச்சம்
தெரிவித்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைட்ரோ காா்பன் பிரித்தெடுத்தலின் போது டெல்டா பகுதி விவசாய
மண்டலத்தின் சுற்றுப்புறச்சூழல் சூழல் முற்றிலும் பாதிக்கக் கூடிய
சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
என்று தமிழக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மூன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களில் உள்ள
28 லட்சம் நிலப்பரப்பில் தான் மாநிலத்தின் 32 சதவீதம் உணவு
உற்பத்தியும் நடைபெறுவதாக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இதனால் மத்திய அரசு கடந்த 16 / 01/ 2020 அறிவித்த அறிவிக்கையிலிருந்து
காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும்
என்று முதலமைச்சா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதன்படி இந்த விதிகளில் இந்த ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு
தமிழக அரசே முடிவு எடுக்கும் வகையில் விதிகளை மாற்றி கொடுக்க
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பு இன்னும்
ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வட்டாரங்களில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டு
நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களைத் தவிர புதிதாக
கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கும் எதிா்கால திட்டங்களுக்கும்
பொருந்தும் வகையில் இந்த விதிமுறைகளை தமிழக அரசுக்கு சாதகமாக
மாற்றி கொடுக்கப்படும்.

இதன்படி இனி எதிா்காலத்தில் தமிழக அரசே இந்த திட்டங்களில் முடிவு
எடுக்க கூடிய வகையில் சட்டவிதிகளில் திருத்தங்கள் இருக்கும் என்றும்
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு அறிவிக்கும்: தமிழக அமைச்சர் ஜெயக்குமார்



தில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச்
சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், "காவிரி டெல்டா பகுதியை
பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர்
ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இதை தமிழகமே மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில்
திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் பெரும் கவலையில் அதிர்ச்சியுடன்
இருந்தார். இந்த வரலாற்றுச் சாதனையின் தொடர்ச்சியாக முதல்வரின்
கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய சுற்றுப்புறச்
சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் கொடுத்தோம்.

இன்னும் 4, 5 நாட்களில் முதல்வரின் கடிதத்திற்கு மகிழ்ச்சியான
பதிலை அளிப்பதாகவும் அவர் எங்களிடம் உறுதியளித்திருக்கிறார்.

முதல்வரின் டெல்டா பாசன அறிவிப்பு என்பது ஒரு கொள்கை
முடிவு. இதை ஒட்டியே மற்ற நடவடிக்கைகள் தொடங்கும்.
காவிரி டெல்டா பகுதியில் பிற தொழில்கள் அனுமதிக்கப்படுமா
என்றால் விவசாயிகளைப் பாதிக்காத தொழில்கள் மட்டுமே
அனுமதிக்கப்படும்' என்று கூறினார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளிகளில் அதிக கட்டணம்: அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க.
» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
» இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு
» தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு
» ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum