Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லென்னி புரூஸ் பொன்மொழிகள்
2 posters
Page 1 of 1
லென்னி புரூஸ் பொன்மொழிகள்
வார்த்தை ஒன்று தடை செய்யப் பட்டால் அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது. அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது. அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது.
'The word 's suppression gives it the power, the violence, the viciousness. '
*
ஒவ்வொரு நாளும் மக்கள் சர்ச்சிலிருந்து வெளியேறி கடவுளிடம் மீண்டும் தஞ்சமடைகிறார்கள்.
*
இந்த சின்ன நகரங்களை நான் வெறுக்கிறேன். அந்த நகரங்களின் பூங்காவில் இருக்கும் பீரங்கியைப் பார்த்தபின்னால், அங்கு செய்ய ஒன்றுமில்லை.
*
என்னுடைய பள்ளிக்கூடத்தை கண்டிப்பான பள்ளிக்கூடம் என்று சொல்லமாட்டேன். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்திலும் ஒரு பிணம் அறுக்கும் மருத்துவர் போல ஒருவர் இருந்தார். 'நான் வளர்ந்ததும் என்ன செய்வேன் ? ' என்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறோம்.
*
நல்லவேளை யேசு கிரிஸ்து 2000 வருடத்திற்கு முன்னால் சிலுவையில் அறையப் பட்டு செத்தார். யேசு கிரிஸ்து 20 வருடங்களுக்கு முன்னால் இறந்திருந்தால், கத்தோலிக்க பள்ளிச்சிறுவர்கள் தங்கள் கழுத்துக்களில் சிலுவைக்குப் பதிலாக மின்சார நாற்காலியை அணிந்து கொண்டு திரிவார்கள்.
*
நீதியின் வளாகங்களில் நீதி வளாகங்களில்தான் இருக்கிறது
*
நீ ஏன் யேசு கிரிஸ்துவைக் கொலை செய்தாய் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை.. ஒருவேளை இது நான் பங்கு பெற்ற ,கட்டுக்கு மீறிச் சென்றுவிட்ட ஒரு பார்ட்டியில் நடந்திருக்கலாம். 'அவர் ஒரு மருத்துவராக ஆக விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் அவரைக் கொன்றோம் '
(யூதர்கள் பெரும்பாலோர் அமெரிக்காவில் மருத்துவர்கள் . அதைக் கிண்டல் செய்வது இந்த வாசகம் . - மொ பெ)
*
என்னுடைய எல்லா நகைச்சுவையும் அழிவையும் அவநம்பிக்கையையுமே அடிப்படையாகக் கொண்டது. உலகம் வியாதியும் வன்முறையும் இல்லாததாக இருந்திருந்தால், நான் ஜே எட்கார் ஹ்ஊவர் பின்னால் ரொட்டி வாங்கும் வரிசையில் நின்று கொண்டிருப்பேன்.
(எட்கார் ஹூவர் அமெரிக்க உளவுத் துறையின் தலைவராய் இருந்தவர். கடுமையான வலதுசாரி - மொபெ)
*
அங்கதம் என்பது சோகநாடகம் - காலப் போக்கில் அடையும் இடம். காலம் போகப் போக எதுவும் அங்கதத்திற்கு உகந்ததாய் ஆகிவிடும். நினைத்துப் பார்த்தால் இது ரொம்ப அபத்தம் தான்.
*
இடதுசாரிகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறார்கள் - மக்களைத் தான் புரிந்துகொள்வதில்லை.
*
உலகத்திலேயே உண்மையான கலை என்பது சிரிப்புத்தான். நகைச்சுவை பண்ணுவதுதான். இதனை நீங்கள் போலித்தனமாகச் செய்யவே முடியாது. ஒரு மணி நேரத்துக்குள் மூன்றுதடவை போலித்தனமாக சிரிக்க முயன்றுபாருங்களேன். ஹா ஹா ஹா ஹா ஹா... அவர்கள் உங்களை பைத்தியக் கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் விடுவார்கள். உங்களால் சிரிப்பு வராமல் போலியாக தொடர்ந்து சிரிக்கவே முடியாது.
*
நான் இந்த தொழிலில் இருப்பதற்குக் காரணம், ஏன் எல்லா கலைஞர்களும் இந்தத் தொழிலிலிருப்பதற்குக் காரணம் 'அம்மா என்னைப் பார் ' அம்மா உங்களை சிறந்தவன் என்று ஒப்புக்கொள்ளவைப்பதுதான். தெரியுமா ? 'அம்மா என்னைப் பார். அம்மா என்னைப் பார்,, அம்மா என்னைப் பார் ' அம்மா உங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் களைத்துப்போகும் வரைக்கும் கலை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருப்பீர்கள். அம்மா போய்விட்டால் அவ்வளவுதான்.. ப்யூ....
*
காமெடியனின் வேலை பார்வையாளர்களை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு முறை சிரிக்க வைப்பது.
*
'எப்படி இருக்கவேண்டும் ' என்பது எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் மக்கள் அதன்படி நடக்க முயற்சி செய்கிறார்கள். 'எப்படி இருக்கவேண்டும் ' என்பது இல்லை. என்ன இருக்கிறது என்பதுதான் இருக்கிறது.
*
எப்போதுமே 'நான் உன்னைக் காதலிக்கிறேன் ' என்று சொல்வதற்கு இவ்வளவு தரம் தான் சொல்லவேண்டும் என்ற விதி இருந்ததில்லை.
*
லென்னி புரூஸ் (அக்டோபர் 13 1925- ஆகஸ்ட் 3 1966) பிறக்கும்போது லியோனார்ட் ஆல்பிரட் ஷ்னெய்டர் ஆக பிறந்தார். விவாதத்துக்குரிய அங்கதக்காரராகவும் காமெடியனாகவும் 1950-60களில் பிரகாசித்தார். வெறுமே நகைச்சுவைத் துணுக்குகளை மேடையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவர், இப்படிப்பட்ட மேடைக் காமெடியை ஒரு அறிவார்ந்த கலையாக மாற்றியமைத்தார்.
இவரது மேடைக்கலை கதைகளாகவும், சிறு நாடகங்களாகவும், சிறு விவரணைகளாகவும் அவ்வப்போது ஆபாசமாகவும் இருந்தது. இவரது ஆபாசமான பேச்சு அடிக்கடி இவரை காவல்துறை சிறைப்பிடிக்க காரணமாக இருந்தது. இவரது ஆபாசப் பேச்சு வழக்குக்கள் இன்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தின் மைல்கற்களாக அமெரிக்காவில் கருதப் படுகின்றன.
புரூஸின் காமெடி மேடைப்பேச்சு பெரும்பாலும் பாத்ரூம் நகைச்சுவைத் துணுக்குகளோடு ஆரம்பித்தது. 'மனித உடலைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் அருவருப்பு இருக்குமாயின், உடலைப் படைத்தவரிடம் போய் முறையிடுங்கள் ' என்று சொன்னார்.
1961இல் கார்னகி ஹாலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தன்னுடைய மேடைப்பேச்சை நிகழ்த்தினார். இதில் அவர் தனது பாத்ரூம் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டுமின்றி, அரசியல், மதம், சட்டம், இனம், கு கிளக்ஸ் கிளான் (அமெரிக்க கிரிஸ்துவ இனவெறி அமைப்பு), கத்தோலிக்க சர்ச் ஆகிய அனைத்தையும் கலாய்த்தார். அவ்வாறு பேசியதன் பின் , ஒருவருடத்துக்குள் அவர் சான்பிரான்ஸிஸ்கோவில் ஆபாசப்பேச்சுக்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும் கூட, அவர் எந்த மாவட்டத்துக்குள் நுழைந்தாலும், அந்த மாவட்ட போலீஸ் அவரைக் கைது செய்தது. இவரைப் பேச வைக்க கிளப் சொந்தக்காரர்கள் தயங்கியதால், இவர் நகைச்சுவை மேடைப்பேச்சு மூலம் சம்பாதிப்பது கடினமாயிற்று.
தனது மேடைப்பேச்சுக்களில் புரூஸ் தொடர்ந்து, போலீஸ் தன்னை எந்தமாதிரி நடத்தியது என்பதை விவரித்துக்கொண்டே இருந்தார். இதனால் போலீஸ் அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தது. அவரை அடக்க அடக்க, அவர் குறைகூறுவதும் அதிகரித்துக்கொண்டே வந்தது.
புரூஸ் ஹெராயின் உபயோகத்தில் அதிகம் மூழ்கினார். தன்னுடைய ஹாலிவுட் மலைப்பகுதி வீட்டு பாத்ரூமில் ஒரு கையில் ஊசியுடன் இறந்து கிடந்தார். மார்பின் ஓவர்டோஸ் காரணமாக அவர் இறப்பதற்கு முன்னால் அவர் எல்லா அமெரிக்க காமெடி கிளப்களிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அவர் செல்வதற்குக் கூட தடை இருந்தது. அவரது கடைசி நிகழ்ச்சிகள் சுதந்திர கருத்து வெளிப்பாடு நோக்கிய புலம்பல்களாக இருந்தன.
1974இல் வெளிவந்த லென்னி என்ற படத்தில் டஸ்டின் ஹாஃப்மன், புரூஸ் வேடமேற்று வாழ்க்கையை நடித்திருந்தார். இவரது ஞாபகத்தில் பாப் டைலன், ஜான் லென்னன், ரெம் ஆகியோர் பல பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
***
'The word 's suppression gives it the power, the violence, the viciousness. '
*
ஒவ்வொரு நாளும் மக்கள் சர்ச்சிலிருந்து வெளியேறி கடவுளிடம் மீண்டும் தஞ்சமடைகிறார்கள்.
*
இந்த சின்ன நகரங்களை நான் வெறுக்கிறேன். அந்த நகரங்களின் பூங்காவில் இருக்கும் பீரங்கியைப் பார்த்தபின்னால், அங்கு செய்ய ஒன்றுமில்லை.
*
என்னுடைய பள்ளிக்கூடத்தை கண்டிப்பான பள்ளிக்கூடம் என்று சொல்லமாட்டேன். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்திலும் ஒரு பிணம் அறுக்கும் மருத்துவர் போல ஒருவர் இருந்தார். 'நான் வளர்ந்ததும் என்ன செய்வேன் ? ' என்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறோம்.
*
நல்லவேளை யேசு கிரிஸ்து 2000 வருடத்திற்கு முன்னால் சிலுவையில் அறையப் பட்டு செத்தார். யேசு கிரிஸ்து 20 வருடங்களுக்கு முன்னால் இறந்திருந்தால், கத்தோலிக்க பள்ளிச்சிறுவர்கள் தங்கள் கழுத்துக்களில் சிலுவைக்குப் பதிலாக மின்சார நாற்காலியை அணிந்து கொண்டு திரிவார்கள்.
*
நீதியின் வளாகங்களில் நீதி வளாகங்களில்தான் இருக்கிறது
*
நீ ஏன் யேசு கிரிஸ்துவைக் கொலை செய்தாய் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை.. ஒருவேளை இது நான் பங்கு பெற்ற ,கட்டுக்கு மீறிச் சென்றுவிட்ட ஒரு பார்ட்டியில் நடந்திருக்கலாம். 'அவர் ஒரு மருத்துவராக ஆக விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் அவரைக் கொன்றோம் '
(யூதர்கள் பெரும்பாலோர் அமெரிக்காவில் மருத்துவர்கள் . அதைக் கிண்டல் செய்வது இந்த வாசகம் . - மொ பெ)
*
என்னுடைய எல்லா நகைச்சுவையும் அழிவையும் அவநம்பிக்கையையுமே அடிப்படையாகக் கொண்டது. உலகம் வியாதியும் வன்முறையும் இல்லாததாக இருந்திருந்தால், நான் ஜே எட்கார் ஹ்ஊவர் பின்னால் ரொட்டி வாங்கும் வரிசையில் நின்று கொண்டிருப்பேன்.
(எட்கார் ஹூவர் அமெரிக்க உளவுத் துறையின் தலைவராய் இருந்தவர். கடுமையான வலதுசாரி - மொபெ)
*
அங்கதம் என்பது சோகநாடகம் - காலப் போக்கில் அடையும் இடம். காலம் போகப் போக எதுவும் அங்கதத்திற்கு உகந்ததாய் ஆகிவிடும். நினைத்துப் பார்த்தால் இது ரொம்ப அபத்தம் தான்.
*
இடதுசாரிகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறார்கள் - மக்களைத் தான் புரிந்துகொள்வதில்லை.
*
உலகத்திலேயே உண்மையான கலை என்பது சிரிப்புத்தான். நகைச்சுவை பண்ணுவதுதான். இதனை நீங்கள் போலித்தனமாகச் செய்யவே முடியாது. ஒரு மணி நேரத்துக்குள் மூன்றுதடவை போலித்தனமாக சிரிக்க முயன்றுபாருங்களேன். ஹா ஹா ஹா ஹா ஹா... அவர்கள் உங்களை பைத்தியக் கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் விடுவார்கள். உங்களால் சிரிப்பு வராமல் போலியாக தொடர்ந்து சிரிக்கவே முடியாது.
*
நான் இந்த தொழிலில் இருப்பதற்குக் காரணம், ஏன் எல்லா கலைஞர்களும் இந்தத் தொழிலிலிருப்பதற்குக் காரணம் 'அம்மா என்னைப் பார் ' அம்மா உங்களை சிறந்தவன் என்று ஒப்புக்கொள்ளவைப்பதுதான். தெரியுமா ? 'அம்மா என்னைப் பார். அம்மா என்னைப் பார்,, அம்மா என்னைப் பார் ' அம்மா உங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் களைத்துப்போகும் வரைக்கும் கலை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருப்பீர்கள். அம்மா போய்விட்டால் அவ்வளவுதான்.. ப்யூ....
*
காமெடியனின் வேலை பார்வையாளர்களை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு முறை சிரிக்க வைப்பது.
*
'எப்படி இருக்கவேண்டும் ' என்பது எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் மக்கள் அதன்படி நடக்க முயற்சி செய்கிறார்கள். 'எப்படி இருக்கவேண்டும் ' என்பது இல்லை. என்ன இருக்கிறது என்பதுதான் இருக்கிறது.
*
எப்போதுமே 'நான் உன்னைக் காதலிக்கிறேன் ' என்று சொல்வதற்கு இவ்வளவு தரம் தான் சொல்லவேண்டும் என்ற விதி இருந்ததில்லை.
*
லென்னி புரூஸ் (அக்டோபர் 13 1925- ஆகஸ்ட் 3 1966) பிறக்கும்போது லியோனார்ட் ஆல்பிரட் ஷ்னெய்டர் ஆக பிறந்தார். விவாதத்துக்குரிய அங்கதக்காரராகவும் காமெடியனாகவும் 1950-60களில் பிரகாசித்தார். வெறுமே நகைச்சுவைத் துணுக்குகளை மேடையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவர், இப்படிப்பட்ட மேடைக் காமெடியை ஒரு அறிவார்ந்த கலையாக மாற்றியமைத்தார்.
இவரது மேடைக்கலை கதைகளாகவும், சிறு நாடகங்களாகவும், சிறு விவரணைகளாகவும் அவ்வப்போது ஆபாசமாகவும் இருந்தது. இவரது ஆபாசமான பேச்சு அடிக்கடி இவரை காவல்துறை சிறைப்பிடிக்க காரணமாக இருந்தது. இவரது ஆபாசப் பேச்சு வழக்குக்கள் இன்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தின் மைல்கற்களாக அமெரிக்காவில் கருதப் படுகின்றன.
புரூஸின் காமெடி மேடைப்பேச்சு பெரும்பாலும் பாத்ரூம் நகைச்சுவைத் துணுக்குகளோடு ஆரம்பித்தது. 'மனித உடலைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் அருவருப்பு இருக்குமாயின், உடலைப் படைத்தவரிடம் போய் முறையிடுங்கள் ' என்று சொன்னார்.
1961இல் கார்னகி ஹாலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தன்னுடைய மேடைப்பேச்சை நிகழ்த்தினார். இதில் அவர் தனது பாத்ரூம் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டுமின்றி, அரசியல், மதம், சட்டம், இனம், கு கிளக்ஸ் கிளான் (அமெரிக்க கிரிஸ்துவ இனவெறி அமைப்பு), கத்தோலிக்க சர்ச் ஆகிய அனைத்தையும் கலாய்த்தார். அவ்வாறு பேசியதன் பின் , ஒருவருடத்துக்குள் அவர் சான்பிரான்ஸிஸ்கோவில் ஆபாசப்பேச்சுக்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும் கூட, அவர் எந்த மாவட்டத்துக்குள் நுழைந்தாலும், அந்த மாவட்ட போலீஸ் அவரைக் கைது செய்தது. இவரைப் பேச வைக்க கிளப் சொந்தக்காரர்கள் தயங்கியதால், இவர் நகைச்சுவை மேடைப்பேச்சு மூலம் சம்பாதிப்பது கடினமாயிற்று.
தனது மேடைப்பேச்சுக்களில் புரூஸ் தொடர்ந்து, போலீஸ் தன்னை எந்தமாதிரி நடத்தியது என்பதை விவரித்துக்கொண்டே இருந்தார். இதனால் போலீஸ் அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தது. அவரை அடக்க அடக்க, அவர் குறைகூறுவதும் அதிகரித்துக்கொண்டே வந்தது.
புரூஸ் ஹெராயின் உபயோகத்தில் அதிகம் மூழ்கினார். தன்னுடைய ஹாலிவுட் மலைப்பகுதி வீட்டு பாத்ரூமில் ஒரு கையில் ஊசியுடன் இறந்து கிடந்தார். மார்பின் ஓவர்டோஸ் காரணமாக அவர் இறப்பதற்கு முன்னால் அவர் எல்லா அமெரிக்க காமெடி கிளப்களிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அவர் செல்வதற்குக் கூட தடை இருந்தது. அவரது கடைசி நிகழ்ச்சிகள் சுதந்திர கருத்து வெளிப்பாடு நோக்கிய புலம்பல்களாக இருந்தன.
1974இல் வெளிவந்த லென்னி என்ற படத்தில் டஸ்டின் ஹாஃப்மன், புரூஸ் வேடமேற்று வாழ்க்கையை நடித்திருந்தார். இவரது ஞாபகத்தில் பாப் டைலன், ஜான் லென்னன், ரெம் ஆகியோர் பல பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
***
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: லென்னி புரூஸ் பொன்மொழிகள்
நம் வேலையே இணையத்தில் உலவுதல்தானே!!! அப்பொழுது கண்ணில் படும் சிறப்பான கட்டுரைகளை ஈகரைக்கு நகர்த்தி வந்துவிடுவோம்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: லென்னி புரூஸ் பொன்மொழிகள்
உங்களின் பாராட்டுக்களால் எப்பொழுது எனக்கும் உல்லாசம் உற்சாகம் தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» புரூஸ் லீ எப்படி இறந்தார்?
» புரூஸ் லீ பற்றிய தகவல் !!!
» சரித்திர நாயகர்கள் 1. புரூஸ் லீ
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன்
» புரூஸ் லீ பற்றிய தகவல் !!!
» சரித்திர நாயகர்கள் 1. புரூஸ் லீ
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|