Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை,
தற்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக
இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011 - 2016-ம் ஆண்டில்
அ.தி.மு.க.வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி
வகித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை அம்பத்தூரை
சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை
மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் போக்குவரத்துத்
துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம்
ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார்
செய்யப்பட்டது.
பின்னர் சென்னை ஐகோர்ட்டு பரிந்துரையின் பேரில் போலீசார்
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். இதையடுத்து
செந்தில்பாலாஜி, பாஸ்கர் கேசவன் உள்பட 12 பேர் மீது நம்பிக்கை
மோசடி, ஏமாற்றுதல் உள்பட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை எழும்பூர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக
சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி கடந்த 2017-ம் ஆண்டு
முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனையுடன்
முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த மோசடி வழக்கு எந்தவித முன்னேற்றம் எதுவும்
இல்லாமல் இருந்தது.
---
தற்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக
இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011 - 2016-ம் ஆண்டில்
அ.தி.மு.க.வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி
வகித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை அம்பத்தூரை
சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை
மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் போக்குவரத்துத்
துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம்
ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார்
செய்யப்பட்டது.
பின்னர் சென்னை ஐகோர்ட்டு பரிந்துரையின் பேரில் போலீசார்
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். இதையடுத்து
செந்தில்பாலாஜி, பாஸ்கர் கேசவன் உள்பட 12 பேர் மீது நம்பிக்கை
மோசடி, ஏமாற்றுதல் உள்பட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை எழும்பூர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக
சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி கடந்த 2017-ம் ஆண்டு
முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனையுடன்
முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த மோசடி வழக்கு எந்தவித முன்னேற்றம் எதுவும்
இல்லாமல் இருந்தது.
---
Re: செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார்
என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல்
செய்து இருந்தார். அந்த மனுவில், எழும்பூர் கோர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி மற்றும்
வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் பெயர்கள் இடம்
பெறவில்லை. எனவே உரிய முறையில் விசாரணை நடத்திட
உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி
மீதான மோசடி வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
6 மாதத்துக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய
வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த நவம்பர்
மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவையடுத்து செந்தில்பாலாஜி மீதான
மோசடி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர்
சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை
மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டுக்கு
வந்தனர். வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டி கிடந்தது.
இதையடுத்து அவருடைய வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கக்
கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் புகாரில்
தன்னுடைய பெயர் இல்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணை
தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்
எனக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக என்னை கைது செய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி நீதிபதி
என்.சேஷசாயி முன் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி
விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார். வழக்கை இன்று
விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும்
வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.
அதே சமயம் ஓரிரு நாளில் முன் ஜாமீன் வழக்கில் இடைக்கால உத்தரவு
பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
-
------------------------
தினத்தந்தி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» செந்தில் பாலாஜியை கைது; அரசியல் முதல் சமரசம் வரை, வேலை மோசடி வழக்கின் முழு பின்னணி
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» ‘கரோனில்’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலிக்கு இடைக்காலத் தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» 16 வயது மாணவி நீட் தேர்வு எழுத முடியுமா..? சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு -
» செந்தில் பாலாஜியை கைது; அரசியல் முதல் சமரசம் வரை, வேலை மோசடி வழக்கின் முழு பின்னணி
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» ‘கரோனில்’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலிக்கு இடைக்காலத் தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» 16 வயது மாணவி நீட் தேர்வு எழுத முடியுமா..? சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|