புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
19 Posts - 3%
prajai
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_m10தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:11 am

தியாகம் போற்றுவோம் இன்று தியாகிகள் தினம் Tamil_News_large_2468892

இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை
தந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும்
விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாள்
(ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய
தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இந்த நாளின் நோக்கம்.

''தண்ணீர் விட்டா வளர்த்தோம்
சர்வேசா
இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ'

என்பார் மகாகவி பாரதி.
பல்வேறு தியாகங்களால் வளர்த்த சுதந்திரப் பயிரை
பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நமது
கடமை.

அகிம்சை வழியில்


“அவர்கள் முதலில் வாள்கள் கொண்டு வந்தார்கள்.
நாங்கள் துப்பாக்கிகள் கொண்டு அவர்களை வீழ்த்தினோம்.
அவர்கள் துப்பாக்கி பயிற்சி பெற்று வந்தார்கள். நாங்கள்
வெடிகுண்டுகளால் தாக்கினோம்.

அவர்கள் வெடிகுண்டுகள் வீசினார்கள். நாங்கள் பீரங்கி
கொண்டு அவர்களை வீழ்த்தினோம். இறுதியாக அவர்கள்
அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தினார்கள். இதுவரை உலகிலே
அகிம்சையை வெல்ல எந்த ஆயுதமும்
கண்டுபிடிக்கப்படவில்லை. நாங்கள் வெளியேற
வேண்டியதாகிவிட்டது,''என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர்
நமது சுதந்திரப் போர் குறித்து பேசியதாக செய்தி உண்டு.

அந்த அகிம்சைதான் மகாத்மாவை உலகின் தலைவராக
மாற்றியது. எல்லோரிடமும் எளிதாக கொண்டு சேர்த்தது.
இந்தியாவின் தேசத் தந்தை என்று போற்றப்படும் அளவுக்கு
அவரை உயர்த்தியது.

மறக்க கூடாத வரலாறு

அகிம்சை என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத
மகாத்மாவையும், சுதந்திரம் அடைவதற்கு முன்னரே
ஆனந்த சுதந்திரம் குறித்தும், சுதந்திரத்திற்கு பின்னர்
இங்கே செய்ய வேண்டியவற்றை தனது கனவுகளாக பதிவு
செய்திட்ட பாரதியையும்,

பரங்கியருக்கு எதிராகவே கப்பல்விட்டு, தனது சொத்துக்களை
எல்லாம் இழந்து, தனிமைச் சிறையில் செக்கிழுத்து, கல்
உடைத்து வாடியபோதும் தன்மானத்தை இழக்காது விடுதலையை
நோக்கியே நின்ற கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி.,யும்,
சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கம்பளிகளை வெறும்
கைகளால் உரித்து, தொழுநோய்க்கு ஆட்பட்ட சுப்ரமணியசிவாவின்
தியாகமும் சாதாரணமல்ல.

அயல் நாட்டில் இருந்து படை திரட்டி பரங்கியரை பதறவைத்த
சுபாஷ்சந்திர போஸ், ஆவேசம் கொண்ட இளைய பட்டாளமாக
நின்ற மாவீரன் பகத்சிங் , வீரவாஞ்சி நாதன், கொடியினை
கடைசிவரை கீழே போடாமல் தனது இன்னுயிர் ஈந்த கொடிகாத்த
குமரன், இந்தியாவை குறைத்து மதிப்பிட்ட ஜெர்மனியின்
ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்து, ஜெய்ஹிந்த் என்ற சொல்லை
இந்திய திருநாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த ஜெய்ஹிந்த்
செண்பகராமன்,
மாவீரன் உத்தம்சிங் என்ற தியாக வரலாறுகளை எளிதாக மறந்து
விட இயலாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:12 am

நோக்கம் ஒன்றே



இந்த தியாக வரலாறு எல்லாம் பாடப்புத்தகத்தில் படித்துவிட்டு தேர்வுகள் எழுதவோ அல்லது சுதந்திர தினம், குடியரசு தினம், தியாகிகள் தினம் அன்று நினைத்து போற்றவோ மட்டுமல்ல. நாள்தோறும் நம்மை நிம்மதியாக வாழவைக்கும் இந்த வாழ்வை நமக்காக வழங்கியவர்கள் அந்த பெரியவர்கள். அவர்களில் யாருமே தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறைக்கு சென்றவர்களோ அல்லது இன்னுயிர் ஈந்தவர்களோ அல்ல. அனைவரின் நோக்கமும்
ஒன்றுதான்; அதுவே நமது தேச விடுதலை ஆகும்

'பாரத நாடு பழம் பெரும் நாடு
நீரதன் புதல்வர் நின் நினைவகற்றாதீர்'
என்ற பாரதியின் வரிகள் நமது இதயத்தில் இருக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நாம் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த நிலையிலும் எந்த சூழலிலும் நாம் இந்த தேச நலனில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. விடுதலைக்கு போராடிய யாரும் தனக்கான ஜாதி, மத, இன அடையாளங்களை துாக்கி எறிந்து இந்தியராகவே நின்றனர்.
அவர்களின் விருப்பான ஒரு தேசத்தை நாம் படைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
'இமயச் சாரலில் ஒருவன் இருமினால்குமரி வாழ்பவன் மருந்துகொண்டு ஓடுவான்'
என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். இங்கே நமக்கான அடையாளம் நமது தேசம் மட்டுமே. தேசத்தில் இருப்பவர்கள் அனைவருமே நமது உறவுகள்தான்.
தேசத்தையும் தாண்டி மனிதம் வளர்த்த நாடு நமது நாடு.



கருத்து சுதந்திரம்

உலகிலேயே நமது தேசத்தைப் போல கருத்துச் சுதந்திரம் பெற்ற நாடு வேறு எதுவும் இருந்திட இயலாது. இனம், மொழி, கலாசாரம் தாண்டி மனிதம் போற்றிய மகத்தான பூமி இது.தேசத்தின் வளர்ச்சி என்பது தனிமனித ஒழுக்கத்தில் இருந்தே தொடங்குகிறது. இங்கே நடைபெறும்
ஒவ்வொரு சமூக அவலங்களுக்கும் காரணம் தனிமனித குறைபாடுகளே. இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் எழுதிய பெரியவர்கள், அனைவருக்குமான உரிமைகளை காக்கும்
வகையில்தான் இந்த தேசத்தை வடிவமைத்து உள்ளார்கள்.

ஒரு தனி மனிதன் அரசாங்கத்தையே கேள்வி கேட்க முடியும் என்ற உச்சபட்ச ஜனநாயகம் உள்ள தேசம் நமது தேசம்.உறைந்து போகும் குளிர், கடுமையான வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்துவரும் ராணுவ வீரர்கள் மட்டுமே தேசத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்தை
உதறிவிட்டு, எல்லோருக்கும் இந்த தேசத்தின் மீது உரிமை இருப்பதுபோலவே, தேசம்
சிதறாமல் காக்க வேண்டிய கடமையும் இருக்கிறது என்பதை உணரவேண்டும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:13 am

இளையதலைமுறைக்கு

பெருமைமிகு இந்த தேசத்தை உருவாக்கிட தனது இன்னுயிர் தந்த தியாக வரலாறுகளை, இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நாம் பெற்ற சுதந்திரம் எளிதாக வந்தது இல்லை என்பதை உணர்த்த வேண்டும். இன்றைய சூழலில் நமது தேசம் எதிர்கொண்டு
இருக்கும் பிரச்னைகளை அவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அதை அடைவதற்கு அகிம்சை முறையில் போராடுவதற்கும் அவர்களை பழக்கப்படுத்திட வேண்டும்

தேசத்தின் வளர்ச்சியை விரும்பும் அனைவருமே உள்நாட்டு கயவர்களிடம் இருந்து தேசத்தைக் காக்கும் சீருடை அணியாத ராணுவ வீரர்கள்தாம் என்பதை மனதிலே இருத்த வேண்டும்.

தேசத்திற்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் நடைபெறும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை மன உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும். ஜாதி, மத, மொழி. இனத்தால் நமது தேசம் பிளவுபட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
பெருமிதம் கொள்வோம்

தேசம் பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம் இந்த தேசத்திற்காக உயிர்நீத்த, உடமை இழந்த தியாகிகளின் வாழ்வு நம் கண்முன் வர வேண்டும். எந்த தேசத்திற்கும் இல்லாத பெருமையான தேசத்தில் பிறந்துள்ளோம் என்ற பெருமிதம் மட்டும் கொள்ளாமல் அதை வரும்
தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் உன்னத பணியினை செய்யும் ஒப்பற்ற மனிதராக
மாறவேண்டும்.

எந்த சூழலிலும் தேசத்திற்கு எதிராக செயல்களில் ஈடுபடுவதும், ஈடுபடுபவர்களை ஆதரிப்பதும் நமது நாட்டிற்கும், நாட்டிற்காக தன்னை இழந்த தியாகிகளுக்கும் நாம் செய்யும் துரோகம் என்று உணர வேண்டும்

தேசம் என்பது வெறும் வரைபடமல்ல
அது நம் ஒவ்வொருவரின் இதயம்!

-முனைவர். நா. சங்கரராமன்
எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம்

நன்றி-தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 30, 2020 11:57 am

Code:

தேசத்திற்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் நடைபெறும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை மன உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும். ஜாதி, மத, மொழி. இனத்தால் நமது தேசம் பிளவுபட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
பெருமிதம் கொள்வோம்

தேசம் பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம் இந்த தேசத்திற்காக உயிர்நீத்த, உடமை இழந்த தியாகிகளின் வாழ்வு நம் கண்முன் வர வேண்டும். எந்த தேசத்திற்கும் இல்லாத பெருமையான தேசத்தில் பிறந்துள்ளோம் என்ற பெருமிதம் மட்டும் கொள்ளாமல் அதை வரும்
தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் உன்னத பணியினை செய்யும் ஒப்பற்ற மனிதராக
மாறவேண்டும்.

எந்த சூழலிலும் தேசத்திற்கு எதிராக செயல்களில் ஈடுபடுவதும், ஈடுபடுபவர்களை ஆதரிப்பதும் நமது நாட்டிற்கும், நாட்டிற்காக தன்னை இழந்த தியாகிகளுக்கும் நாம் செய்யும் துரோகம் என்று உணர வேண்டும்

தேசம் என்பது வெறும் வரைபடமல்ல
அது நம் ஒவ்வொருவரின் இதயம்!





அனைத்தும் அருமையான வார்த்தைகள் மனதை தொட்ட வரிகள் .நிச்சயம் இந்த தியாகிகளை நினைவில் கொள்வோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக