புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 14, 2018 10:18 am

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! 1AtDlPRcahsdTBn9KjqA+pongal1

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! WWIuK9CKQuCqzBbfguyS+pongal2

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் !

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர்
உழவர்கள் ஆண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் , மீனவர்கள் ஆண்டு சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும்,கணக்கிட்டனர் கூறப்படுகிறது .

சவுரமானக் கணக்கின்படி, ஓராண்டில், இரண்டு விஷுக்கள், இரண்டு அயனங்கள் வருகின்றன. ஆண்டை, ஒரு வட்டமாக கணக்கிட்டால், முதல் 90 டிகிரி, சித்திரை விஷூ; அடுத்தது ஆடி அயனம்; மூன்றாவது ஐப்பசி விஷூ; நான்காவது மகர சங்கரமணம் அல்லது தைப் பிறப்பு.
திருவலஞ்சுழி தலத்தில் உள்ள ராஜராஜன் காலத்து கல்வெட்டில், இரண்டு விஷூக்களும், இரண்டு அயனங்களும் முதன்முறையாக குறிப்பிடப்படுகின்றன வேதத்திலும், உத்தராயனத்தை ஒளிக்காலம் எனவும், தட்சிணாயனத்தை இருட்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார்.
பண்டைத் தமிழர்கள் , தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தங்களது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
ஒரு நாள் பொழுதை , அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு
பொழுதுகளாகவும், ஆண்டை ஆறு பருவங்களாகவும் பகுத்த
பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை
இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றனர்
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய
புத்தாண்டு தினத்தை , தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும்,
கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும்
கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய
திருநாளாகும்!
காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை
போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது)
தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர்
அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், பரிசுகள் பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்
பொங்கல் பொங்குச்சா என்று பலநாட்கள் கேட்டு பரிசு பெறும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உள்ளது .

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள்
புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது
மேலும் பண்பாட்டுக்கலப்பால் சாய்வைத்திரு நாளாக மாறிப்போன பொங்கலுக்கு
மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்றுஇரவு நிச்சயமாக அசைவம் சாப்பிடும் அனைத்து தமிழ்சரும் அத்தனைவித அசைவப்பொருளையும் சமைத்து படைத்து உண்டு மகிழ்வர்
அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில்
சமைக்கப்படும் படையலின் போது , புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின

பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும்; குறிப்பாக தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாற்றைப் பார்க்க வேண்டுமானால் நாம் சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 நோக்கி செல்ல வேண்டும். இந்த பண்டிகையை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என நம்புகின்றனர்சங்க காலத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர்.

பல்லவர்களின் ஆட்சி காலத்தில் (கி.பி. 400-கி.பி.800) இது மிகவும் முக்கியமான பண்டிகையாக விளங்கியது. தமிழ் மாதமான மார்கழியின் போது இது கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டி இளம் பெண்கள் வேண்டுவார்கள். இந்த மாதம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பார்கள். தங்கள் முடிக்கு எண்ணெயிட்டு கொள்ள மாட்டார்கள். மேலும் பேசும் போது கடுமையான சொல்லை பயன்படுத்த மாட்டார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் தெய்வத்தின் சிலையை அவர்கள் வணங்கி வந்தார்கள். தை மாதத்தின் முதல் நாள் தங்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள். தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
குலோத்துங்கா என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலத்தைப் பரிசாக பொங்கல் பண்டிகையின் போது அளித்தார் என திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இலக்கியங்களிலும் , வரலாற்றிலேயும் கைத்திருநாள் கொண்டாடப்பட்டது குறித்து ஆதாரங்கள் கிடைக்கின்றன .
தற்போது நடைபெறும் நடைமுறை நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் புத்தாண்டுக்கு கொண்டாட்டத்தை ஒத்துப்போகின்றன .
ஆனால் நேரடியாக தைத் திருநாள் தான் தமிழர்களின் புத்தாண்டின் தொடக்கம் என தெரிவிக்கும் ஆதாரங்கள் இதுவரை கிட்டவில்லை எனவேத தெரிகிறது

எனவேதான் 1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது.
பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.
“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். என்றார்

இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது?
ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது.
இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” – என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.
“இல்லை – நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.
ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்
மேலும் கிராம தெய்வங்களை , குலதெய்வ வழிபாடும் செய்வதை இன்றும் பொங்கல் வைத்தல் என்றுதான் அழைக்கிறோம் .
பொங்கல் வைப்பது நமது வழிபாட்டு வழக்கம் ,
கல்வெட்டுகளும் அக்கார வடிசல்
வைத்து வழிபட்டதைக் குறிப்பிடுகிறது .
சக்கரைப்பொங்கல் சிறந்த வழிபாட்டு நைவேத்தியம் ஆகும் .
இனிப்பு சுவை சத்துவ குணத்தை வளர்த்து , சிறந்த மனிதனாக வாழ வழிவகுக்கும் பொங்கல் உணவில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் இனிக்கட்டும்
பொங்குக எங்கும் அன்பும் , மகிழ்வும் !
வளமான வாழ்வு பெருகிட வாழ்த்துக்கள் !
அண்ணாமலை சுகுமாரன்
14/1/18

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2018 3:39 pm

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2020 5:03 pm

தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா!
-
சூப்பருங்க சூப்பருங்க
-
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! WWIuK9CKQuCqzBbfguyS+pongal2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 12:01 pm

Code:

தற்போது நடைபெறும் நடைமுறை நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் புத்தாண்டுக்கு கொண்டாட்டத்தை ஒத்துப்போகின்றன .
ஆனால் நேரடியாக தைத் திருநாள் தான் தமிழர்களின் புத்தாண்டின் தொடக்கம் என தெரிவிக்கும் ஆதாரங்கள் இதுவரை கிட்டவில்லை எனவேத தெரிகிறது


இதை குழுப்ப வேண்டாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக