ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா?

Go down

அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Empty அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா?

Post by Guest Tue Jan 14, 2020 2:37 pm


Dr. Joseph F Montague. (குடல், வயிறு சம்பந்தமான நோய்களைக் 
குணப்படுத்தும் ஒரு மருத்துவர். நியு யோர்க்)

அளவுக்கு மீறி அதிக வேலையைச் செய்பவர் என்று நீங்கள் உங்களை நினைத்தால் அதற்குக் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றுதான் காரணமாக 
இருக்கும்.

"நீங்கள் உங்களுக்குப் பொருந்தாத வேலையில் இருக்கிறீர்கள் 
அல்லது அடைய முடியாத லட்சியங்களை மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது நேரத்திற்குச் சாப்பிடும் பழக்கம் இல்லாதவராக  இருந்திருப்பீர்கள். கடைசியாக, தேவையில்லாத விஷயத்திற்காகக்  கவலைப்படுபவராக இருந்திருப்பீர்கள்."

டாக்டர்,சமீப காலமாக, வயிற்றுப் புண் (Ulcers), இருதய வலி (Heart aches), இன்னும் 
சில வியாதிகளால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்களே? இது, அளவுக்கு மீறி அதிக வேலையைச் செய்வதனாலா?

டாக்டர்: நிச்சயமாக இல்லை. என்னுடைய வாடிக்கையாளர்களில் யாருமே அதிக வேலையினால் செத்ததில்லை. அதீதமுயற்சி-அதாவது பேராசை, அடைய முடியாத லட்சியக் கனவுகள்தான். ஏமாற்றம் கவலை என்று பல பிரச்சினைகளை உண்டாக்கி வியாதியஸ்தர்களாக ஆகிறார்கள்.

கேள்வி: ஓயாத பதற்றம் (nervous tension) என்றால் என்ன? எதனால் அது வருகிறது?

டாக்டர்: ஓயாத பதற்றம் என்பது ஒரு பயப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லை. 
அது ஓரளவாவது எல்லோரிடமும் இருக்கும்—இருக்க வேண்டும். அது அளவோடு இருந்தால்தான் சில உபயோகமான விஷயங்களை நாம் அணுக முடியும். 
ஓயாத பதற்றம் ஒரு பிரச்சினையே இல்லை.அந்தப் பதற்றத்தை அதிதீவிரமான நிலைக்குக் கொண்டுசெல்லும்போதுதான் அது நம் உடலில் வேண்டாத 
மாறுதல்களைச் செய்கிறது.

கேள்வி: ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் இதனால் பாதிக்கப்படுகிறார்களா?

டாக்டர்: இல்லை. சில புத்திசாலி மனிதர்கள் வாழ்க்கையை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஓயாத பதற்றத்தினால் 
பாதிக்கப்படுபவர்கள், உடனுக்குடன் உணர்ச்சிவசப்படுபவர்கள். ரொம்ப புத்திசாலிகள், நம்முடைய வாழ்க்கை செம்மையாகச் செயல்பட வேண்டும் என்று சதாகாலமும் நினைத்துச் செயல்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக,  அதிக  புத்திசாலிகளின் Nervous System அவ்வளவு வலுவானது இல்லைதான். அதனால் அவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.உதாரணத்திற்கு, ஒரு திடமான 
alarm clock தரையில் விழுந்தால் அநேகமாக அது மறுபடியும் ஓட ஆரம்பிக்கும். அதே சமயம் ஒரு விலையுயர்ந்த சுவிஸ் கடிகாரத்தைக் கீழே போட்டால்,  நிச்சயம் ரிப்பேர் பண்ணுபவரைத்தான் அணுக வேண்டும். ஒழுங்காக வேலை செய்யும் nervous systemஐ யாரும் அசைத்துப்பார்க்க முடியாது.

கேள்வி: சில குறிப்பிட்ட வேலையில் உள்ளவர்களுக்குத்தான் ஓயாத பதற்றம் வருமா?

டாக்டர்: அதுதான் பொதுப்படையான கருத்து. ஒரு லாரி ஓட்டும் ஓட்டுநருக்கு வயிற்றுப் புண் வர அவ்வளவாக சாத்தியமில்லை. ஆனால் ஒரு விளம்பர ஸ்தாபனத்தில் வேலை செய்யும் நபருக்கு நிச்சயமாக குடல்புண் வர வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி: சில குறிப்பிட்ட வேலைகள் இதை உண்டாக்குகின்றனவா அல்லது இது தனிப்பட்ட நபரைப் பொறுத்து வருகிறதா?

டாக்டர்: முழுக்கமுழுக்க இது தனிப்பட்ட நபரைப் பொறுத்துதான் ஓயாத பதற்றம் ஏற்படுகிறது. எதையும் சமாளிக்கத் தேவையான மனப்பக்குவம் உள்ளவனுக்கு 
எந்த வேலையும் பதற்றத்தைக் கொடுக்காது. வேலை செய்யும் தகுதிக்குறை ஒரு நபருக்கு இருந்து, அதை நினைத்து உருக ஆரம்பித்தால் அது நிச்சயமாக அவருடைய மனநிலையைப் பாதிக்கும்.

கேள்வி: குடல்புண்தான் ஓயாத பதற்றத்திற்க்கு முக்கிய அறிகுறி என்கிறீர்கள் வேறு ஏதாவது விளைவுகள் இருக்கிறதா?

டாக்டர்: ஓயாத பதற்றம் எந்த உறுப்பையும் தாக்கலாம். இருதயம், ரத்த நாளங்கள், தைராய்டு முதலிய சுரப்பிகளை—என்று எல்லா முக்கிய உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Empty Re: அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா?

Post by Guest Tue Jan 14, 2020 2:38 pm


கேள்வி: உதவி என்று வரும் உங்கள் நோயாளிகளுக்கு நீங்கள் சொல்லும் யோசனை என்ன?

டாக்டர்: நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். யார் இந்த V.I.P? நீங்கள்தான்.எப்படி நீங்கள் சில உணவு 
பண்டங்களால், புகை பிடிப்பதால், மது அருந்துவதால், உடற்பயிற்சி பண்ணாததால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 40 வயதில் ஒருவன் டாக்டராக 
இருப்பான் அல்லது ஒரு முட்டாளாக இருப்பான். அதாவது, அந்த வயதில் அவனுக்குத் தனக்கு எது நன்மை என்று தெரிந்திருக்கும் அல்லது அவன் ஒரு அசடாக இருப்பான். இது ஒரு சத்தியமான வார்த்தை. எதிலும்ஒவ்வொருவருடைய வரம்பு எது என்பதை  அவரவர்கள் அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

கேள்வி: நீண்ட நாள் வாழ விரும்புவர்களுக்கு ஏதாவது தாரகமந்திரம் இருக்கிறதா?

டாக்டர்: ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது "Regularity" (ஒழுங்கு, கிரமம்)—அதாவது சில நியதிகள். சின்ன வயதிலிருந்தோ அல்லது கொஞ்சம் வயதான பிறகாவதோ ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு கட்டுப்பாடு, 
நியமம் அமைத்துக்கொள்ள வேண்டும். அது மற்றவர்கள் சொல்லி அமைத்துக் கொள்வதில்லை. தானே தனக்கு எது நன்மை செய்யும் என்று அறிந்து அமைத்துக் கொள்வது. எல்லா உறுப்புகளும் (இருதயம் உட்பட) ஒரே சீராக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த உறுப்புகளின் சொந்தகாரரான நீங்கள் சீரான வாழ்க்கையை ஏன் நடத்தக் கூடாது? எல்லாவற்றையும்—எழுந்திருக்கும் நேரம், காலை, உண்ணும் நேரம், அலுவல் நேரம், ஓய்வு நேரம்—என்று எல்லாவற்றையும் ஏன் திட்டமிட்டுச் செயல்படுத்தக் கூடாது?

கேள்வி: உடற்பயிற்சி முக்கியமா? அதை மிகைப்படுத்திச் சொல்கிறார்களா?

டாக்டர்:உண்மையிலேயே ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு "Excerciseல்—walking, swimming—கவனம் செலுத்த வேண்டும். நடைப்பயிற்சி (walking) சுலபமானது. 
நல்லது. கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கேள்வி: மக்கள் அதிகமாக மாத்திரைகள் சாப்பிடுகிறார்களே அது நல்லதா?

டாக்டர்: இது வருந்தத்தக்கது. Dr. Oliver Holmes என்ற டாக்டர் சொல்லுவார். "எவ்வளவுக்கு எவ்வளவு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு மருந்துகள் கொடுப்பதையும் நிறுத்திவருகிறேன்" என்று.
(The more he practised medicine, the less medicine he prescribed.)மருந்துகள் அவசியம்தான், அளவோடு.

கேள்வி: கடைசியாக ஒரு கேள்வி. 
ஓயாத பதற்றம் வீட்டுச் சூழ்நிலையினால் ஏற்படுகிறதா? அது தொற்றுநோயா? அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறதா?

டாக்டர்: ஆமாம். வீட்டு பதற்றத்தை அலுவலகத்துக்கும், அலுவலகப் 
பதற்றத்தை வீட்டுக்கும் மாறிமாறி எடுத்துச் செல்கிறார்கள். 
இது தவிர்கக வேண்டிய விஷயம். அலுவலகத்திலேயோ, வீட்டிலேயோ ஒரு நபர் பதற்றத்தோடு இருந்தால் போதும் அது பக்கத்தில் உள்ள எல்லோரையும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கிறது. மனிதன் ஒரு unreasonable animal. எல்லாவற்றிலேயும் ஒரு perfection எதிர்பார்க்கிறான். அது இந்த உலகத்தில் நடக்காது என்று தெரியும். அந்த மாதிரி perfection கிடைக்கவில்லையானால், எதிரில் உள்ளவர்களிடம் கோபத்தை, எரிச்சலைக் காட்டுகிறான். அது மனைவியாக இருந்தால் 
(அவளும் மனுஷிதானே) அவள் தன் பங்கிற்குத் திருப்பிப் பதிலுக்கு 
அடிக்கிறாள். இந்தச் சண்டை நிம்மதியைக் கெடுத்து மேலும் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது.

கேள்வி: இதைத் தவிர்ப்பது எப்படி?

டாக்டர்: அலுவலகக் கவலைகளை அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள். வீட்டுக்கு எடுத்துச்செல்லாதீர்கள். அதே மாதிரி வீட்டுக் கவலைகள் வீட்டுப்படியைத் தாண்டிச் செல்லக் கூடாது.

கேள்வி: எந்த வயதில் ஒரு ஆரோக்கியமான மனிதன் ஓய்வு பெற வேண்டும்?

டாக்டர்: ஒருபோதும் ரிடயர்ட் ஆகக் கூடாது. கடினமான வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கலாம். எளிதானதும், மனதுக்குப் பிடித்தமான வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். பதற்றத்தைத் தவிர்கக ஒரே வழிதான். 

பிரச்சினைகளை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகள் உங்களை 
ஆக்கிரமிப்பதைத் தவிருங்கள். பிரச்சினை இல்லாத வாழ்க்கை இருக்காது. பிரச்சினை வந்தால் எல்லாமே குடி மூழ்கிவிட்டதுபோல் கத்திக் கூச்சல் போட வேண்டிய அவசியமில்லை. அமைதியாக அணுகுங்கள். பிரச்சினையையும் தீர்க்கலாம். பதற்றமும் ஏற்படாது. உடலும் மனதும் நன்றாகச் செயல்படும். 
டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்குப் பாடுபடுவோம்.

(Dr. Joseph F. Montague,intestinal and stomach disorders and author - U.S. News & World Report )
(தமிழில் நாகராஜன், நியு ஜேசி)
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum