புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
25 Posts - 50%
heezulia
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
7 Posts - 2%
prajai
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலக ஒற்றுமை Poll_c10உலக ஒற்றுமை Poll_m10உலக ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ஒற்றுமை


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Fri Jan 17, 2020 8:10 am

உலக ஒற்றுமை 82295341_608722263289392_2862873578578116608_n

நாம் யார்?

ஆப்பிரிக்கக் காடுகளில்

ஒரினமாய் வாழ்ந்து,

பூமியை நிரப்ப பிரிந்துபோய்

பல்வண்ணம் பெற்று,

பன்மொழிக் கூட்டமாய்ப் பிரிந்து,

ஒரிறைவனுக்கு பல்பெயர் சூட்டி,

பலவேடம் கற்பித்து,

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு

இந்த மண்ணில் ஒன்று சேர்ந்து ஒருக்கிறோம்!



நவீனத் தொழில்நுட்பமும்

நவீனத் திறன்பேசியும்

உலகை ஒரு குடும்பமாக

உருமாற்றம் செய்திருக்கிறது!



இது சேரும் நேரம்,

பிரியும் நேரமன்று!

இது சமாதானத்தின் தருணம்,

சண்டையிடும் தருணமன்று!



நம் சண்டைகளை

எப்போது நிறுத்துவோமென

கடவுளின் ராஜ்யம் காத்திருக்கிறது!



ஆத்திகம் பேசும் அடியவர்களுக்கு

அவனே அன்பு!

நாத்திகம் பேசும் நல்லவர்களுக்கு

அன்பென்னும் குணமாக அவன்

அவதாரம் எடுக்கிறான்!

முன்பு பாடலில் சொன்னதைக்

கவிதையில் வழிமொழிகிறேன்…



ஒன்றாய் இருக்கும் தன்மையினால்தான்

மனிதன் மற்ற உயிர்களைவிட உயர்ந்து நிற்கிறான்.

பரிணாமத்தின் கடைசிப்படி உலக ஒற்றுமை.



பழமையைப் பிடித்து

எத்தனை காலம் நாம்

தொங்கிக் கொண்டிருப்பது?

மூடத்தனத்தில் எத்தனை காலம்

மதிமயங்கி இருப்பது?


‘கையளவு மனது’ என்றத்

தொலைக்காட்சித் தொடரை,

நம் பழைய இல்லங்களில்,

தொன்னூறுகளில்,

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்

பார்த்திருப்போம்…



வறுமையில் வாடும் இளம்விதவை

தன் குழந்தைகளை

வெவ்வேறு பெண்களுக்குத்

தத்துக் கொடுத்து விடுகிறாள்…

அக்குழந்தைகள் பலவிதமாய் வளர்ந்து

பெரியவர்களாகி,

ஒருவரை ஒருவர் அறிந்து ஒன்றாய்ச் சேர்ந்து,

தங்களது அன்னையைத் தேடும்

உணர்ச்சிக் காவியம் அது!



அந்தக் கதையில் வருவது போல,

நாமெல்லோரும் இந்த பூமித்தாயின் குழந்தைகள்!

வெவ்வேறு இடங்களில் குடிபெயர்ந்து வளர்ந்த

இறைவனின் குழந்தைகள் நாம்!



இப்போது ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் நாம்

அன்பில் தேடுவோம் அவனை!

நமக்குள் தேடுவோம் அவனை!



அல்லாவும், கர்த்தரும், அரியும் சிவனும்

ஓர்பொருள் குறித்த பல பெயர்கள்…

இதைத்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்;

விவேகானந்தர் சொன்னார்;

ரமண மகரிஷி சொன்னார்;

குரு நானக் சொன்னார்;

பாடல்களில் பாரதியும் புகன்றார்;

காந்தியும் கலாமும் அதை ஏற்று நடந்ததால்தான்

வரலாறு அவர்களை உயர்த்திக் காட்டுகிறது.



இன்னும் எத்தனைபேர் வந்து இதையே சொல்ல வேண்டும்?

யார் வந்து சொன்னால் நமக்கெல்லாம் புரியும்?



பூமி ஒரு குடும்பம் என்கிறது மகா உபநிடதம்;

ஒவ்வொரு ஊரும் நம் ஊர், ஒவ்வொருவனும் நம் உறவினன் என்று பாடுகிறது புறநானூறு;

உண்மை ஒன்றே,

அதை ஞானிகள்

பலபெயர்களால் அழைப்பார்கள் என்று

உரக்கச் சொல்கிறது ரிக்வேதம்!



உற்று நோக்கினால் தெரியும்,

இஸ்லாமும் கிருத்தவமும் இதையே

வழிமொழிகின்றன என்று!



ஆக, இம்மண்ணின் தர்மம் சொல்வது ஒன்று;

அதன் பெயரால் நாம் செய்வது வேறொன்று!

உங்கள் இறைவன் சொல்வது ஒன்று;

அவன் பெயரால் நீங்கள் செய்வது வேறொன்று!



போதும்!

வேறுபாடுகள் தரும் போதையில்  காட்டிய

வெறித்தனங்கள் போதும்!

எனது மதம், எனது சாதி,

எனது மொழி, எனது நாடு என்று

சுயவிளம்பரம் செய்து,

தற்பெருமை பேசி

ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு

காலம் கழித்தது போதும்!



நாய் சிறுநீர் கழித்துத் தன்

எல்லையைக் , குறித்துக் கொள்கிறது;

மனிதன் வேறுபாடுகள் கற்பித்துத் தன்

எல்லைகளைக் குறித்துக் கொள்கிறான்;

இரண்டுக்கும் என்ன பெரிய  வேறுபாடு?



வாழ்க்கை என்பது குதிரைப் பந்தயம் அன்று;

மதங்களையும் இனங்களையும்

குதிரைகளாய் ஓடவிட்டு,

எது ஜெயிக்கும் என்று வேடிக்கைப் பார்க்க

இங்கு நாம் வரவில்லை!



இந்த பூமியும் ஒரு நாள் அழியும்;

அதன் ஆயுளை நீட்டிப்போம்!

இருக்கும் வரை நன்றாய், ஒன்றாய், அன்பாய்

வாழ்வோம்!

– பி. சண்முகம்



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக