Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease) – கம்ப வாதம் - நடுக்கு வாதம்
Page 1 of 1
பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease) – கம்ப வாதம் - நடுக்கு வாதம்
காமெடி நடிகர் விவேக், ஒரு படத்தில் தன் காதலிக்கு கான்ஸர் வியாதி
இருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டு (குழப்பம் அந்தக் காதலியின்
ராசி - கடகம், அதாவது cancer). தன் நண்பனிடம் இவ்வாறாகப் புலம்புவார்.
"கான்ஸர் என்ற வியாதி, குணப்படுத்த முடியாது என்பதையே நான் சினிமா
மூலம்தான் தெரிந்து கொண்டேன்" என்பார். நான் அவ்வளவு "ஞானசூனியன்" இல்லை.இருந்தாலும் நான் மருத்துவத்தை முறையாகப் படித்தவன் இல்லை.
என்னுடைய மருத்துவ அறிவு புத்தகப் படிப்புகள் மூலம் கிடைத்தது. அதாவது "ஏட்டுச் சுரைக்காய்" என்று தெரிவித்துக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.
இன்றைய சமுதாயத்தில் மக்கள் எத்தனையோ வியாதிகளினால் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். புதிது புதிதாக வியாதிகள், புதிது புதிதாக மருந்துகள். ஆட்கொல்லி என்று சொன்ன வியாதிகள்- காலரா, டபுள் நிமோனியா, சுலபமாகக் குணப்படுத்தப்படுகின்றன. மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படியிருந்தும் சில வியாதிகளின் காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றன. அப்படிப்பட்ட வியாதிகளில் ஒன்றுதான் "பார்கின்ஸன்ஸ்" வியாதி. இந்த வியாதியைப் பற்றி விவரமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிய ஆங்கில நாட்டு James Parkinson என்பவரின் பெயரையே இந்த வியாதிக்குச் சூட்டிவிட்டார்கள்
இவர் 1817ஆம் ஆண்டு Essay on the Shaking Palsy என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். அதற்குப் பிறகுதான் இந்த வியாதியைப் பற்றின ஆராய்ச்சிகள் வெகுவாக நடந்தன - நடந்து கொண்டிருக்கின்றன.
முதல் கேள்வி - 1817க்கு முன் இந்த வியாதி இருந்ததா? இருந்தது.
அதற்கான விளக்கங்கள் இதோ-
இந்த வியாதியைப் பற்றிய விவரங்கள் 5000 ஆண்டுகள் முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஆயுர்வேத நூல்களில் விவரமாக எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்களின் மருத்துவக் குறிப்புகளிலும் இந்த வியாதியைப் பற்றின விவரங்கள் இருக்கின்றன.
ஆயுர் வேதத்தில் இந்த வியாதி "கம்ப வாதம்" என்றும், சித்தர்கள் அகராதியில் இது 'நடுக்கு வாதம்" என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவத்தில் ஆயுர்வேத, சித்த சாஸ்திரங்களின் அணுகுமுறை "திரிதோஷ" என்ற பாகுபாடு உள்ளதாக உள்ளது. அதாவது மனிதனின் உடல், மனது,
வளர்ச்சிக்குக் காரணங்கள் மூன்று - வாதம், பித்தம், கபம்.
வாதம்,psychomotor activitiesகளையும், பித்தம், ஜீரண சம்பந்தமான
விஷயங்களையும், கபம் வளர்ச்சி சம்பந்தமான விஷயங்களையும் பாதிக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பங்குகள் இருந்தாலும் எல்லாமே ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த மூன்று குணங்களில், ‘வாதம்’தான் முதலிடம் வகிக்கிறது. வாதம்’தான் life force —மற்ற இரண்டும் அதற்கு அடுத்தபடிதான்.
தற்காலத்தில் மருத்துவர்களால் வர்ணிக்கப்படும் Neurological disorder
- மூளை நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கு அடிப்படைக் காரணம்,
வாதம் சமநிலையில் இல்லாதது .குறிப்பாக, கம்ப வாதம் என்று அழைக்கப்பட்ட வியாதி, shaking palsy - Parkinsons diseaseக்குச் சொல்லப்படுகிற எல்லாஅறிகுறிகளையும் உடையதாக இருக்கிறது. "கம்பனா" "வேபனா" "வேபது" "ஸ்பாடனா" எல்லாமே நடுக்கத்தின் பலதரப்பட்ட விளக்கங்கள்.
"கம்ப" நடுக்கத்தைத் தவிர, ஸ்தம்ப (stiffness) விஷாத (depression) என்ற நிலைகளும் பார்கின்ஸனிஸம் சம்பந்தப்பட்டவைதான். இதற்கான மருந்து வகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பொதுவாக சிகிச்சை முறைகள்
உள்ளுக்கும் வெளிக்கும் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
சமீப காலங்களில் ஆயுர்வேத, சித்த மருந்துகள் பற்றி நிறையவே
ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. தற்கால அலோபதி டாக்டர்களும்
பார்கின்ஸன்ஸ் வியாதிக்கு ஆயுர்வேத, சித்த மருந்துகள் உபயோகிப்பதை வரவேற்கிறார்கள். இந்த வியாதியைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக ஆராய்வோம்.
பார்கின்ஸன்ஸ் வியாதி என்பது என்ன?
Central nervous system -மத்திய நரம்பு மண்டலத்தில் - அதாவது மூளை முதுகுத்தண்டு பக்கங்களில் கோளாறு ஏற்பட்டால் இந்த வியாதி வரும். இதற்கு ஆங்கிலத்தில் motor system disorders என்று சொல்வார்கள். இதைத்தான் shaking palsy, paralysis agitans (latin) சொல்லுகிறார்கள்.
இதை ஒரு progressive degenerative neurological disorder என்றும் சொல்வார்கள்.
degenerative என்றால் காலப்போக்கில் உடலின் உறுப்புகள் செயல்பாடுகள்
கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்து நோயின் உக்கிரம் அதிகமாகும்.
Neurologic என்பது nervous system. இது ஒரு Chronic disease. அதாவது இதன் தாக்கம் ரொம்ப காலம் இருக்கும். இந்த வியாதி குணமடையாது. போகப் போக மோசமாகிக்கொண்டுவரும்.
இதனுடைய நோய்க்குறிகள் என்ன?
"T R A P" - அதாவது
T - Tremor - நடுக்கம் (நோயாளிகளின் அவயவங்கள் அவர்கள் ஆணையில்லாமல், அனிச்சையாக நடுங்குவது)
R - Rigidity - (Muscles) தசைகளில் இறுக்கம்.
A - Abinesia - அசைவுகள் இல்லாமை அல்லது அசைவுகளில் தாமதம் -
(Lack of movement or slowness in initiating and maintaining movement.)
P - Postural Instability - உடலில் ஒரு கூனம், சரீரத்தை ஒரு நிலையில் வைத்துகொள்ள முடியாத நிலை.
இது எதனால் ஏற்படுகிறது?
மூளையில் உள்ள ஒரு பகுதியானsubstantia nigra ல் உள்ள நியூரான்கள் சிதிலமடைந்தால்(degenerate) உடல் அசைவுகளை உண்டுபண்ணும் சக்தியை மூளை இழந்துவிடுகிறது. அதன் விளைவு, மேலே சொன்ன
TRAP.
substantia migra என்பது மூளையின் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் ஒரு சிறு பகுதி.
இந்த லாடின் வார்த்தைக்கு அர்த்தம் கறுப்பு பொருள்-Black substance
இந்த பகுதியில் இருக்கும் நியூரான்கள் தான் dopamine டோபமைன் என்ற
neutrotransmitter உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த டோபமைன்தான் மூளையின மற்ற பகுதிகளுக்கு சென்று மூளையின அசைவு ஆணைகளை சரிவர செய்கிறது
டோபமைன் செதப்பட்டால் பார்கினஸன்ஸ் வியாதி தோன்றும்
மூளை சம்பந்தமான வெவ்வேறு வியாதிகள் மூளையின் எந்தப் பகுதியில் நியூரான்கள் அழிந்துவருகின்றன என்பதைப் பொறுத்தது. பார்கின்ஸன்ஸ் வியாதியில் substantia migra என்ற பகுதியில் உள்ள கறுப்பு pigment அழிந்துவிடும்
உடலின் வெவ்வேறு பாகங்களின் அசைவுகளை உண்டுபண்ணும் சக்தியை மூளை இழந்துவிடுகிறது.
தொடருகிறது ..............
இருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டு (குழப்பம் அந்தக் காதலியின்
ராசி - கடகம், அதாவது cancer). தன் நண்பனிடம் இவ்வாறாகப் புலம்புவார்.
"கான்ஸர் என்ற வியாதி, குணப்படுத்த முடியாது என்பதையே நான் சினிமா
மூலம்தான் தெரிந்து கொண்டேன்" என்பார். நான் அவ்வளவு "ஞானசூனியன்" இல்லை.இருந்தாலும் நான் மருத்துவத்தை முறையாகப் படித்தவன் இல்லை.
என்னுடைய மருத்துவ அறிவு புத்தகப் படிப்புகள் மூலம் கிடைத்தது. அதாவது "ஏட்டுச் சுரைக்காய்" என்று தெரிவித்துக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.
இன்றைய சமுதாயத்தில் மக்கள் எத்தனையோ வியாதிகளினால் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். புதிது புதிதாக வியாதிகள், புதிது புதிதாக மருந்துகள். ஆட்கொல்லி என்று சொன்ன வியாதிகள்- காலரா, டபுள் நிமோனியா, சுலபமாகக் குணப்படுத்தப்படுகின்றன. மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படியிருந்தும் சில வியாதிகளின் காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றன. அப்படிப்பட்ட வியாதிகளில் ஒன்றுதான் "பார்கின்ஸன்ஸ்" வியாதி. இந்த வியாதியைப் பற்றி விவரமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிய ஆங்கில நாட்டு James Parkinson என்பவரின் பெயரையே இந்த வியாதிக்குச் சூட்டிவிட்டார்கள்
இவர் 1817ஆம் ஆண்டு Essay on the Shaking Palsy என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். அதற்குப் பிறகுதான் இந்த வியாதியைப் பற்றின ஆராய்ச்சிகள் வெகுவாக நடந்தன - நடந்து கொண்டிருக்கின்றன.
முதல் கேள்வி - 1817க்கு முன் இந்த வியாதி இருந்ததா? இருந்தது.
அதற்கான விளக்கங்கள் இதோ-
இந்த வியாதியைப் பற்றிய விவரங்கள் 5000 ஆண்டுகள் முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஆயுர்வேத நூல்களில் விவரமாக எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்களின் மருத்துவக் குறிப்புகளிலும் இந்த வியாதியைப் பற்றின விவரங்கள் இருக்கின்றன.
ஆயுர் வேதத்தில் இந்த வியாதி "கம்ப வாதம்" என்றும், சித்தர்கள் அகராதியில் இது 'நடுக்கு வாதம்" என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவத்தில் ஆயுர்வேத, சித்த சாஸ்திரங்களின் அணுகுமுறை "திரிதோஷ" என்ற பாகுபாடு உள்ளதாக உள்ளது. அதாவது மனிதனின் உடல், மனது,
வளர்ச்சிக்குக் காரணங்கள் மூன்று - வாதம், பித்தம், கபம்.
வாதம்,psychomotor activitiesகளையும், பித்தம், ஜீரண சம்பந்தமான
விஷயங்களையும், கபம் வளர்ச்சி சம்பந்தமான விஷயங்களையும் பாதிக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பங்குகள் இருந்தாலும் எல்லாமே ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த மூன்று குணங்களில், ‘வாதம்’தான் முதலிடம் வகிக்கிறது. வாதம்’தான் life force —மற்ற இரண்டும் அதற்கு அடுத்தபடிதான்.
தற்காலத்தில் மருத்துவர்களால் வர்ணிக்கப்படும் Neurological disorder
- மூளை நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கு அடிப்படைக் காரணம்,
வாதம் சமநிலையில் இல்லாதது .குறிப்பாக, கம்ப வாதம் என்று அழைக்கப்பட்ட வியாதி, shaking palsy - Parkinsons diseaseக்குச் சொல்லப்படுகிற எல்லாஅறிகுறிகளையும் உடையதாக இருக்கிறது. "கம்பனா" "வேபனா" "வேபது" "ஸ்பாடனா" எல்லாமே நடுக்கத்தின் பலதரப்பட்ட விளக்கங்கள்.
"கம்ப" நடுக்கத்தைத் தவிர, ஸ்தம்ப (stiffness) விஷாத (depression) என்ற நிலைகளும் பார்கின்ஸனிஸம் சம்பந்தப்பட்டவைதான். இதற்கான மருந்து வகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பொதுவாக சிகிச்சை முறைகள்
உள்ளுக்கும் வெளிக்கும் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
சமீப காலங்களில் ஆயுர்வேத, சித்த மருந்துகள் பற்றி நிறையவே
ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. தற்கால அலோபதி டாக்டர்களும்
பார்கின்ஸன்ஸ் வியாதிக்கு ஆயுர்வேத, சித்த மருந்துகள் உபயோகிப்பதை வரவேற்கிறார்கள். இந்த வியாதியைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக ஆராய்வோம்.
பார்கின்ஸன்ஸ் வியாதி என்பது என்ன?
Central nervous system -மத்திய நரம்பு மண்டலத்தில் - அதாவது மூளை முதுகுத்தண்டு பக்கங்களில் கோளாறு ஏற்பட்டால் இந்த வியாதி வரும். இதற்கு ஆங்கிலத்தில் motor system disorders என்று சொல்வார்கள். இதைத்தான் shaking palsy, paralysis agitans (latin) சொல்லுகிறார்கள்.
இதை ஒரு progressive degenerative neurological disorder என்றும் சொல்வார்கள்.
degenerative என்றால் காலப்போக்கில் உடலின் உறுப்புகள் செயல்பாடுகள்
கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்து நோயின் உக்கிரம் அதிகமாகும்.
Neurologic என்பது nervous system. இது ஒரு Chronic disease. அதாவது இதன் தாக்கம் ரொம்ப காலம் இருக்கும். இந்த வியாதி குணமடையாது. போகப் போக மோசமாகிக்கொண்டுவரும்.
இதனுடைய நோய்க்குறிகள் என்ன?
"T R A P" - அதாவது
T - Tremor - நடுக்கம் (நோயாளிகளின் அவயவங்கள் அவர்கள் ஆணையில்லாமல், அனிச்சையாக நடுங்குவது)
R - Rigidity - (Muscles) தசைகளில் இறுக்கம்.
A - Abinesia - அசைவுகள் இல்லாமை அல்லது அசைவுகளில் தாமதம் -
(Lack of movement or slowness in initiating and maintaining movement.)
P - Postural Instability - உடலில் ஒரு கூனம், சரீரத்தை ஒரு நிலையில் வைத்துகொள்ள முடியாத நிலை.
இது எதனால் ஏற்படுகிறது?
மூளையில் உள்ள ஒரு பகுதியானsubstantia nigra ல் உள்ள நியூரான்கள் சிதிலமடைந்தால்(degenerate) உடல் அசைவுகளை உண்டுபண்ணும் சக்தியை மூளை இழந்துவிடுகிறது. அதன் விளைவு, மேலே சொன்ன
TRAP.
substantia migra என்பது மூளையின் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் ஒரு சிறு பகுதி.
இந்த லாடின் வார்த்தைக்கு அர்த்தம் கறுப்பு பொருள்-Black substance
இந்த பகுதியில் இருக்கும் நியூரான்கள் தான் dopamine டோபமைன் என்ற
neutrotransmitter உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த டோபமைன்தான் மூளையின மற்ற பகுதிகளுக்கு சென்று மூளையின அசைவு ஆணைகளை சரிவர செய்கிறது
டோபமைன் செதப்பட்டால் பார்கினஸன்ஸ் வியாதி தோன்றும்
மூளை சம்பந்தமான வெவ்வேறு வியாதிகள் மூளையின் எந்தப் பகுதியில் நியூரான்கள் அழிந்துவருகின்றன என்பதைப் பொறுத்தது. பார்கின்ஸன்ஸ் வியாதியில் substantia migra என்ற பகுதியில் உள்ள கறுப்பு pigment அழிந்துவிடும்
உடலின் வெவ்வேறு பாகங்களின் அசைவுகளை உண்டுபண்ணும் சக்தியை மூளை இழந்துவிடுகிறது.
தொடருகிறது ..............
Guest- Guest
Re: பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease) – கம்ப வாதம் - நடுக்கு வாதம்
இந்த வியாதி யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஏன் சில பேர்களுக்கு மாத்திரம் வருகிறது? தெரியாது. வியாதி வந்தவர்கள் ஒரு Shellக்குள் போய்விடுகிறார்கள்.யாரையும் பார்த்துப் பேச விரும்பாத நிலையை அடைகிறார்கள். வியாதி குணமாகாது என்று தெரிந்ததும் எல்லாவிதமான சிகிச்சைகளையும் பரிட்சை பண்ணத் தயாராகிறார்கள். ஏதாவது மருந்தினால் மோசமான நிலையில் ஒரு மாறுதல் ஏற்பட்டு ஒரு stable நிலை ஏற்படாதா என்று ஏங்குகிறார்கள். இந்த வியாதியை எப்படி குணப்படுத்தமுயலுகிறார்கள்?
இப்போதைக்கு Drugs மூலம் தான்சிகிச்சை அளிக்கப் படுகிறது.Levodopa என்ற மருந்து தான்அதிகமாக உபயோகிக்கப் படுகிறது.லெவொடொபை மூளை
டோபமைனாக மாற்றிக் கொள்கிறது.லெவொடொபின் விளைவுகள் கொஞ்ச காலத்திக்குத்தான்.அடிக்கடி தொடர்ந்து சாப்பிட வேண்டும்.விளைவு
வேண்டாத side effects.நிரந்தர தீர்வுக்காக காத்திருப்போம்.
இந்த வியாதியோடு எப்படி வாழ்வது என்பது பற்றி நிறைய அறிவுரைகள் எழுதப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1. இந்த வியாதியைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. இந்த வியாதி வந்தவர்களுடன் பேசுங்கள்.ஒருவருடைய வியாதி மாதிரி இன்னோருவருக்கு இருக்காது. அதே மாதிரி சிகிச்சை முறையும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
2. உங்களுடைய stress levelஐக் குறையுங்கள். உங்கள் தேவைகளுக்கு
முதலிடம் கொடுங்கள்.இது ஒரு சுயநலமான செய்கையில்லை.
முதலில் உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் உடலில் உள்ள குறைபாடுகள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். கஷ்டமாக இருக்கும்.
4. உங்களுடைய sense of humourஐ விட்டுவிடாதீர்கள். சிரிப்பு டென்ஷனுக்கு நல்ல மருந்து.
5. மற்றவர்களிடம் உங்கள் வியாதியைப் பற்றிச் சொல்லக் கூச்சப்படாதீர்கள்.
6. எதிலும் ஒரு positive attitude வைத்துக்கொள்ளுங்கள்.
7. சாப்பிடுவதற்கு, உடை மாற்றிக்கொள்வதற்கு, நடப்பதற்கு, பேசுவதற்கு extra time ஒதுக்குங்கள். தப்பில்லை.
8. உங்கள் ஏரியாவில் PD groupsஇருந்தால் அதில் சேருங்கள்.
9. எந்தச் சாதனங்கள் வாங்க வேண்டியிருந்தாலும் அவற்றைச் சோதனைபண்ணிவிட்டு வாங்குங்கள்.
10. உடற்பயிற்சியை உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
11. உங்கள் வீட்டில் சில எளிதான விலை அதிகமில்லாத மாற்றங்களைச் செய்யுங்கள். உதாரணத்துக்கு:
a) உங்கள் வீட்டு furnitureகளை நடக்க வசதியுள்ளதாக மாற்றி அமையுங்கள்
b) உங்களைக் கீழே தள்ளும் கம்பளங்களைத் தூக்கி எறியுங்கள்.
c) வீட்டு வெளிச்சத்தைக் கூட்டுங்கள் .
d) படுக்கை உயரம் குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.
12. எதிலும் ஒரு நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் —
நான் பொதுவாக மருத்துவ சம்பந்தமான எந்தக் கட்டுரைகளையோ, சினிமா வீடியோக்களையோ படிப்பதில்லை, பார்ப்பதில்லை. அதை தெரிந்துகொண்டு நாம் என்ன செய்யபோகிறோம்?
வியாதி வந்தால், டாக்டரிடம் போகலாமே? என்ற நினைப்பில்தான் வந்தது ஒரு அலட்சிய மனப்பான்மை. நம்முடைய நெருங்கிய நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ இந்த PD வந்தால் நமக்கு உள்ளுக்குள் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் அல்லவா? அதைத்தான் இந்தத் தடவை இந்திய விஜயத்தில் உணர்ந்தேன். என்னுடைய 2, 3 நண்பர்களும் உறவினர்களும் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் இந்த வியாதியின் கொடுமையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அதன் விளைவு, இந்தக் கட்டுரை.
என்னுடைய அறிவு வளர்ச்சிக்காக நான் இந்த வியாதியைப் பற்றிக் கொஞ்சம் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய நண்பர்களும் உறவினர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சையில் ஏதாவது குணம் தெரிந்தால் தயவுசெய்து அதை எத்தனை பேருக்குத் தெரிவிக்க முடியுமோ அத்தனை பேருக்குத் தெரிவியுங்கள்.
இன்றைய சிகிச்சை நிலை - Trial and errorதான் . Allopathy, ஆயுர்வேதம், சித்தம் என்று பலதரப்பட்ட கலவையில்தான் சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
வியாதி வந்தவர்களின் அங்க அசைவுகள் மேலும் மோசமாக ஆகாமல் இருக்கத்தான் சிகிச்சைகள். கட்டாயம் இந்த வியாதிக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும். அதுவரை, வியாதி வந்தவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு, கடமை.
Parkinson's Disease - 300 Tips for Making Life Easier
by Shelly Peterman Schwarry என்ற நூலில் இருந்து தொகுத்து தந்தவர்.........
(நன்றி-நாகராஜன், நியு ஜேர்சியில் இருந்து)
பொதுவாக 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த நோய் வந்தாலும்,30 வயதிலும் வந்திருக்கிறது.குத்துச்சண்டை வீரர் மொஹமது அலி தனது 42 வது வயதில் இந்த நோய்க்கு ஆளானார்.
இந்த நோய் உள்ளவர்களையும் முதியவர்களையும் அரவணைத்து அன்பு செலுத்துங்கள்.நடிகர்களுக்காக என்னவெல்லாமோ செய்கிறோமே!
படம் -மைடன் கோப்புகள்
இப்போதைக்கு Drugs மூலம் தான்சிகிச்சை அளிக்கப் படுகிறது.Levodopa என்ற மருந்து தான்அதிகமாக உபயோகிக்கப் படுகிறது.லெவொடொபை மூளை
டோபமைனாக மாற்றிக் கொள்கிறது.லெவொடொபின் விளைவுகள் கொஞ்ச காலத்திக்குத்தான்.அடிக்கடி தொடர்ந்து சாப்பிட வேண்டும்.விளைவு
வேண்டாத side effects.நிரந்தர தீர்வுக்காக காத்திருப்போம்.
இந்த வியாதியோடு எப்படி வாழ்வது என்பது பற்றி நிறைய அறிவுரைகள் எழுதப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1. இந்த வியாதியைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. இந்த வியாதி வந்தவர்களுடன் பேசுங்கள்.ஒருவருடைய வியாதி மாதிரி இன்னோருவருக்கு இருக்காது. அதே மாதிரி சிகிச்சை முறையும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
2. உங்களுடைய stress levelஐக் குறையுங்கள். உங்கள் தேவைகளுக்கு
முதலிடம் கொடுங்கள்.இது ஒரு சுயநலமான செய்கையில்லை.
முதலில் உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் உடலில் உள்ள குறைபாடுகள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். கஷ்டமாக இருக்கும்.
4. உங்களுடைய sense of humourஐ விட்டுவிடாதீர்கள். சிரிப்பு டென்ஷனுக்கு நல்ல மருந்து.
5. மற்றவர்களிடம் உங்கள் வியாதியைப் பற்றிச் சொல்லக் கூச்சப்படாதீர்கள்.
6. எதிலும் ஒரு positive attitude வைத்துக்கொள்ளுங்கள்.
7. சாப்பிடுவதற்கு, உடை மாற்றிக்கொள்வதற்கு, நடப்பதற்கு, பேசுவதற்கு extra time ஒதுக்குங்கள். தப்பில்லை.
8. உங்கள் ஏரியாவில் PD groupsஇருந்தால் அதில் சேருங்கள்.
9. எந்தச் சாதனங்கள் வாங்க வேண்டியிருந்தாலும் அவற்றைச் சோதனைபண்ணிவிட்டு வாங்குங்கள்.
10. உடற்பயிற்சியை உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
11. உங்கள் வீட்டில் சில எளிதான விலை அதிகமில்லாத மாற்றங்களைச் செய்யுங்கள். உதாரணத்துக்கு:
a) உங்கள் வீட்டு furnitureகளை நடக்க வசதியுள்ளதாக மாற்றி அமையுங்கள்
b) உங்களைக் கீழே தள்ளும் கம்பளங்களைத் தூக்கி எறியுங்கள்.
c) வீட்டு வெளிச்சத்தைக் கூட்டுங்கள் .
d) படுக்கை உயரம் குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.
12. எதிலும் ஒரு நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் —
நான் பொதுவாக மருத்துவ சம்பந்தமான எந்தக் கட்டுரைகளையோ, சினிமா வீடியோக்களையோ படிப்பதில்லை, பார்ப்பதில்லை. அதை தெரிந்துகொண்டு நாம் என்ன செய்யபோகிறோம்?
வியாதி வந்தால், டாக்டரிடம் போகலாமே? என்ற நினைப்பில்தான் வந்தது ஒரு அலட்சிய மனப்பான்மை. நம்முடைய நெருங்கிய நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ இந்த PD வந்தால் நமக்கு உள்ளுக்குள் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் அல்லவா? அதைத்தான் இந்தத் தடவை இந்திய விஜயத்தில் உணர்ந்தேன். என்னுடைய 2, 3 நண்பர்களும் உறவினர்களும் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் இந்த வியாதியின் கொடுமையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அதன் விளைவு, இந்தக் கட்டுரை.
என்னுடைய அறிவு வளர்ச்சிக்காக நான் இந்த வியாதியைப் பற்றிக் கொஞ்சம் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய நண்பர்களும் உறவினர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சையில் ஏதாவது குணம் தெரிந்தால் தயவுசெய்து அதை எத்தனை பேருக்குத் தெரிவிக்க முடியுமோ அத்தனை பேருக்குத் தெரிவியுங்கள்.
இன்றைய சிகிச்சை நிலை - Trial and errorதான் . Allopathy, ஆயுர்வேதம், சித்தம் என்று பலதரப்பட்ட கலவையில்தான் சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
வியாதி வந்தவர்களின் அங்க அசைவுகள் மேலும் மோசமாக ஆகாமல் இருக்கத்தான் சிகிச்சைகள். கட்டாயம் இந்த வியாதிக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும். அதுவரை, வியாதி வந்தவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு, கடமை.
Parkinson's Disease - 300 Tips for Making Life Easier
by Shelly Peterman Schwarry என்ற நூலில் இருந்து தொகுத்து தந்தவர்.........
(நன்றி-நாகராஜன், நியு ஜேர்சியில் இருந்து)
பொதுவாக 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த நோய் வந்தாலும்,30 வயதிலும் வந்திருக்கிறது.குத்துச்சண்டை வீரர் மொஹமது அலி தனது 42 வது வயதில் இந்த நோய்க்கு ஆளானார்.
இந்த நோய் உள்ளவர்களையும் முதியவர்களையும் அரவணைத்து அன்பு செலுத்துங்கள்.நடிகர்களுக்காக என்னவெல்லாமோ செய்கிறோமே!
படம் -மைடன் கோப்புகள்
Guest- Guest
Similar topics
» முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
» இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
» Disease X: `கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்து; 5 கோடி மக்கள் இறக்கலாம்
» PILES DISEASE
» உதவுங்கள் - கம்ப ராமாயணம் பிடிஎஃப் தேவை
» இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
» Disease X: `கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்து; 5 கோடி மக்கள் இறக்கலாம்
» PILES DISEASE
» உதவுங்கள் - கம்ப ராமாயணம் பிடிஎஃப் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|