Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒழுக்கமே உயர்வு தரும்
2 posters
Page 1 of 1
ஒழுக்கமே உயர்வு தரும்
![ஒழுக்கமே உயர்வு தரும் Olukkam%20uyarvu%20tharum](https://2img.net/h/www.tamilkathir.com/uploads/images/Ilakiyam/olukkam%20uyarvu%20tharum.gif)
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்
கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்
கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்
கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்
வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்
கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்
எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு
கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை
மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை
இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்
பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது
பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது
விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்
ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று
அவசியம் தேவை நல் ஒழுக்கம்
ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்
இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்
இரண்டு கால் மிருகம் என்று உணர்
மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று
மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்
கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்
மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு
கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு
மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்
ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்
கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.
ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை
ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்
எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்
ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்
தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்
தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது
மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்
நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது
உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு
பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு
அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்
அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்
உயிர் மேல் ஆசை இருந்தால்
ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது
நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்
நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்
உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்
நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்
ஒழுக்கம் என்பது பால் போன்றது
ஒழுக்கக்கேடு என்பது விசமபோன்றது
ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்
இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்
எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்
பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்
விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை
மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்
உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு
ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு
எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்
நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்
கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான்
அவன் பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்
பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்
பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்
வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை
வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்
தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்
சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்
மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்
மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்
முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
இரா. இரவி, மதுரை
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒழுக்கமே உயர்வு தரும்
» ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி
» உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மையாயிருந்தால்...!
» அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற!
» ஒழுக்கமே வலிமையானது!
» ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி
» உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மையாயிருந்தால்...!
» அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற!
» ஒழுக்கமே வலிமையானது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|