ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சித்தொட்டி என்ற பெயர் வந்தது எப்படி ?

2 posters

Go down

கஞ்சித்தொட்டி என்ற பெயர் வந்தது எப்படி ? Empty கஞ்சித்தொட்டி என்ற பெயர் வந்தது எப்படி ?

Post by ayyasamy ram Sun Dec 22, 2019 10:26 am

சிதம்பரத்தில் ஒரு கஞ்சித்தொட்டி என்ற ஒரு இடம் இருப்பதுபோல
மதுரையில் இருக்கிறத இப்போதுதான் தெரிகிறது

அதற்கு ஏன் கஞ்சித்தொட்டி என்ற பெயர் வந்தது என்று....

வாருங்கள் தெரிந்துகொள்வோம்
-
மதுரை #குஞ்சரத்தம்மாள் தெரியுமா?!!

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் -
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது -

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன்,
யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை
ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த
வேதனை மிகுந்த காலம் அது -

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு
வருகிறது -

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை
குஞ்சரம்மாவினுடையது -

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி -
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி.

பெரும் செல்வச் செழிப்பு -
மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம்
குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது.

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த
இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான் -

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த
முடிவினை எடுத்தாள் குஞ்சரம்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி,
கணக்கின்றிச் சாவதைப் பார்த்து வேதனையால் துடித்து
தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான
தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும்
செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக
வர ஆரம்பித்தனர்.

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம்
விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று
பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது,
ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து
கொண்டேயிருந்தனர்.

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று
சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க
குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து
கொண்டிருந்தனர்.

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது,
அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை

தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது.
அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க
நின்றனர் ஏழை மக்கள்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க
முடியாதபடி இருந்தது,

ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி
தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்.

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர்
கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,

ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம்
என சொல்லலாம்.

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத்
திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என
இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு
எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு எல்லாவற்றையும்
எரித்தது,

அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை
உலையிலே போட்டாள்,
கல் பதித்த தங்க நகைகள்,வெள்ளி நகைகள்,முத்துக்கள்,
காசு மாலைகள் மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி என
எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு
பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த
இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு
அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான்.

யாரைப் பற்றிப் பேச யாரிடமும் எதுவும் இல்லாத கொடும்
பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்..

அவள் முகம் மலர்ந்திருந்தது
தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்,

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு விடைபெற்றாள்
அந்தத் தெய்வத்தாய்.

தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள்
பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில்
தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத
பெருமளவு கூட்டம் நின்றது.

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள்
கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான்
என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென
நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு
கதறியழுதனர் மதுரை மக்கள்.

அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள்.
எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை
நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல
வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து
கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத்
தெரியாமல் தவித்த பொழுது,

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி குஞ்சரத்தை
தெய்வமாக்கிக் கொண்டனர் மதுரை மக்கள்..
-
-----------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கஞ்சித்தொட்டி என்ற பெயர் வந்தது எப்படி ? Empty Re: கஞ்சித்தொட்டி என்ற பெயர் வந்தது எப்படி ?

Post by krishnaamma Sun Dec 22, 2019 8:12 pm

கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது அண்ணா.....அந்த அம்மாவிற்கு கோடி கோடி நமஸ்காரங்கள் ................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum