புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
59 Posts - 55%
heezulia
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
54 Posts - 55%
heezulia
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_m10பெரியவா - யார் இந்தப் பெரியவா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா - யார் இந்தப் பெரியவா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 15, 2019 1:11 pm

பெரியவா - யார் இந்தப் பெரியவா?
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Periyava2-1527593656

(உண்மையில் பெரியவா -மகாபெரியவா எண்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர வேறெதுவும் தெரியாது.சிறை சென்ற ஜெயேந்திரர்,மதுரை ஆதீனம்,நித்தியானந்த ...இந்த வரிசையில் உள்ள ஒருவர் என்றே தெரிந்து வைத்திருந்தேன்..ஈகரையில் அடிக்கடி பார்க்கும் கட்டுரைகள் சிந்தனைகள் தான் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அந்த ஆவல் இன்றைய பொழுதை நற்பொழுதாக்கியது. இணையத்தில் படித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)

சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்  (மே 20, 1894 –சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார்.

" புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி "
என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர் காஞ்சிபுரம் என்றவுடன் நமது சிந்தனைக்கு முதலில் நிற்பது ஸ்ரீ காமாட்சியும் "உம்மாச்சி" தாத்தாவும்தான். அதற்கு பிறகு தான் காஞ்சிபுரம் பட்டு, இட்லி, சிற்பங்கள் இவை அனைத்தும்.

அது யாருங்க "உம்மாச்சி தாத்தா"என நீங்கள் கேட்டால் நீங்கள் தமிழகத்திற்க்கு புதியவர் என அர்த்தம். காஞ்சிபுரத்திற்கு சென்று "உம்மாச்சி தாத்தா" யாருன்னு ஒரு குழந்தையிடம் கேட்டால் கூட மகா பெரியவாள காமிக்கும்.

தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரத்தில் 1894ம் ஆண்டு மே 20 அனுஷ நக்ஷத்திரத்தில் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தில் பிறந்த மகா ஸ்வாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் ஸ்வாமி நாதன் என்பதாகும். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். ஸ்வாமிகள் தனது துவக்க கல்வியை தின்டிவனத்தில் உள்ள ஆற்காடு மிஷன் பள்ளியில் பயின்றார்

அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது…….. கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராசார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராசாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் செல்கிறார் பரமாசார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்த சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது.

சங்கராசாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சகட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும் ஆகையால் அவரையே அடுத்த சங்கராசாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாசார்யாள்!

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...' என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும்.
(இணையத்தில் இருந்து)
தொடருகிறது...........................................

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 15, 2019 1:15 pm

கலவைப் பெரியவாளுடைய சரித்ரம் மிக மிக அருமையானது, ஸ்புடம் போட்ட தங்கம் போல பவித்ரமானது. ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி என்ற நாமகரணத்தில், ஸரஸ்வதி என்ற பட்டம் அவருக்கு மிகவும் பொருந்தி வரும். தன்னை நாடி வந்தவர்கள் எல்லாரையும், பரமாத்மா என்னும் கடலில் கொண்டு போய் சேர்க்கும் ஶாந்தமான, பரம பாவனமான ஸரஸ்; ஸ்படிகம் போன்ற நிர்மலம்; வெண்மை போன்ற தூய்மை; மஹரிஷிகளின் அழகான முத்துமூக்குத்தி போன்ற குடிலில் நிலவும் ஆனந்த அமைதி, அமரிக்கை……

இந்த இனிமையான ரூபம்தான் நம்முடைய கலவைப் பெரியவா!

பெரியவா - யார் இந்தப் பெரியவா? Kalavai_periyava

கலவை ஸ்வாமிகள் ரெண்டு பேர்ல… பெரியவரை… பெரிய ஸ்வாமி-ன்னும், அடுத்தவரை சின்ன ஸ்வாமி-ன்னும் வேணா.. சொல்லலாம்..
சின்னப் பெரியவா என்று சொல்வதை பெரியவா ஏற்றுக்கொள்ளவில்லை! அதேபோல், தன்னை பரமாச்சார்யாள் என்று அழைப்பதையும் பெரியவா ஏற்றுக் கொள்ளவில்லை…..

பெரியவாளின் குரு "கலவை பெரியவா" பூர்வாஸ்ரமத்தில் நம் பெரியவாளின் சொந்த பெரியம்மா பையன். அவருடைய பூர்வாச்ரம பெயர் லக்ஷ்மி காந்தன்.
பெரியவாளின் திருவாக்கால் அவருடைய அண்ணாவும், சன்யாச குருவுமான கலவை பெரியவாளை பற்றி சொன்னார்.

"விஜயநகர சாம்ராஜ்யத்ல ஒரு பகுதியா சேவப்ப நாயக்கர் வம்சத்தவா, தஞ்சாவூர் பிரதேசத்தை ராஜ்ஜியம் பண்ணிண்டு இருந்தப்போ, எங்க அம்மா வழி பாட்டனார் கோவிந்த தீக்ஷதர்தான் மந்திரியா இருந்தார்.. நாங்க கன்னட ஹொய்சள பிராமண வம்சம். தாத்தா கோவிந்த தீக்ஷதர் 72 மேளகர்த்தா ராகங்களை அமைப்பில் கொண்டு வரும் famous புஸ்தகம் "சதுர்தண்டி பிரகாசிகா" வை இயற்றிய வேங்கடமகியின் தோப்பனார். நம்ம மடத்துல 62 , 64 வது ஆச்சார்யாள்ளாம் கோவிந்த தீக்ஷதரின் வம்சம்.

அண்ணா லக்ஷ்மிகாந்தன் ரொம்ப சாது.

அவரோட அப்பா நரசிம்ம சாஸ்த்ரி எட்டு வயசுல அண்ணாக்கு உபநயனம் பண்ணிவெச்சு வேத அத்யயனத்த ஆரம்பிச்சுட்டார். ஆனா அண்ணா ரொம்ப சிறு வயசிலேயே தகப்பனாரை இழந்துட்டார். நம்மாத்துலதான் இருந்தார்....நாங்கள்ளாம் கொட்டம் அடிப்போம், அண்ணா சாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்கவ கோத்ரம். அதை சொல்லி, சொல்லி, "அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி"ன்னு தமாஷ் பண்ணுவோம். அவருக்கு நேர் மாறா, இங்க எங்காத்துலயானா, அப்பா சர்கார் உத்தியோகம்.

அதுபோக, பாக்கி நேரமெல்லாம் ஆத்துல சங்கீத கச்சேரிதான். நானா? ஸ்கூல், ஸ்கூலா திண்டாடிட்டு, கடசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன். அண்ணாதான் பூர்ண வைதீகம். அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே. நாங்கள்ளாம் வேணும்னே அவர்கிட்ட 'தஸ் புஸ்' ன்னு இங்க்லீஷ்ல போட்டு பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலைன்னு பரிஹாசம்கூட பண்ணுவோம். ஆனா,அவர் பாட்டுக்கு சிரிச்சுண்டே இருப்பார். நாங்க டிராயர், ஷர்ட் கோட்டெல்லாம் போட்டுண்டு அமர்க்களப்படுத்தினாலும், அண்ணாக்கு கொஞ்சங்கூட இந்த டிரெஸ் சபலம் கெடையாது.

பால்யத்துலேயே அப்படியொரு மனஸ் கட்டுப்பாடு. சாந்தி, தாந்தி ரெண்டுமே அவருக்கு ஸ்வபாவிகமாவே இருந்தது. பரங்கிப்பேட்டை சாயபுமார்கள்ளேர்ந்து சகல விதமான ஜனங்களும் நம்மாத்துல அப்பாக்கு friends . அதுவும் அம்மா வெறும் நாள்லயே ஏறக்கொறைய தெவச மடி பாக்கறவதா..ன்னாலும் அப்பாக்காக கொஞ்சம் முற்போக்கா இருப்பா. அண்ணா சிறுவயசானாலும் நெருப்பாட்டம் மடி! எங்காத்துலதான் இருப்பார்.

ஆச்சார்யாளோட பீடத்ல ஒக்காரணும்னா.....எவ்வளவு வைதீக பரிசுத்தி வேணுமோ, அவ்வளவும் அண்ணாக்குதான் இருந்தது. பின்னே, ஏன் அத்தனை சுருக்க ஆச்சார்யாள் அவரை தன்கிட்ட எடுத்துண்டுட்டார்ன்னு யோஜிச்சு, யோஜிச்சு பார்த்திருக்கேன், முடிவா என்ன தோணித்துன்னா, வரப்போற அவைதீக பிரளய சமூஹத்துக்கு, அத்தனை சுத்தரை ஆச்சார்யாளா பெற லாயக்கில்லைன்னுதான் அவரை எடுத்துண்டு, என்னை இங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு! " சிரித்துக்கொண்டே காலங்களை கடந்து நிற்கும் காலகாலன், தன் சிறுபிராயத்தை நினைவு கூர்ந்தார்.

(பெரியவா -ஶ்ரீ ரா. கணபதி உரையாடலில்…...இருந்து….…….……….)

உரையாடல் தொடருகிறது………………………...


avatar
Guest
Guest

PostGuest Sun Dec 15, 2019 1:20 pm

மஹாத்மா ஸ்ரீ கோவிந்த தீக்ஷதரின் வம்சத்தில் நாலாவது முறையாக பீடாதிபத்யம் வஹித்தவர் நம் உம்மாச்சி தாத்தா !!!

பெரியவா - யார் இந்தப் பெரியவா? Periyava-PurnaKumbmam

தொடருகிறது…………...

“எல்லாரும்… புதுப் பெரியவாளை…. இனிமே, பெரியவா-ன்னும், என்னை வந்து…. பரமாச்சார்யாள்-ன்னும் கூப்படலா-ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு-ன்னு கேள்விப்பட்டேனே!

பரமாச்சார்யாள்-ங்கற பட்டம், தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்குத்தான் வெக்கறது..!

ஒரு அத்வைத மடாதிபதியை…. அப்டிக் கூப்டறது, மரபுக்கு ஒத்துவராது…..!
…..ஒங்களுக்கெல்லாம் என்ன வேணும்? எனக்கும், அவருக்கும் வித்யாஸம் தெரியணும்! அவளோவ்…தானே? அப்டீன்னா….. புதுப் பெரியவாளைப் பெரியவா-னும், என்னைச் சின்னவா-னும் சொல்லிட்டாப் போச்சு!..”

(குழந்தையாட்டம்… ஒரே… கும்மாளச் சிரிப்பு!)

…”பால்யத்லேந்து…பெரியவா,பெரியவா-ன்னு கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு! பெரிய்…ய்யவாளா மொழக்கினதெல்லாம் போறும்! யாருக்குமே தெரியாத சின்ன ஆஸாமியா… எங்கியாவுது சுருட்டிண்டு கெடக்க மாட்டோமா-ன்னு தோண்றது; அப்பப்போதான் தோண்றதே ஒழிய, அதுவே ஸ்டெடியா நெலச்சு நிக்கக் காணோம்! அதுனாலதான், மறுபடி மறுபடி அக்ஷதை போட்டுண்டு, எதாவுது ப்ளான், ஸ்கீம்.. அது இதுன்னு போட்டுண்டே இருக்கேன்……..

சின்னவா, சின்னவா-ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாலாவுது, சின்னவனாவே சுருட்டிண்டு கெட!-ன்னு அது வாயைக், கையை அப்பப்போ கட்டிப் போடுமோ-ன்னு தோண்றது ”

“பக்தி-லயும்.. மஹா பெரியவா-ங்கலாம்; அப்டி இல்லாட்டாலும்… மஹா….பெரியவா-ங்கலாம் ”

“அறிவில்லாதவனை ‘மஹா’ கெட்டிக்காரன்!ன்னு சொல்லுவோமோல்லியோ? தன் தகுதிக்கு மீறி எதாவுது சொல்றவாட்ட…. “மஹா பெரியவன்! சொல்ல வந்துட்டியாக்கும்?” ன்னு சொல்லுவோமே, அந்த “மஹா” தான்… எனக்குப் பொருந்தும்…”

(ஶ்ரீ ரா.கணபதி பெற்ற பாக்யத்தை, நாமும் பெற்றது போல் ஆனந்தமாக இருக்கிறது.)

(ரா.கணபதி ஏழுதிய- மகாபெரியவா)

கல்கி இதழில் பல காலம் ஆசிரியராக பணியாற்றிய, ரா. கணபதி ( Ra Ganapati) (செப்டம்பர்1, 1935 – பிப்ரவரி 20, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார்.

ரா. கணபதியின் தந்தையாருக்கு சொந்த ஊர் சிதம்பரம். பெயர் சி. வி. இராமச்சந்திர ஐயர். இவர் கணிதத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர், வேத விஞ்ஞானி, மற்றும் வர்த்தக வரித்துறை அதிகாரியாக பிரித்தானிய மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசாங்கங்களில் பணிபுரிந்தவர். தாய் ஜெயலட்சுமி கடலூரைச் சேர்ந்த வக்கீல் குடும்பத்திலிருந்து வந்தவர். கணபதியின் சகோதரி திரிபுரசுந்தரி சுப்பிரமணியன் ஆவார்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 15, 2019 8:59 pm

சரியான தேடல் /பகிர்தல்

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 15, 2019 11:33 pm

சக்தி18 wrote:பெரியவா - யார் இந்தப் பெரியவா?
பெரியவா - யார் இந்தப் பெரியவா? Periyava2-1527593656

(உண்மையில் பெரியவா -மகாபெரியவா எண்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர வேறெதுவும் தெரியாது.சிறை சென்ற ஜெயேந்திரர்,மதுரை ஆதீனம்,நித்தியானந்த ...இந்த வரிசையில் உள்ள ஒருவர் என்றே தெரிந்து வைத்திருந்தேன்..ஈகரையில் அடிக்கடி பார்க்கும் கட்டுரைகள் சிந்தனைகள்  தான் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அந்த ஆவல் இன்றைய பொழுதை நற்பொழுதாக்கியது. இணையத்தில் படித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)

சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்  (மே 20, 1894 –சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார்.

" புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி "
என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர் காஞ்சிபுரம் என்றவுடன் நமது சிந்தனைக்கு முதலில் நிற்பது ஸ்ரீ காமாட்சியும் "உம்மாச்சி" தாத்தாவும்தான். அதற்கு பிறகு தான் காஞ்சிபுரம் பட்டு, இட்லி, சிற்பங்கள் இவை அனைத்தும்.

அது யாருங்க "உம்மாச்சி தாத்தா"என நீங்கள் கேட்டால் நீங்கள் தமிழகத்திற்க்கு புதியவர் என அர்த்தம். காஞ்சிபுரத்திற்கு சென்று "உம்மாச்சி தாத்தா" யாருன்னு ஒரு குழந்தையிடம் கேட்டால் கூட மகா பெரியவாள காமிக்கும்.

தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரத்தில் 1894ம் ஆண்டு மே 20 அனுஷ நக்ஷத்திரத்தில் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தில் பிறந்த மகா ஸ்வாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் ஸ்வாமி நாதன் என்பதாகும். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். ஸ்வாமிகள் தனது துவக்க கல்வியை தின்டிவனத்தில் உள்ள ஆற்காடு மிஷன் பள்ளியில் பயின்றார்

அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது…….. கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராசார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராசாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் செல்கிறார் பரமாசார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்த சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது.

சங்கராசாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சகட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும் ஆகையால் அவரையே அடுத்த சங்கராசாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாசார்யாள்!

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...' என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும்.
(இணையத்தில் இருந்து)
தொடருகிறது...........................................

ஆமாம் சக்தி, தேவையில்லாதவைகளை படிப்பதற்கு பதில் இது போல நம் ஆத்மாவை சுத்தம் செய்யும் நிகழ்வுகளை படிப்பதே சிறந்தது....புன்னகை..........எங்க அப்பா சொல்வார், " சின்ன பிள்ளை, அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சுண்டு இருந்தப்ப,  தன் தாயுடன் பெரியவாளை சேவிக்க போகும்போது, அடுத்த பெரியவாளே நீதான் என்று பட்டம் கட்டிவிட்டார்கள்...........ஆனால் அதற்குப் பிறகு அவர் எப்படித்தான் இத்தனை கற்றுக்கொண்டாரோ" என்று வியப்பார்கள்....பிறகு தானே சொல்வார் "இது விட்ட குறை தொட்ட குறை...போன ஜென்மத்து வாசம்...சாக்ஷத்  அந்த மகாதேவனே அவதாரம் எடுத்திருக்கிறார்" ... " பெரியவாளுக்கு ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல மொழிகளும் தெரியுமாம் "  என்று பலதும் சொல்வார் .... நாங்கள் வைஷணவர்கள் ஆனாலும் சங்கர மதத்துடன் நெருங்கின தொடர்பு வைத்திருந்தார் என் அப்பா புன்னகை

"தெய்வத்தின் குரல்" எல்லா புத்தகங்களும் வைத்திருந்தார்.... ரெகுலராக படிப்பார் புன்னகை

மடத்தில் தென்னை மரத்தில் இருந்து பறித்த காய்களை உபயோகிக்க மாட்டார்கள், தானாவே விழும் காய்களை உபயோகிப்பார்கள் என்று, காய் பறிக்காமல்  காத்திருப்பார் எங்க அப்பா... சில காய்கள் தானே விழுந்ததும் சேகரித்து மடத்துக்கு அனுப்பி வைப்பார்....ஹும் அதெல்லாம் ஒருகாலம் புன்னகை
.
.
நல்ல பகிர்வு, என்றாலும் சக்தி, நீங்க நித்யானதாவுடன் மஹா பெரியவாளை நினைத்து விட்டீர்களே என்று மிகவும் வருத்தமாய் இருக்கு எனக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக