ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குவது யார், எது?

Go down

இயக்குவது யார், எது? Empty இயக்குவது யார், எது?

Post by ayyasamy ram Sun 15 Dec 2019 - 8:42

இயக்குவது யார், எது? E_1575631709

யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி,
ஒவ்வொன்றினுள்ளும் உள்ளே இருந்து,
‘அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்’
இருக்கக்கூடிய அந்த மாபெரும் சக்தி, அனைத்தையும்
இயக்கி கொண்டிருக்கிறது.

இதை உணர்ந்து அனுபவத்தில் கொண்டு வந்து,
அடுத்தவர்களுக்கும் வழி காட்டுபவர்கள், மகான்கள்.
உணராதவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில்
இருந்தாலும், அவர்களின் நிலை என்ன என்பதை
விவரிக்கும் கதை இது:

இந்திரன், வாயு மற்றும் அக்கினி மூவருக்கும், தங்களுக்குள்
யார் பெரியவர் என்பதை பற்றி, வாக்குவாதம் எழுந்தது.

‘நான் தான் பெரியவன். காரணம், நான் தான் மழையை
பொழிய செய்பவன். மழையில்லா விட்டால், எந்த உயிரும்,
எந்த ஜீவராசியும் வாழ முடியாது. ஆகவே, அனைவரையும்
காப்பாற்றுபவன் நான் தான்…’ என்றார், இந்திரன்.

‘உணவில்லாமல் கூட, சில நாட்கள் இருந்து விடலாம்.
ஆனால், மூச்சுக்காற்று இல்லாமல், யாரும் வாழ முடியாது.
ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், வாயு.

‘என்ன பேசுகிறீர்கள் நீங்கள் இருவரும்… உடம்பில் சூடு –
அக்கினி எனும் நான் இல்லாவிட்டால், எதுவுமே இயங்க
முடியாது. ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், அக்கினி
பகவான்.

இவ்வாறு வாதம் நடந்த அந்த நேரத்தில், அவர்களின் முன்,
ஒரு ஜோதி (அம்பாள்- சக்தி) தோன்றியது. அதைப் பார்த்ததும்
அக்கினி பகவான், ‘யார் நீ…’ என, கேட்டார்.

‘என்னை பற்றி விசாரிப்பது இருக்கட்டும். நீ யார், அதை சொல்…’
என்றது, ஜோதி.

‘நான் தான் அக்கினி. இந்த உலகில் எதையும் ஒரு நொடிப்
பொழுதில் எரித்து விடுவேன்…’ என்றார்.

‘சரி… எங்கே இந்த துரும்பை எரி பார்க்கலாம்…’ என்ற ஜோதி,
ஒரு துரும்பை எடுத்து, அக்கினி முன் போட்டது.

தன் முழு பலத்தையும் திரட்டி, துரும்பை எரிக்க முயன்றார்;
முடியாமல் தோற்று திரும்பினார்.

அடுத்து வாயு பகவானிடம், ‘நீ யார்…’ என, விசாரித்தது ஜோதி.

‘நான் தான் வாயு பகவான். நான் வேகமாக வீசினால், என்
வேகத்தை தாங்க யாராலும் முடியாது; ஊதித் தள்ளி விடுவேன்…’
என்று, பெருமை பேசினார்.

‘அப்படியா… எங்கே இந்த துரும்பை ஊதித் தள்ளு பார்க்கலாம்…’
எனக் கூற, தன் முழு ஆற்றலோடும் துரும்பை அசைக்கக் கூட
முடியாமல், தோற்று திரும்பினார், வாயு பகவான்.

‘நான் தான் இந்திரன்; தேவர்களின் தலைவன். மழையை
கொட்டி, அனைத்தையும் நனைத்து விடுவேன்…’ என்று,
பெருமை பேசினார்.

அவர் முன் துரும்பை போட்ட ஜோதி, ‘இந்த துரும்பை
நனையுங்கள் பார்க்கலாம்…’ என்றது.

கொட்டு கொட்டென்று மழை கொட்டியும், சிறிதளவு கூட
துரும்பை நனைக்க முடியாமல் தோற்றுத் திரும்பினார்,
இந்திரன்.

மூவரும் தலை குனிந்து நிற்க, ‘நான் தான் பெரியவன் எனும்
அகம்பாவம், உங்கள் மூவருக்கும் உள்ளது. வீண் அகம்பாவம்
வேண்டாம். உலகில் பெரியவன், சிறியவன் என்று யாரும்
கிடையாது.

‘தங்கள் கடமையை யார் சரியாகச் செய்கின்றனரோ,
அவர்களே பெரியவர்கள். அதுவும் நாம், நம் சக்தியை
கொண்டு செய்வதில்லை; தெய்வ பலத்தைக் கொண்டே
செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…’ என்றது,
ஜோதி.

இந்திரன் முதலான மூவரும், கர்வம் நீங்கி திரும்பினர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது; ஆற்றலும்
உள்ளது. தெய்வ பலத்தால் தான், நல்லவிதமாக செய்கிறோம்
என்பதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வை அடையலாம்.
=======================
பி.என். பரசுராமன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum