ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

2 posters

Go down

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Empty பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

Post by ayyasamy ram Fri Dec 13, 2019 12:28 pm

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Large_105908400
-


பகீரதன் என்ற மன்னரின் முன்னோர்கள், சாபம் ஒன்றின்
காரணமாக மோட்சம் பெற முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், ''வானுலகில் ஓடும் கங்கையை பூமிக்கு
வரவழைத்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்'' என்றார்
அவரது குருநாதர்.

பகீரதனும் ஒற்றைக்காலில் விரலை ஊன்றியபடி தவம் புரிந்தார்.
மனமிரங்கிய சிவன் வானுலக கங்கையை பூமிக்கு இறங்கி வர
பணித்தார். ஆணவத்துடன் சிவனின் தலையில் பாய்ந்தது
கங்காநதி.

அதை தன் ஜடைக்குள் அடக்கினார் சிவன். இதனால் பகீரதனின்
எண்ணம் தடைபட்டது. மீண்டும் சிவனை வேண்ட, கங்கை
வெளிவந்தது.

அதன்பின் கங்கை 'ஜன்ஹு' என்னும் முனிவரின் ஆசிரமத்தை
நாசப்படுத்தியது. முனிவர் 'ஜன்ஹு' தவசக்தியால் கங்கையை
தன் வயிற்றில் அடக்கினார். மீண்டும் பகீரதன் எண்ணம்
தடைப்பட்டது.

தன் நிலையைச் சொல்லி உதவிட வேண்டினான் பகீரதன்.
முனிவரும் தன் காது வழியாக கங்கையை வெளிப்படுத்தினார்.
அதன் பின் கங்கை இமயமலையிலிருந்து கீழிறங்கி பகீரதனின்
முன்னோருக்கு பலன் அளித்தது.

வற்றாத ஜீவநதியான இது மனித சக்திக்கு அப்பாற்பட்டு
வானுலகில் இருந்து பூமிக்கு வந்தது பகீரதனின் விடாமுயற்சியால்
தான். இதை 'பகீரதப் பிரயத்தனம்' என்கிறார்கள்.
-
-------------------
நன்றி= தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Empty Re: பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

Post by ayyasamy ram Fri Dec 13, 2019 12:33 pm

பகீரதப் பிரயத்தனம்! கங்கை பாகீரதியான கதை!
-
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை
யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம்
புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக்
கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.

குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக
கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக்
கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து
வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள்.

ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.

அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச
சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன
தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே
இல்லை.

பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு
வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக
நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம்
செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும்
பூமிக்கு வரச் சம்மதித்தாள்.

ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி
பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள்.
உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான்
இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.

உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார்.
சிவனார் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள் புரிய
திருவுளம் கொண்டார்.

அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையை தன்
சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார்.
பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி
அடைந்தனர் என்கிறது புராணம்.

அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு
‘பாகீரதி’ என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.


இதனால்தான் மிகப்பெரிய காரியங்களைச் செய்யும் போது,
பகீரதப் பிரயத்தனம் என்று சொன்னார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ, முன்னோர்கள் சில பாவங்களைச் செய்து,
அது இன்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரலாம் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் கங்கையில் நீராடினால், பாவங்கள் அனைத்தும்
தொலையும் என்று சொல்லிவைத்தார்கள் ஆச்சார்யர்கள்.


பண்டிகை நாள், கிழமை, கிரகங்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு,
எவரொருவர் கர்ம சிரத்தையுடன் பகவானை வேண்டுகிறாரோ,
அவர்களுக்கு முன்னோர் வழி வந்த பாவங்கள் அனைத்தும் அகலும்
என்பது ஐதீகம். அதேபோல், முன்னோர் ஆராதனையை உரிய முறையில்,
உரிய தினங்களில் செய்து வந்தால், நாமும் நம் சந்ததியினரும்
புண்ணியங்கள் செய்யப் பெற்றவர்களாக, சந்துஷ்டியுடன்,
இறைபலத்துடன் இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப்
பெருமக்கள்!

இந்த விஷயங்களுக்கு பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்யத்
தேவையில்லை. மிக எளிமையானதுதான் என்பதை நாம்
உணர்ந்திருக்கிறோம்தானே!

வி.ராம்ஜி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Empty Re: பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

Post by krishnaamma Fri Dec 13, 2019 1:12 pm

ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.


இப்பொழுதுதான் பாகவதம் படித்தேன் ......இதே அத்தியாயம்... இதை படியுங்கள் உண்மை புரியும் புன்னகை
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? UACkhwQTAGvGtJebfnfQ+57f14983-d509-4aff-b80b-9a34d34dfb04


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Empty Re: பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

Post by krishnaamma Fri Dec 13, 2019 1:13 pm



பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 4xsmebEQ1SFJAtkgwW3Y+0254b0f0-a7e2-4ceb-8f2a-a54ce1041b21


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Empty Re: பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

Post by krishnaamma Fri Dec 13, 2019 1:14 pm

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 0sbsSczQ3SwR82r3HhuA+596a4300-6f03-4f52-83ba-ff450f5d5d08


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Empty Re: பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

Post by ayyasamy ram Fri Dec 13, 2019 1:29 pm


ஸ்ரீமத் பாகவதம்- ரஸாம்ருதம்..
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Empty Re: பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum