Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
3 posters
Page 1 of 1
திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
![திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் 201911301510588508_Madhya-Pradesh-woman-inspector-poses-as-bride-to-nab-murder_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2019/Nov/201911301510588508_Madhya-Pradesh-woman-inspector-poses-as-bride-to-nab-murder_SECVPF.gif)
-
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியை சேர்ந்தவன்
பால்கிஷ்சன் சவ்பே.
இவன் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய தாதாவாக இருப்பவன்.
இவன் மீது அந்த மாநிலத்தில் மட்டும் 16 கொலை வழக்குகள்
உள்ளன.
உத்தரபிரதேசத்திலும் இவன் கைவரிசை காட்டி வந்தான்.
அம்மாநிலத்தில் பால்கிஷ்சன் மீது பல கொள்ளை வழக்குகள்
உள்ளன. இதனால் அவனை பிடிப்பதற்கு மத்தியபிரதேச-
உத்தரபிரதேச மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி
வந்தனர்.
இரு மாநில எல்லைப்பகுதியில் நடமாடிய அவனை போலீஸ்காரர்களால்
பிடிக்க முடியவில்லை. அவனால் சத்தர்பூர் பகுதியில் சட்டம்- ஒழுங்கு
பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டபடி இருந்தது. இதனால் அவனை நூதனமான
முறையில் பிடிக்க பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முடிவு செய்தார்.
அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் மாதவி அக்னி கோத்திரி.
28 வயதாகும் அவர் பல்கலைக்கழக அளவில் விளையாட்டு வீராங்கனையாக
திகழ்ந்தவர். அவர் முதல் திட்டமாக தாதாவாக வலம் வந்த பால்கிஷ்சனின்
பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்.
அப்போது தாதா பால்கிஷ்சன் பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமானவன்
என்பது தெரியவந்தது. அதோடு அவன் பேஸ்புக்கில் தனக்கு என ஒரு பக்கத்தை
உருவாக்கி பெண்களுடன் பேசி வருவதையும் கண்டு பிடித்தார்.
உடனே அந்த பேஸ்புக் பக்கம் மூலம் தாதா பால்கிஷ்சனிடம் பெண்
சப்-இன்ஸ்பெக்டர் மாதவி அக்னி கோத்திரி தொடர்பு கொண்டார்.
அவர் தனது பெயரை ராதா என்று கூறி அறிமுகம் செய்தார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தான் சாதாரண வேலை ஒன்றை பார்த்து
வருவதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பால்கிஷ்சனிடம்
சாமர்த்தியமாக பேசி அவனது தொலைபேசி எண்ணையும் வாங்கினார்.
செல்போனில் மணிக்கணக்கில் பால்கிஷ்சனிடம் அவர் உருக உருக பேசினார்.
இதனால் பால்கிஷ்சன் மனம் தடுமாறியது. எதிர்முனையில் பேசுவது பெண்
சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் அவன் பெண் மோகத்தில் விழுந்தான்.
“ராதா உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்றான்.
இதைக்கேட்டதும் சப்-இன்ஸ்பெக்டர் மாதவி, “நானும் உங்களை திருமணம்
செய்து கொள்ள தயார்” என்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பால்கிஷ்சன்,
“இன்றே உன்னை சந்தித்து பேச வேண்டும், உடனே வா” என்று தெரிவித்தான்.
அவன் உத்தரபிரதேச - மத்தியபிரதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள
ஒரு கோவிலை குறிப்பிட்டு அங்கு வரும்படி மாதவியிடம் கூறியிருந்தான்.
உடனடியாக அந்த கோவில் பகுதியில் சாதாரண உடையில் போலீஸ்காரர்களை
மாதவி நிறுத்தினார்.
பிறகு அந்த கோவிலுக்கு புறப்பட்டு சென்று தயாராக நின்றார்.
பால்கிஷ்சனிடம் போனில் தொடர்பு கொண்டு, “நான் இளம்சிவப்பு நிறத்தில்
சல்வார்-குர்தா அணிந்து இருக்கிறேன், எளிதாக என்னை கண்டுபிடித்து
விடலாம்” என்று கூறினார்.
அதை நம்பி தாதா பால்கிஷ்சன் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக வந்தான்.
காதலியை சந்திக்கப் போகிறோம் என்ற ஆசையில் பூங்கொத்து, இனிப்புகளும்
வாங்கி வந்திருந்தான்.
மாதவியை அவன் நெருங்கிய அடுத்த நிமிடம் சாதாரண உடையில் இருந்த
போலீசார் குபீரென பாய்ந்து அவனை அமுக்கி பிடித்து கைது செய்தனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத தாதா பால்கிஷ்சன் அதிர்ச்சி அடைந்தான்.
அப்போது இளம்சிவப்பு சல்வார் உடையில் வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாதவி
சிரித்தபடியே, “ராதா வந்துவிட்டேன்” என்றார். அப்போது தாதா பால்கிஷ்சன்
அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான்.
நூதனமான முறையில் திருமணம் செய்வதாக ஏமாற்றி தாதாவை கைது செய்த
சப்-இன்ஸ்பெக்டர் மாதவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த
வண்ணம் உள்ளன.
-
--------------------------
மாலைமலர்
Re: திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
ராதா என்றதும் கிஷன் மயங்காமல் இருப்பாரா என்ன?
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
மேற்கோள் செய்த பதிவு: 1308663T.N.Balasubramanian wrote:ராதா என்றதும் கிஷன் மயங்காமல் இருப்பாரா என்ன?
ரமணியன்
அதுதானே?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
நல்ல திரில்லிங் படத்துக்கான கதை போல் இருக்கிறது
..அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி
» ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி
» ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|