புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_m10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10 
31 Posts - 79%
heezulia
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_m10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_m10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_m10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_m10பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2019 7:03 am

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது 201911180338495007_Parliament-meets-today-in-a-hectic-political-environment_SECVPF
-
புதுடெல்லி,

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி, கடந்த மே மாத இறுதியில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சியில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலங்களை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கண்காணிப் பின் கீழ் கொண்டு வந்தது.


மேலும், இந்த கூட்டத்தொடரில் ‘முத்தலாக்’ தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக சமீப காலத்தில் இல்லாத வகையில் மக்களவையில் 35 மசோதாக்களும், மாநிலங்களவையில் 32 மசோதாக்களும், இரு சபைகளிலும் 30 மசோதாக்களும் நிறைவேறின.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், இன்று தொடங்குகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா விலகிய பின்னர் நடக்கிற முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தொடர், பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், காஷ்மீர் மாநில பிரிவினைக்கு பின்னர் அங்கு தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரம், பிரியங்கா காந்தி செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் தற்கொலை என பல பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்வதற்கு அரசு தரப்பும் தயாராக உள்ளது.

இதனால் இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்ததற்காக கொண்டு வந்த அவசர சட்டத்துக்கும், இ-சிகரெட்டை தடை செய்து கொண்டு வந்த அவசர சட்டத்துக்கும் முறையான சட்ட மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அத்துடன் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கான குடியுரிமை (திருத்தம்) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த கூட்டத்தொடரையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் சார்பில் டெல்லியில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 27 கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “சபையின் மிக முக்கிய வேலை, விவாதிப்பதுதான்” என கூறினார். முதல் கூட்டத்தொடரைப் போன்று குளிர்கால கூட்டத்தொடரும் பலனுள்ள விதத்தில் அமைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக நடத்துகிற விவாதங்கள்தான், அதிகார வர்க்கத்தினரை உஷார் நிலையில் வைத்திருக்கும் எனவும் அவர் கூறினார்.

காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி, அவரை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால் அரசு தரப்பில் அதற்கு உறுதியான பதில் தரப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகி உள்ள நிலையில், அதன் உறுப்பினர்களுக்கு இரு சபைகளிலும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன தினம் ஆகும். இதையொட்டி அன்றைய தினத்தில் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ந் தேதி முடிகிறது. இந்த கூட்டத்தொடரில் விவாதங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பஞ்சம் இருக்காது.
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக