Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
5 posters
Page 1 of 1
முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
-
சென்னை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பாடல்களை பாடி அசத்தினார்.
விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் பரமக்குடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்குவதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதற்கான காசோலையை அவருடன் இணைந்து ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் வழங்கினர்.
அப்போது கமல்ஹாசன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். அதற்கான விதையே பரமக் குடியில் தூவியிருக்கிறோம். படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கிறார்கள். குறிப்பாக என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் எந்த வேலைக்கும் தயாராக இருக்கும் சூழல் நிலவுகிறது. அது மாறவேண்டும். அவர்கள் உயர வேண்டும் என்பதற்கான ஆரம்பமே இது’ என்றார்.
Re: முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர முடியாது. 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல. அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் கூலியாக கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம்.
ஒரு கவுரவமிக்க குடும்பம் கமல்ஹாசனுடையது. ஆனால் அதையெல்லாம் விட்டு சினிமாவில் அவர் சாதித்துள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்திருக்கிறேன். அந்த பையன் என்னமா நடிக்கிறான் என்று என்னிடம் பலர் சொல்ல, ‘டூரிங் டாக்கீஸ்’ சென்று பார்த்தேன். அந்த குழந்தையுடன், படம் பார்த்த இந்த குழந்தையும் வளர்ந்து படத்திலும் இணைந்தது அதிசயம்.
கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன். வியந்து பிரமித்திருக்கிறேன். ஏன் பல நேரங்களில் பொறாமை கூட பட்டிருக்கிறேன். கமல்ஹாசன் நடித்தபோது ஒரு சீனில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஒரு துணியை எடுத்து காயத்தை கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்தார். அவர் மகா நடிகன். நடமாடும் பல்கலைக்கழகம். எங்கெங்கு எந்த விஷயம் கிடைத்தாலும் ஆராய்ந்து எடுப்பார்.
ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்கு சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?. இந்த ரஜினிக்கே அது புரியும்போது எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. எங்களை பயன்படுத்தி அவரவர் கருத்துக்களை திணித்து எங்களை பிரிக்க முடியாது. படங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொண்டது இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள்.
“2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது.
நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ‘எங்கள் (ரஜினிகாந்துடன்) சினிமா பாணி, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. 43 ஆண்டுகள் காப்பாற்றி விட்டோம். எஞ்சிய காலங்களிலும் அதை காப்பாற்றுவோம். அன்பு தான் வாழும். அதுவே ஜெயிக்கும். எதிர்காலம் எங்களுக்கு என்ன வழங்கும் என்பது தெரியாது. ஆனால் கடந்த காலம் எங்களுக்கு அழகான நட்பை தந்திருக்கிறது. எங்கள் நட்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்றார்.
தினத்தந்தி
இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர முடியாது. 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல. அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் கூலியாக கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம்.
ஒரு கவுரவமிக்க குடும்பம் கமல்ஹாசனுடையது. ஆனால் அதையெல்லாம் விட்டு சினிமாவில் அவர் சாதித்துள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்திருக்கிறேன். அந்த பையன் என்னமா நடிக்கிறான் என்று என்னிடம் பலர் சொல்ல, ‘டூரிங் டாக்கீஸ்’ சென்று பார்த்தேன். அந்த குழந்தையுடன், படம் பார்த்த இந்த குழந்தையும் வளர்ந்து படத்திலும் இணைந்தது அதிசயம்.
கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன். வியந்து பிரமித்திருக்கிறேன். ஏன் பல நேரங்களில் பொறாமை கூட பட்டிருக்கிறேன். கமல்ஹாசன் நடித்தபோது ஒரு சீனில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஒரு துணியை எடுத்து காயத்தை கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்தார். அவர் மகா நடிகன். நடமாடும் பல்கலைக்கழகம். எங்கெங்கு எந்த விஷயம் கிடைத்தாலும் ஆராய்ந்து எடுப்பார்.
ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்கு சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?. இந்த ரஜினிக்கே அது புரியும்போது எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. எங்களை பயன்படுத்தி அவரவர் கருத்துக்களை திணித்து எங்களை பிரிக்க முடியாது. படங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொண்டது இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள்.
“2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது.
நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ‘எங்கள் (ரஜினிகாந்துடன்) சினிமா பாணி, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. 43 ஆண்டுகள் காப்பாற்றி விட்டோம். எஞ்சிய காலங்களிலும் அதை காப்பாற்றுவோம். அன்பு தான் வாழும். அதுவே ஜெயிக்கும். எதிர்காலம் எங்களுக்கு என்ன வழங்கும் என்பது தெரியாது. ஆனால் கடந்த காலம் எங்களுக்கு அழகான நட்பை தந்திருக்கிறது. எங்கள் நட்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்றார்.
தினத்தந்தி
Re: முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
அம்சம் இருந்தது அரசு ஆள .அவர் ஏன் நினைத்து பார்க்கனும். எத்தனையோ பேர் பொறாமை கொள்ளகிறார்கள் . அவரின் செயல் திறமைகளை கண்டு . முதல்வர் ஆசை கொண்டும் . பழனி சாமிக்கு பழனி ஆண்டவர் துணை நிற்கிறார் வாழ்க பல்லாண்டு முதல்வராக என வாழ்த்தலாம் அவரை......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
பலனை எதிர்பார்க்காதே கடமையை செய் என்ற கீதா உபதேசம் படி செயலாற்றினார் இறஐவன் அருள் கிடைத்தது. முதல்வரானார். பலர் பேராசை கொண்டு நாளை நான் முதல்வர் பிரதமர் என்று கொக்கரிக்கிறார்கள். இறைவன் கவனித்து கொண்டுதான் உள்ளார் ....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
இந்த பேச்சை கேட்டு கமலே ஒரு வினாடி அதிர்ச்சியாகியிருப்பார் ,
நம்ம சூப்பரு எடப்பாடியை புகழுறாரா இல்ல கமல வாழ்த்துறாரா என்று ஆனானப்பட்ட கமலுக்கே குழப்பமா இருந்திருக்கும்
நம்ம சூப்பரு எடப்பாடியை புகழுறாரா இல்ல கமல வாழ்த்துறாரா என்று ஆனானப்பட்ட கமலுக்கே குழப்பமா இருந்திருக்கும்
Last edited by ராஜா on Wed Nov 20, 2019 9:26 pm; edited 1 time in total
Re: முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1307994ராஜா wrote:இந்த பேச்சை கேட்டு கமலே ஒரு வினாடி அதிர்ச்சியாகியிருப்பார் ,
நம்ம சூப்பரு எடப்பாடியை புகழுறாரா இல்ல கமல வாழ்த்துறாரா என்று ஆனானப்பட்ட கமலுக்கே குழப்பமா இருந்திருக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
அப்போது கமல்ஹாசன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். அதற்கான விதையே பரமக் குடியில் தூவியிருக்கிறோம். படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கிறார்கள். குறிப்பாக என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் எந்த வேலைக்கும் தயாராக இருக்கும் சூழல் நிலவுகிறது. அது மாறவேண்டும். அவர்கள் உயர வேண்டும் என்பதற்கான ஆரம்பமே இது’ என்றார்.
ம்ம்.. அதைச்செய்யுங்கள் முதலில் , திறனை வளர்த்துக்கொள்ளட்டும்.... தானாக வேலை கிடைக்கும்...ஒரு பெயருக்கு எஞ்சினியர் என்று இருந்தால் வேலை கிடைக்காது...........எல்லாவருடமும் அந்தந்த வருடமே பாஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து, ஊன்றிப் படிக்கவேண்டும். வேலை கிடைப்பதற்கான தகுதியை அவரவர்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ம்ம்.. அதைச்செய்யுங்கள் முதலில் , திறனை வளர்த்துக்கொள்ளட்டும்.... தானாக வேலை கிடைக்கும்...ஒரு பெயருக்கு எஞ்சினியர் என்று இருந்தால் வேலை கிடைக்காது...........எல்லாவருடமும் அந்தந்த வருடமே பாஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து, ஊன்றிப் படிக்கவேண்டும். வேலை கிடைப்பதற்கான தகுதியை அவரவர்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்: நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|