ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நம்பிக்கை!

Go down

எது நம்பிக்கை! Empty எது நம்பிக்கை!

Post by ayyasamy ram Sun Nov 10, 2019 2:18 pm

எது நம்பிக்கை! E_1572607103

நம்பிக்கை! இதன் வலிமையை, வர்ணிக்க முடியாது.
அதேசமயம், நம்பக் கூடாதவர்களை நம்புவதும்,
நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருப்பதும், தீராத
இன்னல்களை தரும்.

துாய்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் கதை இது:

மாளவ தேசம், சந்திர வம்சத்தில் தோன்றியவர்,
சத்திய கீர்த்தி எனும் மன்னர். வீரம், படை பலம், நிர்வாகம்
எனும் பலவற்றிலும் திறமைசாலியாக இருந்தார்; அன்பு-,
அடக்கம் மற்றும் -சிவ பக்தியிலும் தலைசிறந்து விளங்கினார்.

தினமும் அதிகாலையில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்து,
சிவ பூஜை முடித்த பின், அன்றாட அரசாங்க வேலைகளை
கவனிப்பார்.

ஒருநாள்… வழக்கப்படி, வழிபாட்டை முடித்து, வெளியே வந்தார்,
மன்னர்.

‘புகழ்பெற்ற மன்னா… அறியாமையால், தீவினைகளை செய்த
பெண்ணான நான், பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டு,
கழுத்தில் சுருக்கு இடப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறேன்…
நல்லவனான நீ, இத்துயரில் இருந்து என்னை காப்பாற்று…’ என,
அசரீரி குரல் ஒன்று, வேண்டி அழுதது.

மன்னர் நடுங்கினார்; தன் அருகில் இருந்த குருவான,
வேதசர்மாவிடம், ‘குருநாதா… இவளுக்கு உண்டான துயரம் யாது…
சிவபெருமான் திருவருளால், இவள் துயரம் முழுதும் யான்
போக்குவேன்…’ எனக் கூறினார்.

‘மன்னா… இவளைப் பற்றிய விபரங்களை அறியாமல் பேசி
விட்டாயே… ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’- என்பதற்கு,
இவளே உதாரணம்.

‘போன பிறவியில், கணவனோடு நன்றாக வாழ்ந்து
கொண்டிருந்தவள், அவனை மேலும் வசப்படுத்தும் எண்ணத்தில்,
வசிய மருந்து வைத்தாள். அது அதிகமாக போய், இறந்து போனான்,
கணவன்.

தீய குணங்களின் வசப்பட்டவள், மனம் போனபடி போனாள்.
விளைவு… பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டாள்.

‘இவள் அனுபவிக்க வேண்டிய துயரம், மூன்றில் ஒரு பங்கு தான்
முடிந்திருக்கிறது. இந்த விபரங்கள் எதையுமே அறியாமல், இவளை
காப்பாற்றுகிறேன் என்று சொல்லி விட்டாயே…’ என்று வருந்தினார்,
குருநாதர்.

மன்னர் திகைத்தாலும், ‘குருநாதா… அவள் அனுபவிக்க வேண்டிய
துயரங்கள், இன்னும் நிறைய இருக்கலாம்; இருந்தாலும், ஒரு சிறுதுளி
நெருப்பு, ஏராளமான விறகு குவியல்களை எரிப்பதை போல,
இவளுடைய பாவ குவியல்களை நீக்கும் வழியை, நீங்கள் தான் கூறி,
அருள வேண்டும்…’ என, வேண்டினார்.

‘மன்னா… உன் வார்த்தைகள், என்னை மகிழ்வுறச் செய்கின்றன.
விதி என்று இருந்தால், விதிவிலக்கு என்பதும் உண்டல்லவா…
அதுபோல, அவள் அனுபவிக்க வேண்டிய துயரங்கள் மீதியிருந்தாலும்,
அவற்றை நீக்கும் வழியைச் சொல்கிறேன், கவலையை விடு…

‘கும்பகோணம் எனும் திருத்தலத்திற்கு செல். அங்கே, காவிரியில்
மூன்று நாட்கள் நீராடி, கும்பேசுவரரை பக்தியுடன் வழிபடு…
அதன் பலனை, இவளுக்கு அளி… இவள் துயரம் விலகும்…’ என்றார்.

குருநாதர் சொன்னபடியே, கும்பகோணம் சென்று, அனைத்தையும்
செய்து முடித்தார், மன்னர். தான் செய்த நற்கர்மங்களின் பலனை,
பிரம்ம ராட்ஷசம் பிடித்த பெண்ணுக்கு அளித்தார். அதன் பலனாக,
அப்பெண்ணும் நற்கதி அடைந்தாள்.

நற்குருவின் செயல்கள், அவற்றை செய்ய வேண்டிய சீடனின்
கடமை, செய்யும் நற்செயல்களின் பலனை அடுத்தவருக்கு அளித்து,
அவர்கள் தீவினையை தீர்ப்பது- என, பலவற்றையும் விவரிக்கும்
கதை இது.

பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum