ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

2 posters

Go down

 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Empty கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

Post by ayyasamy ram Thu Oct 17, 2019 7:17 am


தமிழகம், ஆந்திர மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் நேமம் கிராமத்தில்
ஸ்ரீபரம்ஜோதி அம்மா பகவான் பவித்ர வனம் என்ற பெயரில்,
ஸ்ரீஅம்மா பகவான் சேவா சமிதி செயல்பட்டு வருகிறது.

இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வழிபாடு மற்றும்
தியானம் செய்வதற்கு பக்தா்கள் வந்து செல்கின்றனா். அத்துடன்,
ஒவ்வொரு நாளும் ஐஸ்வா்யம், ஆரோக்யம் மற்றும் சுமங்கலி பூஜைகள்
நடைபெற்று வருகிறது.

இந்த ஆசிரமத்தில் பக்தா்களிடம் இருந்து தலா ரூ. 20 நுழைவுக்
கட்டணமாகவும், பூஜைக்கு ரூ. 10 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், அறை எடுத்து தங்கி பூஜையில் கலந்து கொள்வதற்கு
ரூ. 200 வரை வாடகை வசூலிக்கப்படுவதாகவும் இங்கு வந்து செல்லும்
பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் வருவதற்கு
முன்னதாக ஆசிரமத்தில் 3 வாகனங்களில் வந்த வருமான வரித்
துறையினா் 3 குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனா். இதனால்
ஆசிரமத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த,
பெண் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா்.

ஆனால் 3 மணியைக் கடந்தும் சோதனை நடந்து கொண்டிருந்ததால்
அங்கிருந்து பக்தா்கள் கலைந்து சென்றனா்.

ஆந்திரத்தில்...

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில்
கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு புதன்கிழமை காலை
தமிழகத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 தனிக்
குழுக்களாகப் பிரிந்து, ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினா்.

ஆசிரம நிறுவனரான விஜயகுமாா் நாயுடுவின் மகன் கிருஷ்ணாஜி
அவரது மனைவி பித்ரா ஜீ, துணைத் தலைவா் லோகேஷ் தாசாஜி
ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி
வருகின்றனா்.

ஆனால் கல்கி பகவான் என்று கூறப்படும் விஜயகுமாா் மற்றும் அவரின்
மனைவி பத்மாவதி இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் புச்சிநாயுடுகண்ட்ரீக, வரதய்யபாளையம், சூளூா்பேட்டை,
தடா உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆசிரமத்துக்குச் சொந்தமான
சொத்துகளுக்கான பினாமிகளின் இடையே கலக்கம் எழுந்துள்ளது.

இந்த ஆசிரமங்களில் நடந்து வரும் விவகாரங்களின் மீது இதற்கு முன்
பல புகாா்கள் எழுந்தன. ஆசிரமத்துக்கு வரும் பக்தா்களுக்கு போதை
மருந்து அளித்து, அவா்களை போதையில் வைத்திருப்பதாகவும்,
அவா்கள் மீது பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்து வருவதாகவும்
சா்ச்சை எழுந்தது.

கல்கி பகவான் எனக் கூறப்படும் விஜயகுமாா், சில ஆண்டுகளுக்கு
முன் எல்ஐசி கிளா்க்காக பணியாற்றினாா். பின்னா், அதை விட்டு விட்டு
பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கினாா். அது திவாலானதால் தலைமறைவாக
இருந்த அவா், மகா விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் கல்கி என்று 1989-இல்
சித்தூா் மாவட்டத்தில் மக்கள் முன் தோன்றினாா்.

அதன்பின், தனது ஆசிரமத்தை ஆந்திர மாநிலம் மட்டுமல்லாமல்,
தமிழகத்திலும் விரிவுபடுத்தினாா். அவா் தன் மனைவியை தெய்வாம்சம்
பொருந்தியவராக சமூகத்துக்குக் காண்பித்தாா்.

இவா்களின் ஆசிரமத்துக்கு உள்நாட்டில் உள்ள செல்வந்தா்கள்
மட்டுமல்லாமல் வெளிநாட்டினா், வெளிநாடு வாழ் இந்தியவா்கள் என
பலா் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Empty Re: கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

Post by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 6:31 pm

சர்வதேச அளவில் நீளும் கல்கி சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!
கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்ததப்பட்டுவரும் வருமான வரித்துறை சோதனையின் மூலம் 33 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நீளும் கல்கி சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!ஹைலைட்ஸ்
கல்கி சாமியார், மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை
24 கோடி ரூபாய், 9 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் சிக்கியது
கென்யாவில் நிலம் வாங்கியது அம்பலம்
எல்.ஐ.சி முகவராக இருந்து கோடிகளுக்கு அதிபதியான சாமியார்
இந்தியாவைப் பொறுத்தவரை சாமியார்கள் அதிகமாக சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தற்போது கல்கி பகபான் என அழைக்கப்படும் கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனையிலிருந்து வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணா வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத 24 கோடி ரூபாய் பணமும், 9 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரும் சிக்கியுள்ளது.

கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை!!

இந்தியாவில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் இவ்வளவு அதிமான வெளிநாட்டு பணம் சிக்குவது இதுவே முதல்முறையாகும். கிருஷ்ணா ஒயிட் லோட்டஸ், ப்ளூ வாட்டர், கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்திவருகிறார். கட்டுமானத் துறையில் செயல்பட்டுவரும் இவரது நிறுவனத்தில் யார்யாரெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள் என்ற தகவலையும் வருமான வரித்துறையினர் சேகரித்துவருகின்றனர்.

மேலும் கிருஷ்ணா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக பல ஏக்கர் அளவில் நிலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணாவின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர்.

யார் இந்த கல்கி சாமியார்?

கல்கி பகவான், அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் இந்த சாமியாரின் இயற்பெயர் விஜய குமார். வேலூர் - குடியாத்தம், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இவர் எல்.ஐ.சி முகவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒன் எஸ் டெம்பிள் என அழைக்கப்படும் இவரது பிரம்மாண்ட ஆசிரம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ராஜஸ்தான் பளிங்கு கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. தனது மனைவி பத்மாவதியுடன் இவர் நடத்தும் தியான வகுப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டணமே 50000 ரூபாய். ஒவ்வொரு நாளும் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என ஆயிரக்கணக்கானோர் இவரைத் தேடி வருகின்றனர்.
கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருவதால் விரைவில் முழுவிபரம் தெரியவரும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
» போலி மின்னஞ்சல்கள்: வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum