புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
66 Posts - 51%
heezulia
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_m10பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Poll_c10 
6 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Dec 30, 2009 9:35 pm

Thuglak Dec 172009





பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் பழ. கருப்பையா


சிந்திக்கும் வேளையிலே...

மிகப் பழங்காலத்தில் ஜெமினி திரைப்பட நிறுவனம் சந்திரலேகா என்றொரு படம் எடுத்தது. மிகப் புகழ் பெற்ற படம் என்பது
மட்டுமில்லை
; இன்று பார்த்தாலும் சுவை குன்றாதது. அந்தப் படம் வெற்றி பெற்றதற்கு பிரும்மாண்டத் தன்மைதான் காரணம் என்பார்கள். ஆனால் கதைப் பின்னலும், ரஞ்சன் ஏற்ற சசாங்கன் என்னும் கெடுமதியாளனுடைய (Villain) பாத்திரப் படைப்பும்தான் அந்தப் படத்தை இன்றளவும் இளமை மாறாமல் வைத்திருக்கிறது.


பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Karuppaiya


பழ.கருப்பையா



சசாங்கன் தன்னுடைய அண்ணனையும், பெற்றோர்களையும் பாதாளச் சிறையில் அடைத்து விட்டு, முடிசூட்டு
விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பான். மந்திரிகள், படைத் தலைவர்கள், மேற்குடியினர், மக்கள்
என்று எல்லோரும் குழுமியுள்ள அத்தாணி மண்டபத்தில் அரச உடை அணிந்து கொண்டு மிக உருக்கமாகப்
பேசுவான்!


என்னுடைய பெற்றோரின் உடல்நலம் மிகவும் சீர்கெட்டிருக்கின்ற காரணத்தால், அவர்களால் இங்கு வந்து நேரில் ஆசீர்வதிக்க முடியவில்லை. முறைப்படி இந்த மணிமுடியைத் தாங்கியிருக்க வேண்டிய என்னுடைய அண்ணன் அகால மரணமடைந்து விட்டான் - இந்த இடத்தில் சசாங்கனின் குரல் தழு தழுக்கும்; பேச
முடியாமல் உணர்ச்சிவசப்படுவான்; அவை திகைத்துப் போயிருக்கும்!


பிறகு தன்னை ஆற்றுப் படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசுவான்! இப்போது ஆட்சிச் சுமை என் தோள்களில் விழுந்து விட்டது. காலம் எனக்கு விதித்துள்ள கட்டளையை நாட்டுக்காகவும், உங்களுக்காகவும் ஆற்ற வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன்! பேச்சை நிறுத்தி விட்டு, எதையோ எதிர்பார்த்து அவையினரைப் பார்ப்பான் சசாங்கன்! அவர்கள் ஒரு உணர்ச்சியுமில்லாமல் வெறுமனே நின்று கொண்டிருப்பார்கள்.

எரிச்சலுற்ற சசாங்கன் கையைத் தட்டுவான். மறைவிலிருந்து ஓர் இளம் பெண் ஒரு தட்டில் மகுடத்தை வைத்து எடுத்துக் கொண்டு வருவாள்; எல்லாரையும் ஒரு முறை பார்த்து விட்டு அதைத் தானே எடுத்துத் தன் னுடைய தலையிலே சூடிக்கொள்வான்! மீண்டும் மக்களைப் பார்ப்பான்; எந்த உணர்ச்சியுமில்லாமல் நிற்பார்கள்!

உடனே சசாங்கன் முடிசூட்டு விழாக் களிப்பின் அறிகுறியாக, தன்னுடைய கைகளைத் தலைக்கு மேலே தூக்கி தானே தட்டிக் கொள்வான்; சசாங்கனின் படையைச் சார்ந்தவன், கை தட்டி பிறகு அவையோரையும் மிரட்டுவான்; உடனே அவையினர் அனைவரும் அவனைத் தொடர்ந்து கை தட்டுவார்கள்; கை தட்டல் ஓசை விண்ணைப் பிளக்கும். சசாங்கன் தன் ஒரு கையைத் தூக்கி அவர்களை அமைதிப்படுத்தி விட்டுப் பேசுவான்!

இன்று முதல் நானே உங்களுடைய மன்னன்! எல்லா அதிகாரங்களையும் கொண்ட இந்த நாட்டின் சர்வாதிகாரி இப்படிச் சொல்லிவிட்டு அவையோரைப் பார்ப்பான்; அவர்கள் சலனமே இல்லாமல் இருப்பார்கள்.

என்ன...? என்று இரைந்து அதட்டுவான் சசாங்கன்; ஆமாம்... ஆமாம்...! என்று மக்களும் இரைந்து சொல்வார்கள்!

இந்த ஆண்டின் சிறந்த வசனகர்த்தா நானே என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி! கலை உலகம் அமைதியாக இருக்கிறது.என்ன? என்று இரைகிறார் கருணாநிதி.

ஆமாம்... ஆமாம்...! என்று முழக்கமிடுகிறார்கள் முதல் வரிசையினரெல்லாம்!

மந்திரி பரிதி இளம்வழுதி மட்டும் கவலையாக இருக்கிறார். என்னய்யா... உனக்கு மகிழ்ச்சி இல்லையா? கேட்கிறார் முதல்வர்! அதில்லை தலைவா...! இந்த ஆண்டுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்களே...அப்படியானால் அடுத்த ஆண்டுக்கு...! என்று கலங்குகிறார்
மந்திரி பரிதி!


மொத்தமா அறிவிச்சா நல்லா இருக்காதைய்யா...! அடுத்த வருஷத்திற்கு அடுத்த வருஷம் அறிவிச்சுக்குவம்... அடுத்த வருஷமும் நம்ம ஆட்சிதான்யா இருக்கும்! பரிதி முகத்தில்
மகிழ்ச்சி அரும்புகிறது.


இந்த வயதிலும் கருணாநிதிக்கு விருது தேவைப்படுகிறது! அண்ணா விருது அறிவிக்கப்படுகிறது; கருணா நிதியே வாங்கிக் கொள்கிறார்! வசனகர்த்தா விருது அறிவிக்கப்படுகிறது; கருணாநிதியே பெற்றுக் கொள்கிறார்!

முதல்வருக்கு விருது


எல்லாப் புகழும் அல்லாவுக்கே என்று திருக்குரான் சொல்வது போல, எல்லா விருதுகளும்
எனக்கே
என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி!

அரண்மனைக் கோழிமுட்டை, அம்மியையும் உடைக்கும் என்பார்கள்; பராசக்தி வசனத்தை மனப் பாடம் செய்து ஒப்பித்துத்தான் தமிழையே கற்றுக் கொண்டதாக, சந்தை மதிப்பு மிகுந்த கலைஞர்களெல்லாம் பேசுவதைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைகிறார் முதல்வர். தமிழின் மேலெல்லை தொல்காப்பியம் என்பது போய், தமிழின் மேலேல்லையே பராசக்தி வசனம்தான் என்றாகி விட்ட பிறகு, இறும்பூதெய்த மாட்டாரா முதல்வர் கருணாநிதி?

எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய காலம் தொட்டு, ரஜினி கமல் காலம் வரை
ஏறத்தாழ அறுபதாண்டுக் காலம், தான் இந்தத் துறையில் காலூன்றி நிற்பதைப் பற்றிக் கழிபேருவகை
அடைந்திருக்கிறார் கருணாநிதி!


அரசின் தலையாய வசனகர்த்தா விருதை வழங்கி மனங்கொள்ளாமல் பாராட்ட ரஜினிக்கும், கமலுக்கும் மனம் இருக்கிறதே என்பதற்காக, அவர்கள் ஏன் தங்கள் படங்களில் இந்த அரசு விருது பெற்ற வசனகர்த்தாவைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கேட்டால், அது மிகவும் இடக்கான கேள்வி! அரசின் அளவுகோல் கருணாநிதியைச் சார்ந்தது; சந்தையின் அளவுகோல் மக்களைச் சார்ந்தது அல்லவா?


அழகிரி மகன், ஸ்டாலின் மகன், கலாநிதி மாறன், அமிர்தம் என்று இவருடைய ஆட்சியதிகாரம் காரணமாகச் சாக்குப் பைகளில் பணத்தைக் குவித்துத்தமிழ்த் திரைப்படத் துறையையே வளைத்து வைத்திருக்கிற இவருடைய பேரன்களும் மருமகன்களும் கூட, அரசு விருது பெற்ற கருணாநிதியை வசனம் எழுதச் சொல்வதில்லை என்பது மிகவும் இரங்கத்தக்கதுதான்!

விருதுகள்தாம் என்றில்லை; பட்டங்களுக்கும் கூட ஆலாய்ப் பறப்பார் கருணாநிதி! அவற்றை இவரே அறிவிப்பதுண்டு; இவருடைய விருப்பம் தெரிந்து பிறர் அறிவிப்பதுமுண்டு. கருணாநிதி முதல் தடவை முதலமைச்சராக வந்தபோது, அவருடைய விருப்பம் தெரிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து, மிகப் பெரிய அவதூறுக்கு உள்ளானது.

ஓ.பி. ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, இராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் என்று எல்லாருமே முதலமைச்சர்களாக இருந்தவர்கள்தாம். அவர்கள் காலத்திலும் இதே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருந்தது. அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்பதாலா அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கவில்லை?
அவர்களுக்கெல்லாம் மலிவான ஆசைகள் இல்லாத காரணத்தால், பல்கலைக்கழகங்கள் பாடம் சொல்லிக்
கொடுக்கின்ற வேலைகளை மட்டுமே பார்த்தன.


கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் ஆவதற்கு உதயகுமார் என்னும் மாணவனின் உயிர் காவு கொடுக்கப்பட்டது. பொங்கி எழுந்த மாணவர் திரளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். உதயகுமாரின் பெற்றோர் அவனைத் தம் மகனில்லை என்று மறுத்தனர். எவ்வளவு அசிங்கங்கள் அரங்கேறின!

கல்லூரியில் வாத்தியார் வேலை பார்க்கிறவனுக்குத்தான் அந்தப் பட்டம் வேண்டும்; பட்டத்தை வழங்குகின்ற வேந்தர்களும், துணை வேந்தர்களும் என்னுடைய வீடுகளில் முறை வைத்துக் கொண்டு முறைவாசல் பார்க்கிறபோது, எனக்கு அந்தப் பட்டத்தால் ஆகப் போவதென்ன? என்று உதறக் கருணாநிதியால்
முடியவில்லை! பள்ளிக்கூடம் தன்னைப் புறந்தள்ளிய கணக்கை, பல்கலைக்கழகத்தை விட்டு நேர்
செய்து கொள்ள நினைத்தார்!


அறிவு, கல்லூரிப் பட்டங்களால் அளக்கப்பட வேண்டிய ஒன்றன்று என்னும் சிந்தனை அவருக்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை! ஆகவே எல்லாப் பட்டங்களின் மீதும், எல்லா விருதுகளின் மீதும் அவர் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறார். அதனால் அவற்றைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும் அவருக்கு அசிங்கமாகப் படவில்லை!

பெரிய பதவிகள்; மலிவான ஆசைகள்!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக