ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது

Go down

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது Empty காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது

Post by ayyasamy ram Wed Oct 02, 2019 6:04 am

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது 201910020358498280_Which-was-in-the-hands-of-Congress-The-post-of-mayor-was_SECVPF
-
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் பெங்களூரு மாநகராட்சி
அலுவலகத்தில் உள்ள கவுன்சில் கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
தேர்தலை மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா முன்னின்று நடத்தினார்.

மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் கவுதம்குமார் (ஜோகுபாளையா வார்டு), பத்மநாபரெட்டி (காசரக்கனஹள்ளி) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில்
சத்யநாராயணா (தத்தாத்ரேயா கோவில்) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் பத்மநாபரெட்டி கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து களத்தில் பா.ஜனதா சார்பில் கவுதம் குமாரும், காங்கிரஸ் சார்பில் சத்யநாராயணாவும் இருந்தனர். கவுன்சிலர்கள் கைகளை உயர்த்தியும், கையெழுத்திட்டும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

அதன்படி மேயர் பதவிக்கு கவுதம்குமாருக்கு 129 ஓட்டுகளும், சத்யநாராயணாவுக்கு 112 வாக்குகளும் கிடைத்தன. பா.ஜனதா வேட்பாளரான கவுதம்குமார், 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதே போல் துணை மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராம்மோகன்ராஜ் (பொம்மனஹள்ளி) 127 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களம் கண்ட கங்கம்மா ராஜண்ணா(சக்திகணபதிநகர்) 116 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய தேர்தல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தல் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, மந்திரிகள் சுரேஷ்குமார், சோமண்ணா, ஆர்.அசோக், எம்.பி.க்கள் பி.கே.ஹரிபிரசாத், பி.சி.மோகன், ராஜூகவுடா, ஹனுமந்தய்யா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் பெங்களூருவை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

மொத்தம் உள்ள 257 வாக்காளர்களில் 249 பேர் இந்த தேர்தலில் பங்கேற்றனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஜெய்ராம் ரமேஷ் எம்.பி., டி.கே.சுரேஷ் எம்.பி. உள்பட 8 பேர் வரவில்லை. தேர்தல் பணி தொடங்கிய பிறகு ஜனதா தளம்(எஸ்) கவுன்சிலர்கள் மஞ்சுளா, வாசுதேவ் ஆகியோர் தேர்தலை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர்.

மேயர் தேர்வானது குறித்து அறிவிக்கப்பட்ட பிறகு முன்னாள் மேயர் கங்காம்பிகே, வெள்ளி சாவியை புதிய மேயர் கவுதம்குமாரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கவுதம்குமார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வளர்ந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். ஜெயின் மதத்தை சேர்ந்த அவர் அடிப்படையில் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதா மேயர் பதவிக்கு பத்மநாபரெட்டி, சீனிவாஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் கவுதம்குமாரின் பெயரை பா.ஜனதா தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவுப்படி மேயர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கவுதம்குமார் பெங்களூரு மாநகராட்சியின் 53-வது மேயர் ஆவார். 4 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. 43 வயதாகும் புதிய மேயர் கவுதம்குமார் பி.காம் படித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வரும் மேயர் கவுதம்குமார், 2013-14-ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி கணக்கு குழு நிலைக்குழு தலைவராக பணியாற்றினார். 47 வயதாகும் துணை மேயர் ராம்மோகன்ராஜ் சிவில் என்ஜினீயர் ஆவார்.

பெங்களூரு மாநகராட்சி மன்றத்திற்கு அடுத்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு சபை கூடியதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் எம்.எல்.சி. “கர்நாடக நகர-மாநகராட்சிகள் சட்டப்படி மேயர் பதவி காலம் முடிவடையும் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

அதன்படி இந்த தேர்தலை கடந்த மாதம்(செப்டம்பர்) நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கு தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்“ என்றார்.

அதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி ஹர்ஷகுப்தா, “இந்த தேர்தல் நடத்துவது குறித்த அனைத்து விவரங்களும் உங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டே தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு விவாதத்திற்கு இடமில்லை. தேர்தல் மட்டுமே நடைபெற அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அதை நீங்கள் உரிய இடத்தில் முறையிடலாம்“ என்றார்.

அப்போது மீண்டும் பேசிய ரமேஷ்குமார், “மேயர் தேர்தல் நடைபெறுவது சட்டவிரோதம். இதை ஏற்க முடியாது“ என்று கூறினார். அதற்கு முன்பு தேர்தல் அதிகாரி, 4 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது“ என்று அறிவித்தார். 8 நிலைக்குழு உறுப்பினர் தேர்தலை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது Empty Re: காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது

Post by Guest Wed Oct 02, 2019 2:11 pm

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது 1571444738
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றால் ,மக்களுக்கு ஒரு சமயம் வெறுப்பு வந்துவிடும்.அதேபோல் பதவியில் இருப்போர் பக்கம் உறுப்பினர்கள் மாறுவதும் தாவுவதும் சாதாரணம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது:ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்
» உ.பி. உள்ளாட்சி தேர்தலில் 16-ல் 14 மேயர் - பா.ஜ.க கைப்பற்றியது.
» காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
» ‘மாண்புமிகு’ மேயர் என்றழைக்க தொடங்கிய சென்னை மாநகராட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum