புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_m10இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 29, 2019 7:50 pm

இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? 065931_subadra-saidu2%20(1)

வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் பிரிந்தவர்கள் மீண்டும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒன்றுசேர்ந்த பல செய்திகளை நாம் பார்த்து வருகின்றோம். அந்தவகையில் ஒரு உருக்கமான நிகழ்வு கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

வெளிச்சம் தந்த வெளிச்சம்:

கேரளாவில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சையது என்ற முதியவர் கொண்டு வரப்பட்டார். முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் அப்துல் கரீம், முதியவர் சையதிடம் அவரைப் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருந்த அறையின் கதவினை திறந்துகொண்டு வயதான பாட்டி ஒருவர் உள்ளே வருகிறார். தனக்கு நீண்ட நாட்கள் அறிமுகமான நெருக்கமான ஒரு குரல் கேட்கிறதே என ஆவலுடன் பக்கத்து அறையில் இருந்து அங்கு சென்றார்.

உள்ளே அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும் அந்தப் பாட்டிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது. அது ஆனந்த பெருமூச்சு. முதியவர் சையதை பார்த்ததும் அவர் உறைந்து போய்விட்டார். சையதும் அந்த பாட்டியை கண்கொட்டாமல் அதிர்ச்சியுடன் பார்த்தார். 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் போது, சுபத்ரா பாட்டிக்கு 88 வயது, சையதுக்கு 90 வயது. அவர்கள் இணைந்தது திரிச்சூரின் கொடுங்கல்லூரில் வெளிச்சம் என்ற முதியோர் இல்லத்தில்.

இதனைக் கண்ட பொறுப்பாளர் கரீமுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் இருவரையும் பார்த்து ஒருவருக்கொருவர் ஏற்கனவே தெரியுமா என கரீம் கேட்கிறார். அதற்கு, “எனக்கு அவரைத் தெரியும் என்றா கேட்கிறீர்கள்?. அவர்தான் என்னுடைய கணவர்” என்று பளிச்சென்று பாட்டி சுபத்ரா கூறினார். 36 வருடங்களுக்குப் பிறகு கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். அதுவும் எந்த உதவியும் அற்ற அந்தத் தள்ளாத வயதில். இருவருக்கும் விவரிக்க முடியாத ஆனந்தம்.

அவர்கள் இருவரும் முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தது தனித்தனி கதை. மருத்துவமனை ஒன்றில் சுபத்ரா பாட்டி சிகிச்சை பெற்று வந்துள்ளார். யாரும் அவரைக் கவனிக்க வராததால் அவரை போலீசார் அழைத்து வந்து முதியோர் இல்லத்தில் விட்டனர். யாருமற்ற அனாதையாக கடை ஒன்றில் படுத்துக்கிடந்த சையது தாத்தாவை முதியோர் இல்லத்துக்கு கொண்டு வந்தனர். இவர்களது கதையை நியூஸ் மினிட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பொறுப்பாளர் கரீம் விரிவாக கூறியுள்ளார்.

இளம் வயதில் விதவை..

இவர்களுடைய திருமண வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அழகானது. முற்போக்கானது. சுபத்ரா பாட்டி தன்னுடைய இளம் வயதில் ஒரு டீன்ஏஜ் வாலிபரை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு பெண், ஒரு ஆண். ஆனால், அவருடைய கணவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிடுகிறார். இரண்டு குழந்தைகளுடன் தந்தையின் வீட்டில் தஞ்சம் அடைகிறார் சுபத்ரா. அவருடைய தந்தையின் நண்பர்தான் சைய்து.

சுபத்ரா வீட்டிற்கு சையத் அடிக்கடி வந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் சையதை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தன்னுடைய தந்தையிடம் சுபத்ரா கூறுகிறார். தந்தையின் ஆசிர்வாதத்துடன் அவர்களது திருமணம் நடந்தது. அது ஒரு பதிவு திருமணம். அப்போது சுபத்ராவுக்கு வயது 23. சுபத்ராவும், சையதும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதனால், அது ஒரு ‘இண்டெர் காஸ்ட்’ திருமணம் (inter-caste marriage). அவர்கள் இருவரும் 29 வருடம் இணைந்து வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

29 வருட வாழ்க்கைக்கு பின் பிரிவு

இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? 72342
உன்னை நான் பார்த்து பல ஆண்டுகள் இருக்க
உன் மலர் முகம் மட்டும் என் நினைவில் இருக்க..................


அப்போது, சுபத்ராவுக்கு 54 வயது. அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிடுகிறது. ஆனால், சொந்த தயவில் வாழ வேண்டிய நிலையில் சையது - சுபத்ரா தம்பதி இருந்தனர். சையது வேலை தேடி கேரளாவை விட்டே வெளியே செல்கிறார். வட இந்தியாவிற்கு சென்று வேலை தேடிய அவர் ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகிறார். அவரால் திரும்பி வரவே முடியவில்லை. இளம் வயதில் முதல் கணவனை இழந்த தருணத்தில் முதல் சோதனையை சந்தித்த சுபத்ராவுக்கு, இது இரண்டாவது சோதனைக்காலம். இருவரும் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போனது. அன்றைக்கு இருவரிடமும் செல்போன் கிடையாது. அதேபோல், உறவினர்கள் என்று கூட அவர்களுக்கு யாரும் கிடையாது.

சுபத்ராவை தொடர்ந்த துயரக் கதை

அத்துடன், வாழ்க்கையின் துயரம் சுபத்ராவை விட்டுவிடவில்லை. சையது திரும்பி வராதநிலையில் கொஞ்ச காலம் தன்னுடைய பிள்ளைகள் வீட்டில் காலம் தள்ளிக் கொண்டிருந்தார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் மகன், மகள் இருவரும் இறந்துவிட்டார்கள். அப்போது, தன்னுடைய வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். சிறிது காலம் இறால்களை விற்பனை செய்து வந்தார். தெரிந்த சிலரது வீடுகளில் அவர் வசித்து வந்தார். ஆனாலும் வாழ்க்கை அப்படியே செல்லவில்லை. மீண்டும் துன்பம் நோயின் வடிவில் அவரைத் துரத்தியது. கொஞ்சம் ஓடியாடி வேலை செய்து வந்த காலத்தில் அடைக்கலம் கொடுத்தவர்கள் கூட உடல்நிலை சரியில்லாத நேரத்தில் முகம்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தங்க இடமின்றி வெளியில் கிடைத்த இடங்களில் தூங்கினார் சுபத்ரா. அப்போது அவருக்கு வயதாகி விட்டது. நோயும் அவரை பாடாய் படுத்தியது. கோயில் ஒன்றில் படுத்துக்கிடந்த அவருக்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துவிடுகிறது. அவரை மருத்துவமனையில் வைத்து பார்க்கத்தான் யாரும் இல்லையே. யாரோ ஒருவர் பரிதாபப்பட்டு அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடுகிறார். ஆனால், அவர் கேட்பாரற்று மருத்துவமனையில் இருந்திருக்கிறார். மருத்துவமனையில் இருந்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் அவரை வெளிச்சம் முதியோர் இல்லத்திற்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.

தள்ளாத வயதில் இணைந்த இதயங்கள்

மருத்துவமனையில் சுபத்ரா இருந்த நேரத்தில் அவரைத் தேடி சையது கொடுங்கல்லூர் வந்துள்ளார். கொடுங்கல்லூர் முழுவதும் எங்கெங்கோ தேடித் தேடி அலைந்திருக்கிறார். ஆனால், அவர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அவருக்கும் வயது முதிர்ந்துவிட்டது அல்லவா. அதிகம் அலைய முடியவில்லை. ஒருநாள் கடை ஒன்றின் படிக்கட்டுகளில் படுத்து உறங்கிவிடுகிறார். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து சென்றனர். விசாரித்துவிட்டு அந்த வெளிச்சம் முதியோர் இல்லத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.

36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களது வாழ்க்கை ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்துவிட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் அவர்கள் உயிரோடு இருக்கப்போகிறார்கள் என்று தெரியாது. ஆனால், மீண்டும் ஒன்று சேர்ந்தது அவர்களது வாழ்க்கையின் அர்த்தத்தை நிறைவு செய்துவிட்டது. அந்த முதியோர் இல்லத்தில் இருந்த பீவது(85) அதை இப்படி அழகாக கூறுகிறார், “இறந்தாலும்.. வாழ்ந்தாலும் இருவரும் இனி ஒரே இடத்தில்தான்”. உண்மையில் அந்தத் தள்ளாத வயதில் இருந்த இருவரின் இறுதிக்கட்டதில் அந்த முதியோர் இல்லம் ‘வெளிச்சம்’ பாய்ச்சித்தான் இருக்கிறது.

(புதியதலைமுறை)

இது உண்மைக் கதை -காதலர் மீண்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? Rzitk_263020
உன்னை நான் பார்த்து பல ஆண்டுகள் இருக்க
உன் மலர் முகம் மட்டும் என் நினைவில் இருக்க..................
என்றிருக்கும் இளம் தம்பதிகள் உங்களை
வாழ்த்துகிறேன்.......................

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 11:29 am

அந்த முதியோர் இல்லத்தில் இருந்த பீவது(85)
அதை இப்படி அழகாக கூறுகிறார்,

“இறந்தாலும்.. வாழ்ந்தாலும் இருவரும் இனி ஒரே இடத்தில்தான்”.
உண்மையில் அந்தத் தள்ளாத வயதில் இருந்த இருவரின்
இறுதிக்கட்டதில் அந்த முதியோர் இல்லம் ‘வெளிச்சம்’ பாய்ச்சித்தான்
இருக்கிறது.

-
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக