ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திஹார் சிறைச்சாலை

4 posters

Go down

திஹார் சிறைச்சாலை  Empty திஹார் சிறைச்சாலை

Post by ayyasamy ram Sun Sep 29, 2019 6:00 am


எழுத்தாளரும், படிப்பாளியுமான நண்பர் ஒருவர், என்னை
சந்திக்க வந்தார். பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, ஊழல்
குற்றச்சாட்டுக்கு ஆளான, சிதம்பரம் பற்றி திரும்பியது.

'செய்யறதை செஞ்சுட்டு, 'திஹார் சிறைக்கு போக
மாட்டேன்'னு, ஆரம்பத்தில் பயப்பட்டாரே... அச்சிறை என்ன
அவ்வளவு மோசமாவா இருக்கும்...' என்றேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்ல, மணி... இப்போது, புதுச்சேரி
துணை நிலை ஆளுனரா இருக்கும், கிரண்பேடி, பல
ஆண்டுகளுக்கு முன், திஹார் சிறையில், இன்ஸ்பெக்டர்
ஜெனரலா இருந்தார். அவர், அங்கு இருந்தபோது, சிறைச்
சாலைக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

'கைதிகளின் நலவாழ்வுக்கு என்னெல்லாம் செய்ய
முடியுமோ, அவ்வளவும் செய்தார். அவர் ஏற்படுத்திய
மாற்றங்களால், இன்று, கைதிகளின் நலவாழ்வு
மையமாகவே செயல்படுகிறது, திஹார் சிறை.

அவர் எழுதிய, 'நான் துணிந்தவள்' என்ற புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ள, ஒரு சம்பவத்தை கூறுகிறேன், கேள்...'
என்று ஆரம்பித்தார்:

ஒரு காலத்தில், பயமும், அதிர்ச்சியும் தரக்கூடிய தோற்றம்
கொண்டது, டில்லி திஹார் சிறைச்சாலை. இதன் உள்ளே
காலடி வைக்கும் குற்றவாளி, வாழ்வதற்குரிய எல்லா
நம்பிக்கைகளையும் இழந்து விடுவான்.
மீட்சியில்லாத நரகத்தில் நுழைவது போல தான் தோன்றும்.

மிகப்பெரிய இரும்பு கதவுகளும், இரும்பு சட்டங்களும்
கொண்டது. இங்கு, 9,000 கைதிகளை அடைத்து, பூட்டி
வைக்க முடியும். கைதிகள் எவரிடமும், சகிப்புத்தன்மை
இல்லை. வெறுப்பு, பழி வாங்கல் உணர்வுகளால் இறுகிப்
போய் இருந்தனர்.

தங்களையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத
நிலையை எட்டியிருந்தனர்.

இந்த நிலை நீடித்த ஒரு காலகட்டத்தில் தான், ஐ.ஜி., ஆக
பொறுப்பேற்றார், துணிச்சலுக்கு பெயர் பெற்ற,
கிரண்பேடி - ஐ.பி.எஸ்., அவர் பதவி காலத்தில், சிறைச்
சாலையில், எத்தனையோ நல்ல மாற்றங்களை கொண்டு
வந்தார். அவர் கூறுகிறார்:

சிறை கைதிகளிடையே, ஏதாவது புது திட்டங்களை ஏற்க
வைக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு, எங்கள்
மேல் நம்பிக்கை வரவழைக்க வேண்டும். அதற்கான ஒரு
சந்தர்ப்பம் வாய்த்தது. அது, 'ரக் ஷா பந்தன்' நாள். ச

கோதரிகள், தங்கள் சகோதரர்களுக்கு, கையில் வண்ண
ரட்சையை கட்டுவது வழக்கம்.

'கைதிகளின் சகோதரிகள், சிறைக்குள் வந்து, தங்கள்
சகோதரர்களின் கைகளில் ரட்சையை கட்டலாம்...' என்று,
அறிவித்தோம். என்றாலும், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்
இதை செய்தோம்.

ஆண்கள் சிறைக்குள்ளே, பெண்கள் வருவது பற்றி, முன்
கூட்டியே கைதிகளிடமும் தெரிவித்து விட்டோம். இதைக்
கேட்ட கைதிகள், கண்ணீர் விட்டனர்...

'எங்களுக்காக, நீங்கள் இவ்வளவு செய்யும்போது, தவறு
நடக்க நாங்கள் அனுமதிப்போமா... உங்களுக்கு, எங்கள்
மீது அவநம்பிக்கை வரலாமா...' என்று, கண்ணீர் உருக
கேட்டனர்.

'ரக் ஷா பந்தன்' நாளன்று, கண்ட காட்சி, உணர்ச்சி
கொந்தளிப்பாய் இருந்தது.

உள்ளே வந்து ரட்சையை கட்டிய சகோதரிகளிடம், 'நாங்கள்,
இனிமேல் தவறு செய்ய மாட்டோம்...' என்று உறுதியளித்த,
சகோதரர்களின் காட்சி மறக்க முடியாதவை. அதன்பின்,
கைதிகளின் நடவடிக்கையில், பக்குவமும் ஏற்படுத்தி
விட்டது.
- என குறிப்பிட்டுள்ளார்.

நரகமாக இருக்கக் கூடாது, சிறைச்சாலைகள்; கைதிகள்,
தங்கள் தவறை உணரவும், மறுவாழ்வுக்கு வித்திடவும்
வேண்டும் என்று, அன்று ஊன்றப்பட்ட விதை, இன்று,
மரமாக வளர்ந்துள்ளன.
- என்று கூறி முடித்தார், நண்பர்.
-

நம்மூர் சிறைச்சாலைகளிலும் கைதிகள், மேற்படிப்பு
படிக்கவும், தொழில் கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி இருப்பது,
நினைவுக்கு வந்தது.
------------------------------
நன்றி-அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by Guest Sun Sep 29, 2019 11:12 am

திஹார் சிறைச்சாலை  1571444738

சிறைக்கு போனால் திருந்தி வருவார்கள் என்கிறார்களே!சிதம்பரம் எப்படி வருவார்?திருந்தியா அல்லது........................?
avatar
Guest
Guest


Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:01 am

நிச்சமாக அரசியல்வாதிகள் மனதில் பழிவாங்கும் எண்ணணமே மேலோங்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by kram Mon Sep 30, 2019 12:07 pm

உண்மை அதை தவிர வேறு ஏதும் இல்லை
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by T.N.Balasubramanian Mon Sep 30, 2019 6:18 pm

திஹார் ஜெயிலிருந்து கைதிகள் ஆபீஸ் கூட நடத்தலாமா?

சஹாரா பரிவார்/அம்பிவேலி --சுப்ரதா ராய் ஆபீஸ் நடத்தியதாக கேள்வி.
சார்ள்ஸ் சோப்ராஜ் இங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பியதாக நினைவு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum