Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமம்… காதல்… அண்ணன் தங்கச்சி பாசம்!
Page 1 of 1
கிராமம்… காதல்… அண்ணன் தங்கச்சி பாசம்!
நம்ம வீட்டுப் பிள்ளை பாண்டிராஜ் பளீர்
‘‘‘சன் பிக்சர்ஸ்…’
இந்த ஒருவார்த்தை என்னைக் கட்டிப்போட்டது.
எல்லா வீடுகளுக்கும் சுலபமா போய்ச் சேர்ந்திடலாம்னு
ஓர் உண்மை இருக்குல்ல... அதுக்குத்தான் அத்தனை
ஹீரோக்களும், இயக்குநர்களும் ஆசைப்படுவாங்க!
கிராமம், காமெடி, சென்டிமென்ட், ஃபேமிலி டிராமான்னு
பத்து நிமிஷத்திற்குள்ளே ஒரு லைனைச் சொன்னேன்.
சிரிச்சு ரசிச்சு கேட்டுட்டு படத்தை ஆரம்பிச்சிடலாம்னு
சொன்னாங்க. கிராமத்துப் பக்கம்னு சொல்றது சாதாரண
விஷயம் இல்லை.
நம்ம எல்லோரும் சிட்டிக்குள்ளே வந்து அடைஞ்சிட்டாலும்,
ஒரு கிராமத்து மனுஷன் இன்னும் எல்லோர் மனகக்குள்ளும்
இருக்கான். ஜல்லிக்கட்டு, பதநீர், ஈசல் பிடிக்கிறது,
திருவிழாவிற்கு வருகிற பெண்களை ஜனங்களோட
ஜனங்களாகப் பார்த்து கண் வெட்டுறது எல்லாமே அப்படியே
மனசுக்குள்ளே கிடக்கு.
காதல், பாசம், நேசம், காமெடி, துயரம், சடங்கு, திருவிழா,
எல்லாத்தையும் அசலாகச் சொல்லப் பார்த்திருக்கேன்.
நிச்சயம் எதுவும் தூக்கலா இருக்காது. மக்கமாருகளோட
கூடி வாழ்றதுதானே நம்ம பழக்கம்லாம்.
கோபப்பட்டு முறைச்சுக்கறதும், அப்புறம் கண்ணீர்
விட்டுக் கட்டிப்புடிச்சு அழுறதும்தானே நம்ம அழகு.
இப்படியான இடங்கள் அமைகிற சூழ்நிலைகள்தான் கதை...’’
பக்குவமும் புன்னகையுமாகப் பேசுகிறார் இயக்குநர்
பாண்டிராஜ். தனக்கான மைதானத்தில் எப்போதும்
ஜெயிக்கிற குதிரை. ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ பாய்ச்சலுக்கு
ரெடி.
எதிர்பார்ப்பு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’க்கு எக்கச்சக்கமா
ஏறிக்கிடக்கு!‘கடைக்குட்டி சிங்கம்’ முடிச்சதும், இன்னொரு
குடும்பப்படம் அடுத்ததாக வேண்டாம்கிற முடிவில் இருந்தேன்.
இதுவரைக்கும் ஒரு படத்தை முடிச்சிட்டு ஊர்ப்பக்கம்
போனால் ஒருவித ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.
இந்தப்படம் பண்ணிட்டுப் போகும்போது வேற ரெஸ்பான்ஸ்.
கூப்பிட்டு பேசுற விதம், கண்ணில் அப்படியே நீர் ததும்ப
பேசிட்டு, கர்ச்சீப்பை எடுத்து முகம் துடைக்கிற மாதிரி
அப்படியே கண்ணையும் துடைக்கிற அழகு என்னைக்
கட்டிப்போட்டது.
படம் ரொம்ப குளோசா குடும்பங்களில் போய்ச் சேர்ந்திருக்கு.
பேசிக்காத அண்ணன் தங்கச்சிகள் கட்டிப்புடிச்சு அழுது
ஒண்ணு சேர்ந்திருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து இன்னும்
வீர்யமா, மனசோட ஆழத்திற்குப் போய் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’
பேசுவான்.ஏழு வருஷங்களுக்குப் பிறகு சிவாவுடன் படம் செய்கிற
அனுபவம்…
-
----------------------------
‘‘‘சன் பிக்சர்ஸ்…’
இந்த ஒருவார்த்தை என்னைக் கட்டிப்போட்டது.
எல்லா வீடுகளுக்கும் சுலபமா போய்ச் சேர்ந்திடலாம்னு
ஓர் உண்மை இருக்குல்ல... அதுக்குத்தான் அத்தனை
ஹீரோக்களும், இயக்குநர்களும் ஆசைப்படுவாங்க!
கிராமம், காமெடி, சென்டிமென்ட், ஃபேமிலி டிராமான்னு
பத்து நிமிஷத்திற்குள்ளே ஒரு லைனைச் சொன்னேன்.
சிரிச்சு ரசிச்சு கேட்டுட்டு படத்தை ஆரம்பிச்சிடலாம்னு
சொன்னாங்க. கிராமத்துப் பக்கம்னு சொல்றது சாதாரண
விஷயம் இல்லை.
நம்ம எல்லோரும் சிட்டிக்குள்ளே வந்து அடைஞ்சிட்டாலும்,
ஒரு கிராமத்து மனுஷன் இன்னும் எல்லோர் மனகக்குள்ளும்
இருக்கான். ஜல்லிக்கட்டு, பதநீர், ஈசல் பிடிக்கிறது,
திருவிழாவிற்கு வருகிற பெண்களை ஜனங்களோட
ஜனங்களாகப் பார்த்து கண் வெட்டுறது எல்லாமே அப்படியே
மனசுக்குள்ளே கிடக்கு.
காதல், பாசம், நேசம், காமெடி, துயரம், சடங்கு, திருவிழா,
எல்லாத்தையும் அசலாகச் சொல்லப் பார்த்திருக்கேன்.
நிச்சயம் எதுவும் தூக்கலா இருக்காது. மக்கமாருகளோட
கூடி வாழ்றதுதானே நம்ம பழக்கம்லாம்.
கோபப்பட்டு முறைச்சுக்கறதும், அப்புறம் கண்ணீர்
விட்டுக் கட்டிப்புடிச்சு அழுறதும்தானே நம்ம அழகு.
இப்படியான இடங்கள் அமைகிற சூழ்நிலைகள்தான் கதை...’’
பக்குவமும் புன்னகையுமாகப் பேசுகிறார் இயக்குநர்
பாண்டிராஜ். தனக்கான மைதானத்தில் எப்போதும்
ஜெயிக்கிற குதிரை. ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ பாய்ச்சலுக்கு
ரெடி.
எதிர்பார்ப்பு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’க்கு எக்கச்சக்கமா
ஏறிக்கிடக்கு!‘கடைக்குட்டி சிங்கம்’ முடிச்சதும், இன்னொரு
குடும்பப்படம் அடுத்ததாக வேண்டாம்கிற முடிவில் இருந்தேன்.
இதுவரைக்கும் ஒரு படத்தை முடிச்சிட்டு ஊர்ப்பக்கம்
போனால் ஒருவித ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.
இந்தப்படம் பண்ணிட்டுப் போகும்போது வேற ரெஸ்பான்ஸ்.
கூப்பிட்டு பேசுற விதம், கண்ணில் அப்படியே நீர் ததும்ப
பேசிட்டு, கர்ச்சீப்பை எடுத்து முகம் துடைக்கிற மாதிரி
அப்படியே கண்ணையும் துடைக்கிற அழகு என்னைக்
கட்டிப்போட்டது.
படம் ரொம்ப குளோசா குடும்பங்களில் போய்ச் சேர்ந்திருக்கு.
பேசிக்காத அண்ணன் தங்கச்சிகள் கட்டிப்புடிச்சு அழுது
ஒண்ணு சேர்ந்திருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து இன்னும்
வீர்யமா, மனசோட ஆழத்திற்குப் போய் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’
பேசுவான்.ஏழு வருஷங்களுக்குப் பிறகு சிவாவுடன் படம் செய்கிற
அனுபவம்…
-
----------------------------
Re: கிராமம்… காதல்… அண்ணன் தங்கச்சி பாசம்!
சதா சிரிப்பும், பணிவுமா வந்து நின்னு கிராமத்துல சிலர்
வேலை பார்த்திட்டு இருப்பாங்களே, அப்படியான இளைஞன்
சிவா. ஒரு வீட்டில் தகப்பன் செத்தா அந்தக் குடும்பம் பத்து
வருஷம் பின்னாடிப் போகும்பாங்க. அப்படி விட்டுவிடாமல்
மகனும், அம்மாவுமாக தாங்கிப் பிடிக்கிற கதை.
அண்ணன் வாழ்க்கைக்காக தங்கச்சி எடுக்கிற முடிவு,
தங்கச்சி வாழ்க்கைக்காக அண்ணன் எடுக்கிற முடிவு
இருக்குல… அதுவும் இதுல பெரிய விஷயம்.நான்
அறிமுகப்படுத்தின ஹீரோதான். சிவா நல்லா வருவார்னு
தெரியும். ஆனால், இவ்வளவு நல்லா வருவார்னு சத்தியமாகத்
தெரியாது. 25 படங்களுக்குப் பிறகுதான் ஒரு ஹீரோவுக்கு
இப்படி ஓர் இடம் கிடைக்கும்.
ஆனால், சிவாவுக்கு பத்துப் படங்கள்ல கிடைச்சிருக்கு!
ஒரு சீன்ல, ‘ஏன் என்னை தப்பாகப் பார்க்கிறீங்க’னு
நீளமா பெரியப்பா கிட்டே பேசுற சீன். அப்படியே அவர்
பேசிக் கேட்டதும் கண்ணுல தண்ணீர் வந்துடுச்சு.
அதுல டப்பிங்ல பேசும்போது இன்னும் ‘டப்டப்னு’
பேசுறார்.
வெளியே வந்ததும் ‘என்ன சிவா இப்படி மாறிட்டிங்க’ன்னு
கேட்டேன். ‘நாம ஏழு வருஷம் பார்க்கலை சார்… அதுக்குள்ளே
கத்துக்கிட்டது’ன்னு சொன்னார்.
இதுதான் அவரை டாப் 5 ஹீரோக்குள்ளே கொண்டு போய்
வைச்சிருக்கு!பாரதிராஜா வேறு… இதுல மூணு பையன்,
ஒரு பொண்ணோட, 80 வயது தாத்தா. யார் கையையும் ந
ம்பிப் பிழைக்காமல், தானே சம்பாதிச்சு பிள்ளைகளுக்கும்
கொடுக்கிற ஆளு.
அவருக்கும் எனக்கும் ஸ்பாட்ல பயங்கர சண்டையெல்லாம்
வரும். இப்படித்தான் நடிப்பேன்னு சொல்வார். நானெல்லாம்
கிராமத்துல கிடந்து அவர் படங்களை பாடமாக படிச்சு வந்த
பையன்தான். அவருக்குக் கொடுக்கிற மரியாதைக்கு அளவே
கிடையாது.
ஆனால், என் டைரக்ஷனில் அவர் டைரக்டரா மூக்கை
நுழைச்சால் விடமாட்டேன். யாராக இருந்தாலும் சரி, இது
பாண்டிராஜ் படம். வெளியே பார்த்தால் அப்பா, அப்பான்னு
கொஞ்சுவோம்.
உள்ளே நுழைஞ்சால் ‘பேசாமல் அருண்மொழிவர்மனா
நடிச்சிட்டுப் போயிடுங்க அப்பா’ன்னு செல்லமாக
மிரட்டுவேன்!அவர்கிட்டே ஷூட்டிங் முடிச்சிட்டா நடந்த
பழைய சம்பவங்கள், ரகசியங்கள்னு அவர் வாயை நானும்,
சிவாவும் சேர்ந்து புடுங்கிடுவோம்.
-
-------------------------------------------
Re: கிராமம்… காதல்… அண்ணன் தங்கச்சி பாசம்!
------------------------------
அவர்கிட்டே பேசுறதும், பழகுறதும் தித்திப்பான அனுபவம்.
அனு இமானுவேல் அழகில் நிற்கிறாங்க…
அட, நடிப்பிலும்தாங்க! சிவாவிற்கு மாமன் பொண்ணு.
ஒரு சடங்கு, திருவிழா, திருமணம்னு நடக்கும்போது நட்ட
நடுவில் இவங்க காதல் ஒரு தினுசா, ஜாடை பார்த்து,
ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு புது ஜோடினு இளமை அப்படியே
பூத்து நிற்குது.
அவங்க இரண்டு பேரையும் திரையில பார்க்கும்போது
மக்கள் சொக்கிப் போய் நிற்பாங்க.
சூரி, யோகிபாபுன்னு சேர்த்திட்டிங்களே…நண்பர்களாக
நடிச்சிட்டு இருந்த சூரி - சிவாவை அண்ணன் தம்பியா
மாத்திட்டேன். நண்பர்களாகவே அலப்பறை பண்ற கலரை
மாத்தி, என் மகன் அன்புக்கரசையும் சேர்த்து விட்டிருக்கேன்.
இந்த மூணு பேரின் டிராவல் இருக்கு.
யோகிபாபுவை வில்லன் குரூப்போட இணைச்சு
விட்டிருக்கேன். ஆளாளுக்கு ஒரு பக்கம் அதகளம்
பண்ணிட்டு இருப்பாங்க. ஒரு பெரியப்பா இருந்துக்கிட்டு
வீட்ல நம்ம முடிவுதான் சிறந்ததுனு நிற்குமே, அப்படி
வேல.ராமமூர்த்தி வருகிறார்.
சமுத்திரக்கனி ஒரு ஃபிளாஷ்பேக்கில் சிவாவுக்கு அப்பாவாக
வாழ்ந்திட்டுப் போவார். எல்லா கேரக்டரையும் குணநலன்,
மேனரிசம்னு பார்த்துப் பார்த்து இழைச்சிருக்கோம்.
இந்தப் பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷ்... திறமையில் பின்னி
எடுக்குது. சுப்பு பஞ்சு, ஆர்.கே.சுரேஷ், நரேன், சண்முகராஜா
இவங்கெல்லாம் சித்தப்பா, பெரியப்பாவா வாழ்ந்திருக்காங்க.
நட்டி நடராஜ் படம் முழுக்க வர்றார். மொத்தம் 32 கேரக்டர்ஸ்
சார்.... பார்த்துக்கங்க!
இந்த 11 வருட பயணத்தை எப்படிப் பார்க்கிறீங்க..?
நான் பெரிசா படிக்கலை. படம் பார்த்திட்டு படம் செய்கிற
ஆளும் கிடையாது. ஆனால், படிப்பினை இருக்கு. பொறந்ததுல
இருந்து ‘பசங்க’ படம் பண்ற வரைக்கும் கஷ்டம் கஷ்டம்னு
பட்டுத் தொலைஞ்சிருக்கேன். பழசை மறக்காம இருக்கிற மூட்
எனக்குள்ளே அணையாமல் எரிஞ்சுகிட்டே இருக்கு.
சந்தோஷப்பட்டதையும், கரைஞ்சு அழுததையும் ஞாபகமாக
வைச்சிருக்கேன். வாழ்க்கையின் சகல கஷ்டங்களையும்
அனுபவித்துத் தீர்த்தவனுக்கு இதெல்லாம் அதிகம்தான்.
நினைச்சதைவிட நல்லா இருக்கேன். பொதுவா நான் எங்கே
இருக்குறது, என்னென்ன சாதிக்கணும்னு எதையும் என்
பொறுப்பில் எடுத்துக்கிறதில்லை.
காலையில் குளிச்சிட்டு, சாமியை கும்பிட்டுட்டு விபூதியை
எடுத்து நெத்தியில் பூசும்போது வந்த அமைதிதான் என்னிடம்
அடுத்த நாள் வரைக்கும் ஓடுது.
மத்தபடி சினிமாங்கிறது டைரக்டர் மட்டுமே இல்லை.
அது 24 கலைகளோட கூட்டாஞ்சோறு! கைப்பக்குவம் போல
இந்த கலைப்பக்குவம் பழகணும்! யார்கிட்டே என்ன விஷயம்
வாங்கணும், எப்படி வாங்கணும்னு பழகணும். சினிமாவில்
எனக்கு சிறிசும், பெரிசுமா அவமானங்கள் கிடைச்சிருக்கு.
அப்படி வாங்கி, தாங்கி, வளைஞ்சு, நெளிஞ்சு வடிவம்
பழகினால் இங்கே கொஞ்சம் நிற்கலாம். எனக்கு அந்தத்
திறமை கொஞ்சம் கூடி வந்திருக்கு.
எல்லாம் ஆண்டவன் அருள்.
-
-----------------------------
நா.கதிர்வேலன்
நன்றி-குங்குமம்
Similar topics
» அண்ணன் தங்கை பாசம் (முக நூலில் ரசித்தது )
» ஒடிஸாவில் ஒரு விநோதம்: சிவனையும், பார்வதியையும் அண்ணன்- தங்கையாக வழிபடும் கிராமம்
» பிரஷாந்த்துக்கு புது தங்கச்சி!
» ‘அண்ணன்... அன்பு அண்ணன்!’ -உருகும் மித்தாலி
» தங்கச்சி
» ஒடிஸாவில் ஒரு விநோதம்: சிவனையும், பார்வதியையும் அண்ணன்- தங்கையாக வழிபடும் கிராமம்
» பிரஷாந்த்துக்கு புது தங்கச்சி!
» ‘அண்ணன்... அன்பு அண்ணன்!’ -உருகும் மித்தாலி
» தங்கச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|