ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்

Go down

 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Empty செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்

Post by ayyasamy ram Sun Sep 22, 2019 6:32 am

 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் GKZOZdcKTk56A3JdfGfd+E_1568953789

வனிதா பதிப்பக வெளியீடான, சிவபாரதி எழுதிய,
'விடுதலை வேங்கை' என்ற நுாலிலிருந்து:

ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சட்ட மறுப்பு இயக்கம்,
1921ல், காந்திஜியால் துவக்கப்பட்டது. ஆங்கிலேய அரசுடன்
ஒத்துழைக்கலாகாது என்பதே, அதன் கருத்து.

போராட்டம் தீவிரமானது. உத்தரபிரதேச மாநிலம்,
சவுரி சவுரா வீதிகளில், ஊர்வலம் நடைபெற்றது.

கடும் கோபத்தில், பலரை சுட்டுக் கொன்றனர், போலீசார்;
மக்கள் தெறித்து ஓடினர். ஆனால், ஒரு கட்டத்தில், அப்படியே
திரும்பி, போலீசாரை துரத்த, காவல் நிலையத்திற்குள் சென்று,
கதவை தாழிட்டுக் கொண்டனர்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற மக்கள், காவல் நிலையத்தை
தீக்கிரையாக்கினர். இதில், எஸ்.ஐ., ஒருவர் உட்பட, 21 போலீசார்
இறந்தனர். இதனால், நாடு முழுதும் பெரும் கலவரம் வெடிக்கும்
என பயந்த, காந்திஜி, சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை,
'வாபஸ்' பெற்றார்.

நேரு, சித்தரஞ்சன்தாஸ் உள்ளிட்டோர் இதை ஏற்கவில்லை.
'காந்திஜி, தனிச்சையாக, எப்படி முடிவு எடுக்கலாம்...' என,
குறை கூறினர்.

இதன் விளைவு, புரட்சி எண்ணம் கொண்டோர், காந்திஜியின்
அமைதிப் போக்கை வெறுத்தனர்.

'ஆங்கிலேயரை ஒழிக்க, அகிம்சை வழி போதாது. மாறாக,
புரட்சி வழியில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் தான்
முடியும்...' என்று, பகத்சிங் போன்றோர் முடிவு செய்தனர்.

லாகூரில், 'நவ ஜவான் பாரத் சபா' என்ற, புரட்சி அமைப்பு
துவக்கப்பட்டது.

அக்., 30, 1928ல், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த, ஆங்கிலேய
அதிகாரி, சைமனுக்கு எதிராக, லாலா லஜபதிராய் தலைமையில்,
கண்டன மற்றும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, லாலா லஜபதிராயை தாக்கி, கீழே தள்ளி, காலால்,
தலையிலும், மார்பிலும் மிதித்தனர், ஆங்கிலேய அதிகாரிகள்.
இந்த அடாவடி காரியத்தில் ஈடுபட்டவன், சாண்டர்ஸ் என்ற
போலீஸ்காரன்.

சில தினங்களில், லாலா லஜபதிராய் மரணமடைந்தார்.

இது, புரட்சியாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
நெருங்கிய நண்பர்களான சுகதேவ் மற்றும் ராஜகுரு
உதவியுடன், லாலா லஜபதிராயை கொன்ற, சாண்டர்சை
தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

அதன்படி, டிச., 17, 1928ல், அலுவலகத்திலிருந்து பைக்கில் வீடு
நோக்கி புறப்பட்டான், சாண்டர்ஸ். முதலில், சாண்டர்சை குறி
தவறி சுட்டான், ராஜகுரு.

பைக்குடன் விழுந்த, சாண்டர்ஸ், சுதாரித்து எழ முயன்ற
போது, நான்கு முறை துல்லியமாக சுட்டு சாகடித்தான், பகத்சிங்.

'பகத்சிங் மற்றும் அவன் நண்பர் இருவருக்கும், நீதிமன்றத்தில்
நிச்சயம் தண்டனை கிடைக்கும்...' என்றனர், பலர்.

இதைக் கேட்டு, பகத்சிங்கின் தந்தை, கிஷன்சிங் துடித்தார்.
பகத்சிங்கிற்காக வாதாட, அவரே முன் வந்தார்.

அதாவது, 'சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட அன்று, பகத்சிங்
ஊரிலேயே இல்லை...' என்று, தன் வாதத்தை நிலைநாட்ட மனு
கொடுத்தார், கிஷன்சிங்.

இதை கேள்விப்பட்ட, பகத்சிங், தந்தைக்கு கடிதம் எழுதினான்.
அதில், 'ஒரு தந்தை என்ற முறையில், என் மீது கொண்ட
பாசத்தில், நீங்கள், எதை எதையோ செய்கிறீர்கள். தங்களின்
இந்த செயல், என் மன அமைதியை குலைத்து விட்டது.
என்னை தற்காத்துக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை...

'காரணம், என் புரட்சி இயக்கத்தின் கொள்கை அத்தகையது.
நான், அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுவதோ...
அன்று, நான் ஊரிலேயே இல்லை என்று கூறுவதோ... என்னை
பொறுத்தவரை கோழைத்தனமான செயல்...

'என்னை போன்று, கொடிய தண்டனைக்கு ஆட்பட்டு, இன்னும்
பல தோழர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு என்ன நிலையோ,
அதே தான் எனக்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே தீர
வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு...

'சிறந்த லட்சியத்தில் வைத்திருக்கும் ஆழ்ந்த பற்று தான்,
ஒரு நாட்டின் வீரமிகு இளைஞர்களை, துாக்கு மேடை ஏற
செய்கிறது. லட்சியத்திற்காக, என் வாழ்வை தியாகம் செய்யப்
போகிறேன் என்பதை தவிர, எனக்கு ஆறுதல் ஏதேனும் உண்டா...'
என்று, வருத்தமாக எழுதி முடித்தான், பகத்சிங்.

ஆங்கிலேய அரசு, மார்ச், 31, 1931ல், பகத்சிங்கை துாக்கிலிட்டது.
-
----------------------------------

நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum