ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Go down

திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Empty திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Post by ayyasamy ram Fri Sep 20, 2019 7:13 am

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திருவட்டாரில் புகழ்பெற்ற
ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில்
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில்
ஒன்று. இங்கு கோவில் கருவறையில் 22 அடி நீளத்தில்
சயன நிலையில் கம்பீரமாக ஆதிகேசவ பெருமாள்
வீற்றிருக்கிறார்.

இதில் சிறப்பு என்னவென்றால், சயன நிலையில் உள்ள
சிலை கல்லால் ஆனது கிடையாது. 16 ஆயிரத்து எட்டு
சாளக்கிராமம் உள்ளடக்கிய கடுசர்க்கரை படிமம் என்கிற
மூலிகை கலவையால் ஆனது.

எனவே மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது கிடையாது.
மேலும் சயன நிலையில் உள்ள பெருமாளின் தலையில்
தங்க கிரீடத்தில் விலை மதிக்க முடியாத வைர, வைடூரிய
கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. பெருமாளின் உடலில்
நகைகளும் தங்க தகட்டால் ஆன கவசமும் அணிவிக்கப்
பட்டிருந்தது.

பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் பெருமாளுக்கு
அணிவிக்கப்பட்ட நகைகள் படிப்படியாக கொள்ளையடிக்கப்
பட்டதாக கடந்த 1989-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி பொதுமக்கள்
சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகம்
முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக
விசாரணை நடத்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருவட்டார் போலீசார் முதலில் வழக்குப்பதிவு
செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார்
வழக்கை விசாரித்தனர்.

15 வருடங்களாக கைவரிசை

விசாரணையில், சயன நிலையில் உள்ள பெருமாள் சிலையில்
அணிவிக்கப்பட்டு இருந்த 30 பவுன் தங்க பூனூல், தங்க கவச
தகடு, வைரக்கிரீடம் போன்றவை திருட்டு போய் இருப்பது
கண்டுபிடிக் கப்பட்டது. இது வெளியில் தெரியாமல் இருக்க
கோவில் பூசாரிகளும், ஊழியர்களும் தங்க கவசத்திற்கு பதிலாக
எண்ணெய் டின் தகட்டின் மீது தங்க முலாம் பூசி சாமி சிலையில்
வெட்டி எடுத்த பகுதியில் இணைத்து வைத்திருந்தனர்.

இதேபோல் வைரக்கிரீடத்திற்கு பதிலாக தங்க நிற காகித கிரீடத்தை
பெருமாளின் தலையில் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

சுமார் 15 வருடங்களாக கோவில் சாமி சிலை நகைகள் சிறிது,
சிறிதாக கோவில் பூசாரிகள், தேவஸ்தான ஊழியர்கள் சுமார்
6½ கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகையின் அப்போதையை மதிப்பு
ரூ.40 லட்சமாகும். இதனையடுத்து கோவில் பூசாரிகள் மற்றும்
தேவஸ்தான ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்து 4¼ கிலோ தங்கத்தை
மீட்டனர்.

இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கோவிலின் தலைமை
பூசாரி கேசவன் போத்தி விசாரணைக்கு முன்பே தற்கொலை செய்து
கொண்டார்.

34 பேர் மீது வழக்கு

பின்னர் கொள்ளையில் நேரடியாகவும், மறைமுகமாகவும்
தொடர்புடைய கோவில் குருக்கள், கோவில் ஊழியர்கள் என 34 பேர்
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள தலைமை
குற்றவியல் கோர்ட்டில் 2010-ம் ஆண்டு வரையே வழக்கு விசாரணை
நடந்தது.

2011-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கு
நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 34 பேரில் வழக்கு விசாரணையின் போது
இடைப்பட்ட காலங்களில் 10 பேர் இறந்து விட்டனர். திருச்சூரை
சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி என்பவர் மட்டும் இந்த வழக்கில்
இருந்து பிரித்தெடுக்கப்பட்டார்.
இதனால் தற்போது 23 பேர் மீது மட்டும் வழக்கு விசாரணை நடந்தது.

23 பேர் குற்றவாளிகள்

வழக்கை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கிறிஸ்டியன்
விசாரித்து வந்தார். 27 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில்
நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும்
குற்றவாளி என தீர்ப்பளித்து அவர்களுக்குரிய தண்டனையை
தனித்தனியாக அறிவித்தார்.

திருவட்டாரை சேர்ந்த ஸ்ரீஅய்யப்பன் (வயது 75), கோபாலகிருஷ்ணன்
ஆசாரி (77), கோபிநாதன் (86), கிருஷ்ணம்பாள் (75), முத்துக்குமார் (47),
முத்துநாயகம் (61), வேலப்பன் நாயர் (73), மாத்தூரை சேர்ந்த
சுப்பிரமணியரு(69), தோவாளை மகாராஜ பிள்ளை (80), குலசேகரம்
கோபாலகிருஷ்ணன் (79), தச்சநல்லூரை சேர்ந்த சங்கரகுற்றாலம் (88),
கண்ணுமாமூடு அப்புகுட்டன் (67), நட்டாலம் குமார் (51), மயிலாடுதுறையை
சேர்ந்த முருகப்பன் (77) ஆகிய 14 பேருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும்,
தனித்தனியாக அபராதமும் விதிக்கப்பட்டது.

திருவட்டாரை சேர்ந்த சுரேந்திரன் (59), ஜனார்த்தனன் போற்றி (66),
மணிகண்டன் நாயர் (56), லட்சுமணன் (60), செம்பருத்திவிளை கேசவராஜூ (62),
புதுக்கடை அய்யப்பன் ஆசாரி (72), தேங்காப்பட்டணம் ஆறுமுகம் ஆசாரி (69),
பூட்டேற்றி அப்பாவு (75), கரமனையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆசாரி என்ற
ராஜய்யப்பன் (62) ஆகிய 9 பேருக்கு 3 வருடம் ஜெயில் தண்டனையும்,
தனித்தனியாக அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
-------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்: ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பு
» பத்திரிகை புகைப்பட கலைஞர் படுகொலை 5 பேருக்கு மரண தண்டனை வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு
» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum