ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 9:11 pm

First topic message reminder :

மங்கையர் திலகங்கள்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யா நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் திருநள்ளாறு செல்வதாக வித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து காரைக்காலிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறிவிட்டதாகத் தன் சகோதரர் விக்னேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். விக்னேஷ் அவரது செல்போன்னுக்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இந்தத் தகவலை விக்னேஷ் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 10 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்போம். போலீஸாரிடம் போனால் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆறுமுகம் தன் மகனை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு வந்து பணத்தைக் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்பேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன ஆறுமுகம் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். வித்யா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்குவது. அங்கிருந்து கிண்டி செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

`உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே'- தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்!
செல்போன் சிக்னல் வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலக்கியது. அந்த எண் காரைக்காலைச் சேர்ந்த மனோஜ் என்பவரது என்பது தெரியவந்தது. மனோஜ் புதுச்சேரியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நெருங்குவதை அறிந்த இருவரும் சென்னை வந்துள்ளனர். கோயம்பேட்டில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``வித்யாவும் பணம் கேட்டு போன் செய்த நபரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. காரைக்காலில் வித்யா படித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் கனடா செல்வதற்காக வித்யாவிடம் பணம் கேட்டுள்ளார். சமீபத்தில் தன் தந்தை விவசாய நிலத்தை விற்றதும் அதன்மூலம் கிடைத்த 13 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததை மனோஜிடம் கூறியுள்ளார். இருவரும் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம்” என்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மகளிடம் பேசிய ஆறுமுகம், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் சங்கடப்படுத்திவிட்டாயே, உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது போலீஸார் வழக்கின் விவரத்தை ஆறுமுகத்திடம் கூறி நிலைமையைப் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மகள், போலீஸாரின் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இந்த வித்தியாசமான வழக்கு காவல்துறையினருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு பாடம் என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

நன்றி விகடன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian Fri Oct 11, 2019 7:44 pm

2 மருமகன்கள்.. மாமியார் விரித்த வலை.. அதிர்ச்சியில் குண்டூர்-

குண்டூர்: மருமகன்களுடன் கள்ள உறவு வைத்திருக்கும் மாமியார்தான் குண்டூரில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தம்பதி. 2 மகள்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லபடியாக கல்யாணமும் செய்து வைத்துள்ளனர். ஆனால், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகள் 2 பேரையும் அந்த மாமியார் கைக்குள் போட்டுக் கொண்டார். அதாவது தகாத உறவுக்கு வலை வீசியுள்ளார். அந்த மருமகன்களும் மாமியார் வீசிய வலையில் விழுந்துள்ளனர். விஷயம் கணவனுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். மாமியாரோ, மருமகன்களிடம் உறவை துண்டிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் ஒரு கட்டத்தில் கணவன் தற்கொலையே செய்து கொண்டார். இப்படி வீட்டில் திடீரென ஒரு தற்கொலை நடக்கவும்தான், சொந்தக்காரர் சீனிவாசன் என்பவர் விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்டார். பிறகு, அந்த மாமியாரையும், மருமகன்களையும் கூப்பிட்டு வார்ன் பண்ணினார். இதனால் மாமியார் ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டார். மருமகன்களின் உதவியுடன் சீனிவாசனை போட்டு தள்ளிவிட்டார். இந்த கொலை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடந்தது. இது சம்பந்தமாக சீனிவாசனின் மனைவி, தன் கணவரின் கொலைக்கு காரணம், மாமியாரும், மருமகன்களும்தான் என்று போலீசில் புகார் தந்தார். இதையடுத்து, அந்த பெண்ணையும் மாமியார் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்தும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. தற்போது விசாரணையும் நடந்து வருகிறது. மாமியார் & மருமகன்கள் அண்ட் கோ சம்பவம்தான் குண்டூரில் பரபரப்பை தந்து வருகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by Guest Fri Oct 11, 2019 9:05 pm

கேரளாவை உலுக்கிய மட்டன்சூப் கொலை - மங்கையர் திலகம்-ஜூலி

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Jolly-murders-family-tree_16da168cea6_original-ratio

சயனைடு சூப் கொடுத்து 6 பேரை கொலை செய்த ஜூலி தாமஸ் என்பவர் கதையை மையமாக வைத்து 2 திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் ஒரு கதையில் மோகன் லால் நடிக்கிறார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. மணவாழ்க்கை கசப்பாக இருந்ததால் மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவை பிடித்திருந்தது ஜூலிக்கு. அவருக்கும் அதே எண்ணம் இருப்பதை அறிந்த ஜூலி, இருவரும் இணைவதற்கு தடையாக இருக்கும் குடும்பத்தை கூண்டோடு முடித்துவிட நினைத்தார்.

அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜுவிடம் இருந்து சயனைடு வாங்கியுள்ளார். ஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார். ஒரே நேரத்தில் எல்லோரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால்தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்ற முடியும் என்பதும் அதற்கு ஒரு காரணம். முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் வாந்தி எடுத்த அன்னம்மா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் கொலை செய்துள்ளார் ஜூலி. திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டி ருந்த போது அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜுலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்த அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜூலி 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு மட்டன் சூப் கொடுக்க பிரச்னை முடிந்தது. தன்வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தையின் மீது திரும்பியது. 2016-ல் அவர்களுக்கும் சயனைடு கலந்த சூப் கொடுத்தபின் 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குடும்பத்தினரின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் ஜூலி. 

சாஜூவின் மனைவி இறந்து ஒராண்டுக் கூட முடியாத நிலையில் சாஜூவும், ஜூலியும் திருமணம் செய்தது உறவினர்க ளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் தனது குடும்பத்தினரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஜூலியின் சயனைடு சூப்பில் இருந்து தப்பியிருந் தார். இதே போல் சாஜுவின் மனைவி சிலியின் உறவினர்களும் புகார் அளிக்க, உயிரிழந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரதேச பரிசோதனை செய்யப்பட்டன. அதன்மூலம் உண்மை வெளிவந்தது. இதுதொடர்பாக ஜூலி, அவரது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியர் ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் 6 பேரையும் கொலை செய்ததை ஜூலி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்த சீரியல் கொலை சம்பவம் தொடர்பாக கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(புதியதலைமுறை)

(ஒலி வடிவில் கேட்க..)


avatar
Guest
Guest


Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian Sat Oct 12, 2019 5:06 pm

தக்காளி மற்றும் பலப்பல சூப் ருசித்தவர் பலருண்டு
அவைகளின் ருசியை விண்டவர் சிலருண்டு.
அய்யகோ சயனைட் சூப்பை குடித்தோர்
வேறெந்த சூப்பையும் குடித்தாரில்லை.
பைபிளின் லாஸ்ட் சப்பர் போல்
இதுவும் கடைசி( soup ) சூப்பர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian Sat Oct 12, 2019 5:16 pm

சென்னை: அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன் பெண் அரசியல்வாதி ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. முன்புபோல் சாதாரண பஸ்கள் இல்லாமல், இப்போது ஆம்னி பஸ்கள் பெருக தொடங்கிவிட்டன. அதிலும் ஏசி பஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. மெத்தை, ஸ்க்ரீன், உட்பட ஏகபோக வசதிகளை கொண்டு உள்ளது. இது பயணிகளுக்கு சவுகரியத்தை தந்தாலும், ஒருசிலர் அநாகரீக காரியங்களிலும் இறங்கிவிடுகின்றனர்.  பஸ்ஸுக்குள்ளேயே விபச்சாரம் நடப்பதாக நிறைய புகார்களும் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன. அதனால் ஆம்னி பஸ்கள் மீது நம் போலீசாரும் ஒரு கண் வைத்து அடிக்கடி தடாலடி சோதனைகளை நடத்தி, குற்றசெயல்களை குறைத்து வருகின்றனர். இதோ மண்ணுக்கு அடியில்தான் ஒளிச்சு வச்சிருக்கேன்.. சுட்டி காட்டிய முருகன்.. நகையை அள்ளிய போலீஸ்! அந்த வகையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் வந்துள்ளது. பிரதமரும், சீன அதிபரும் இங்கு வந்திருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வந்ததால், சோதனையும் தீவிரமானது. அப்படித்தான் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்ஸின் கடைசி சீட்டில் ஒரு பெண் தமிழக அரசியல்வாதி இருந்திருக்கிறார். இவர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் உடல், உரிமை குறித்து நிறைய வீடியோக்களை வெளியிடும் பெண் என்கிறார்கள். 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் அரை நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். செம போதையிலும் அந்த பெண் அரசியல்வாதி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர். எனினும் 2 பேரையுமே அங்கேயே இறங்க செய்து, அந்த பஸ்ஸை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பெரிய புள்ளி அரசியல்வாதிகளிடம் டக் டக்கன போனில் பேசி, ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு அசால்ட்டாக வெளியே வந்துவிட்டாராம்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by Dr.S.Soundarapandian Sat Oct 12, 2019 8:44 pm

சுட்டுத்தள்ளூ!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian Sun Oct 13, 2019 6:52 pm

நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி!

திண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி! திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்!

நன்றி : ஹேமவந்தனா/தட்ஸ்தமிழ்  

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Oct 13, 2019 6:54 pm; edited 1 time in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian Sun Oct 13, 2019 6:57 pm

இந்த ரெண்டு வருஷத்தில் ஓவர்டைம் ஏதாவது வாங்கினாரா?
அதையும் விசாரிக்கலாமே!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by ஜாஹீதாபானு Mon Oct 14, 2019 4:55 pm

T.N.Balasubramanian wrote:நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி!

திண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி! திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்!

நன்றி : ஹேமவந்தனா/தட்ஸ்தமிழ்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1305395

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian Mon Oct 14, 2019 6:37 pm

நிர்மலா என்றால் "களங்கமில்லாத" என்று பொருள்.
சமீப காலமாக நிர்மலா என்ற பெயரில் களங்கமிக்க
செயல்பாடு உள்ளவர்களே செய்திகளில் வருகிறார்கள்.
தமிழகமே !எங்கே சென்று கொண்டு இருக்கிறோம்??

ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum