புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_lcapபேனர் விழுந்து இளம்பெண் பலி I_voting_barபேனர் விழுந்து இளம்பெண் பலி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனர் விழுந்து இளம்பெண் பலி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 5:17 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி

சென்னை: சென்னையில் சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர், இன்னும் எத்தனை உயிர்ப்பலிகளை எதிர்பார்க்கிறீர்கள் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதில், கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர், அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.

விஐபிக்கள் வருவார்களா ?

இந்த விசாரணையில் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். சட்டவிரோத பேனரில் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் இன்னும் இது போன்றுதான் தொடர்கிறது.
பேனர் வைத்தால்தான் விஐபிக்கள் வருவார்களா ? சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுங்கள். கோர்ட் உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். உத்தரவு பிறப்பிக்கும் கோர்ட்டுக்கு செயல்படுத்த முடியாது என நினைக்றீர்களா ? பேனர் வைக்க மாட்டோம் என முதல்வரே அறிக்கை விடலாமே !
எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக நினைக்கின்றனர்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மதியத்திற்குள் அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து மதியம் நடந்த விசாரணையில், பேனர் தொடர்பாக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


அதிகாரிகள் பாரபட்சம்
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர், பேனர் வைக்க கூடாது என அரசு மற்றும் பிற கட்சிகள் சார்பாக அறிக்கை அளித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது, என கூறினார்.
நீதிபதிகள், பேனர் வைக்கக்கூடாது என அரசியல் கட்சியினர் முன்பே முடிவெடுத்திருந்தால் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும். இதுவரை விவகாரத்திற்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை. அனைத்து விசேஷங்களுக்கும் பேனர் வைத்தால் தான் அமைச்சர்கள் வருவார்களா?
2 மணி அளவில் நடந்த விபத்திற்கு 6 மணிக்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வளவு அலட்சியம் ஏன். பேனரில் உள்ள வண்ணங்கள் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது.
சுபஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அந்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். மேலும் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி தினமலர்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 5:31 pm

வருத்தப்படவேண்டிய
வெட்கப்படவேண்டிய கலாச்சாரம்.
எப்போது ஆரம்பித்ததோ ?
முந்தைய ஆட்சியில் ஒரு மினிஸ்டரின் சகோதரன் விளம்பர பலகைகள் வைக்கிறேன் என்று விளையாடியது உண்டு.சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த அரசு.
இது மட்டுமா பொதுக்கூட்டங்களுக்கு கொடுக்கப்படும் மின்சாரம் எந்த கணக்கிலும் வராது.
EB எலெக்ட்ரிசியன் பையில் பணம் கொட்டும்.
ஆக மொத்தம் ஊழலை வளர்க்கவே பாடுபடுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 13, 2019 5:41 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி 1571444738
சட்டங்களை உருவாக்கும் அரசுகளே விதிமீறல்களை செய்கிறார்கள்.
எத்தனை சட்டங்கள் உருவாக்கப்பட்டன.காணாமல் போயின.
ஒரு பிரச்சனை வரும்,அடுத்த பிரச்சனை வரும் போது முதல் பிரச்சனை காணாமல் போய்விடும்.
இழப்பீடுகள் உயிரை திருப்பித்தருமா? நீதி மன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்குமா?
எல்லாம் சில நாட்கள் தான்.மீன்டும் வரும்,உயிர்பலி தடுக்க முடியாதது.மாறி மாறி வரும் ஆட்சி,அரசியல்வாதிகள் மாறாத வரை...............

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 13, 2019 6:22 pm

சுபஸ்ரீயின் தந்தை ரவி, ’'சுபஸ்ரீ எனக்கு ஒரே பொண்ணு. அவளை மிகவும் ஆசையாக வளர்த்தேன். அவள் விருப்பப்படியே பி.டெக் படிக்க வைத்தேன். அவளுக்கு கனடா சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக தேர்வும் எழுதி இருந்தாள். விரைவில் கனடா செல்ல இருந்த ஆசை மகளுக்கு இப்படி ஒரு துயரம் வரும் என கனவிலும் நினைக்கவில்லை. பேனர் தான் எனது மகளின் உயிரை பறித்து விட்டது. எனது மகளின் உயிரே கடைசியாக இருக்கட்டும்'' என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

CCTV பார்க்க பரிதாபமா இருக்கு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:40 pm

இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் பணம் பதவி பதவி .
இந்த கேடு கெட்டவர்கள் மண்டையை போடும்போது
பணத்தை கொண்டா போவார்கள்?
பெயர்/ பதவி/ தலைமை / மற்றவர்கள் தலை வணங்கி
கைகூப்பி தன் புகழ் பாடவேண்டும் என்ற கொள்கை
அரசியல் தலைகள் மட்டுமில்லை சமூகத்தில்
அதிக பேர்களிடம் உள்ளது என்பதுதான் நிதரிசனம்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக