ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 
ayyasamy ram
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 
mohamed nizamudeen
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 
VENKUSADAS
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 

Top posting users this month
heezulia
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 
ayyasamy ram
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 
mohamed nizamudeen
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 
VENKUSADAS
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் (டையாபடீஸ்)

Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Empty சர்க்கரை நோய் (டையாபடீஸ்)

Post by தாமு Tue Dec 29, 2009 5:38 am

ஆரோக்கியமான ஒரு நபரில் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை கீழே விவரிக்கப்பட்டுள்ளது


உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் -ஆக மாறுகிறது.

நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.




குளுகோஸ் செல்களுக்குள் செல்லுதல் - கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.




செல்கள் குளுக்கோஸ்-ஐ சக்தியாக மாற்றுகிறது - குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.





சர்க்கரை நோய் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்களாவன.
குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.





உணவு குளுக்கோஸ்-ஆக மாறுகிறது - வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை
ஏனெனில்



  1. இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
  2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
  3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.



செல்களினால் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாது - எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.



சர்க்கரை நோயின் அறிகுறிகள்




சர்க்கரைநோய் உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம். அவற்றில் சில

  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவ நேரத்திலும்)
  2. தோலில் அறிப்பு ஏற்படுதல்.
  3. பார்வை மங்கலடைதல்.
  4. சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.
  5. பாதம் மரத்துப்போதல்
  6. அதிகமான தாகம்.
  7. காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.
  8. எப்பொழுதும் பசியோடு இருத்தல்.
  9. எடைகுறைதல்.
  10. தோல் வியாதிகள் ஏற்படுதல்.





இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்






  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்திறுத்தல் விஷமாகும்.
  • அப்படி நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்பகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.
  • நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, ஸ்ட்ரோக் மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.
  • கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.
  • சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரக நோய் ஏற்படும்.
  • ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.





சர்க்கரை நோயினைக் கையாளுதல்




உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனிப்பட்ட நபர் சுத்தம் சுகாதாரம் மற்றும் இன்சுலினை ஊசியாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ (மருத்துவரின் அறிவுரைப்படி) எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுத்து நிறுத்தும் சில எளிய வழிமுறைகள் ஆகும்.
உடற்பயிற்சி - உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள செல்கள் குளுக்கோஸ்-யை உபயோகிப்பதனை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் போது 135 கலோரிகள் சக்தியானது பயன்படுத்தப்படுகிறது. அதுவே 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது 200 கலோரிகள் சக்தியினை எரித்து பயன்படுத்தப்படுகிறது.





சர்க்கரை நோயின்போது தோலினை பராமரிக்கும் முறை




சர்க்கரை நோய் கண்ட நபர் தோலினை பராமரிப்பது அவசியம். இரத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சான்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைந்து காணப்படுவதால், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை. அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
உடலை தவறாமல் ஒழுங்காக சோதித்து, கீழ்க்காண்பவை இருப்பின் மருத்துவரிடம் அறிவிக்க வேண்டும்.


  • தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.
  • தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.
  • பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்
  • ஆறாத காயங்கள்




சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்






  • தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது
  • வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்க்கவும்
  • குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு துடைத்தல்.
  • வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்
  • சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்




காயங்களை பராமரித்தல்




சர்க்கரை நோய் கண்ட நபர்கள் உடலில் ஏற்படும் சிறு காயங்களையும் சரியாக பராமரிப்பது அவசியம்.

  • சுத்தமான தண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிப்பட்டவுடன் காயங்களைக் கழுவவும்
  • ஆல்காஹால்/ஐயோடின் கொண்ட மருந்துகளை காயத்தின் மேல் பூச வேண்டாம். இத்தகைய மருந்துகள் எரிச்சலை உண்டாக்கும். மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளைப் பயன்படுத்தவும்
  • சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்




பாதங்களைப் பராமரித்தல்




சர்க்கரை நோய் காணப்பட்டால், நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதத்தில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களைப் பராமரிக்க சில வழிமுறைகள்

  • புண், வெட்டு காயங்கள், தடித்திருத்தல், கொப்புளங்கள், கீறல்கள் போன்றவை உள்ளனவா என்று பாதங்களை அவ்வப்போது பரிசோதித்து பாருங்கள்.
  • கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
  • நகங்களை அவ்வப்போது வெட்டவும்
முடிந்த வரை காலணிகளைப் பயன்படுத்தி, பாதங்களை பாதுகாக்கவும்








பற்களைப் பராமரித்தல்




முறையான பராமரிப்பின் மூலம் பற்களை நீண்ட நாட்கள் வலிமையோடு வைத்துக்கொள்ளலாம்.




பல் துலக்குதல் :






  • மிருதுவான இழைகளைக் கொண்ட ப்ரஷ்களைப் பயன்படுத்தவும்.
  • ஒரு நாளுக்கு, இரண்டு முறை பல் துலக்கவும்.
  • பல் துலக்கும் போது, ப்ரஷ்-ன் இழைகளை, பல் மற்றும் ஈறுகளின் மத்தியில் வைத்து, லேசான அசைவினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதின் மூலம், இவ்விடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.
  • நாக்கு, கன்னத்தின் உட்புறம் மற்றும் பற்களின் உணவு அறைக்கும் பகுதிகளை லேசான அசைவினால் சுத்தம் செய்யவும்.
  • பல் துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஷ்-ன் இழை நுனியில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. சர்க்கரை நோயாளிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ப்ரஷ்-யை மாற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் பற்களில் படியும் அழுக்கினை சுத்தம் செய்வது (பல் இடுக்குகளில்) பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கீழ்க்காண்பவற்றை கண்டறிந்தால் பல்மருத்துவரை அணுகவும்.

  • சாப்பிடும்போது அல்லது பல்துலக்கும் போது பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால்.
  • பல் ஈறுகள் சிவப்பாக மாறினால், வீக்கம் கண்டால், அல்லது மிருதுவாக காணப்பட்டால்.
  • பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படும் போது .
  • பல் ஈறுகளை தொடும்போது பல் ஈறுகளிலிருந்தும் பற்சந்துகளிலிருந்தும் சீழ் வெளிப்பட்டால்.
  • பல் அமைப்பில் மாற்றம் எற்பட்டால்.
  • துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால்.

கண்களைப் பராமரிப்பது
சர்க்கரை நோய் கண்ட நபருக்கு கேட்டராக்ட் மற்றும் குளுக்கோமா ஏற்படும் வாய்ப்பு மாற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் உண்டு. நீண்டகாலமாக அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருந்தால், கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களில் பாதிப்பினை ஏற்படுத்தி, ரெடினோபதி என்னும் நோயினை ஏற்படுத்தலாம். உண்மையில், இந்த ரெடினோபதி சர்க்கரை நோயாளிகளில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் கண்களை முழுமையாக பரிசோதிப்பது அவசியம். கீழ்க்காண்பவைகளை கண்டறிந்தால் கண் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.


  • புள்ளிகள், அலசலான பார்வை, சிலந்தி வலை போன்று பார்வை சிதைவு, பார்வையின் போது கரும்புள்ளிகள், கண் வலித்தல் மற்றும் கண்கள் தொடர்ந்து சிவந்திருத்தல் போன்ற கண் பார்வை கோளாறுகள்.
  • நன்கு அறிந்த பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை, சாலை சிக்னலை சரியாக பார்க்க முடியாத நிலை மற்றும் படிக்க முடியாமல் பிரச்சினை போன்றவை.

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) Empty Re: சர்க்கரை நோய் (டையாபடீஸ்)

Post by தாமு Tue Dec 29, 2009 5:39 am

சர்க்கரை நோய்க்கான உணவுமுறை


இது சர்க்கரை நோயாளியின் சத்து தேவையை சந்திக்கக்கூடிய மற்றும் பிறர் உண்ணக்கூடிய சாதாரண உணவு. அதில் மாவுச்சத்துப் பொருட்களின் அளவு கொஞ்சம் குறைந்தும் மற்ற உணவுப் பொருட்கள் போதுமான அளவு இருக்கும்.
சர்க்கரை நோய் கண்ட அனைவரும் கீழ்க்காணும் உணவுப் பொருட்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.


  1. வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
  2. இனிப்பு வகைகள்.
  3. எண்ணையில் வறுத்த பொருட்கள்.
  4. காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
  5. சர்க்கரை.
  6. வாழை, சப்போட்டா, சீதா போன்ற பழவகைகள்.



சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு மாதிரி










































உணவுப் பொருட்கள்

சைவ உணவு
(கிராம்களில்)

அசைவ உணவு
(கிராம்களில்)
தானியங்கள்200250
பருப்பு வகைகள்6020
பச்சிலை காய்கறிகள்200200
பழங்கள்200 200
பால் (பண்ணைப்பால்)400 200
எண்ணை20 20
தோல் நீக்கிய மீன்/கோழி- 100
மற்ற காய்கறிகள்200 200





இந்த உணவு தரும் சத்துக்களாவன












கலோரிகள்
1600
புரதம்
கொழுப்பு
மாவுப்பொருட்கள்
65 கிராம்
40 கிராம்
245 கிராம்





உணவுப் பங்கீடு






























சைவம்

அசைவம்
காலை டீ /காபி1 கப்1 கப்
காலை உணவு
ரொட்டித் துண்டு
காபி அல்லது டீ

2/3
1 கப்

2/3
1 கப்
மதிய உணவு
சாப்பாடு
சாம்பார்
பச்சைக் காய்கறிகள்
தயிர்
தக்காளி(அ) சிட்ரஸ் பழங்கள்
ஊறுகாய்

2 கப்
1 கப்
1 கப்
1/2 கப்
1
ஒரு துண்டு

2 கப்
1 கப்
1 கப்
1/2 கப்
1
ஒரு துண்டு
டீ அல்லது காபி (மாலை)
உப்புமா
1 கப்
3/4 கப்
1 கப்
3/4 கப்
இரவு உணவு
சப்பாத்தி
பருப்பு
தயிர்
மீன் / கோழி
மற்ற காய்கறிகள்
வறுத்த அப்பளம்
தக்காளி அல்லது வெள்ளரிக்காய்
படுக்க செல்லும் முன்
டீ/ காபி/ பால்

3
1 கப்
1/2 கப்
-
1 கப்
1
1


1 கப்

4
-
-
2துண்டுகள்
1 கப்
1
1


1 கப்


உடல்நலம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum