Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
2 posters
Page 1 of 1
சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
பெங்களூரு,
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய
‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி
விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலை
நிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி
வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.
கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின்
சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக
5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று
வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’
விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து
நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.
பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம்
லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை
மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை
நெருங்கியது.
இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய
மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில்
நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’
நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும்
வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள்
காத்திருக்கிறார்கள்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில்,
“லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும்
வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு
2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில்
தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து
தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
-
----------------------------------------
தினத்தந்தி
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய
‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி
விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலை
நிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி
வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.
கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின்
சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக
5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று
வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’
விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து
நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.
பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம்
லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை
மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை
நெருங்கியது.
இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய
மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில்
நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’
நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும்
வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள்
காத்திருக்கிறார்கள்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில்,
“லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும்
வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு
2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில்
தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து
தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
-
----------------------------------------
தினத்தந்தி
Re: சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
![சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு Chandrayaan1](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/6/w600X300/Chandrayaan1.jpg)
-
விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது:
தைரியமாக இருங்கள் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர்
மோடி ஆறுதல்
தினமணி
Re: சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
நேற்றிரவு இரண்டரை மணி அளவில் விழித்தெழுந்து பார்க்கையில்
பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பேசி விட்டு போவதையும் தகவல் துண்டிக்கப்பட்டதையும் அறிந்து மனம் வேதனைப்பட்டது.
ரமணியன்
பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பேசி விட்டு போவதையும் தகவல் துண்டிக்கப்பட்டதையும் அறிந்து மனம் வேதனைப்பட்டது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
இது தோல்வி அல்ல.
விக்ரம் சுற்றுவட்டத்தை விட்டு விலகி இருக்கலாம்,பகுதிகள் செயலிழந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம்.மீண்டும் தொடர்பு வரலாம்.....
நான் விஞ்ஞானி அல்ல.
விக்ரம் சுற்றுவட்டத்தை விட்டு விலகி இருக்கலாம்,பகுதிகள் செயலிழந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம்.மீண்டும் தொடர்பு வரலாம்.....
நான் விஞ்ஞானி அல்ல.
Guest- Guest
Re: சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்த உலகில் இருக்கும் மூன்றுவிதமான மக்களில் ஒரு சிலர் எதுக்குமே முயற்சிக்கவே மாட்டார்கள். தோல்வி என்றாலே அவர்களுக்கு பெரும் பயமாக இருக்கும். மற்ற ஒரு சிலர் ஏதாவது பிரச்சினை என்றாலே வேகமாக அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். மற்ற ஒரு சிலர் எந்த பிரச்சினையாக இருந்தாலும்... தைரியமாக எதிர் கொள்வார்கள்.
அவர்கள் செய்யும் எந்த ஒரு வேலையிலும் உறுதியாக இருப்பார்கள். தான் இறங்கிய வேலையில் வெற்றி பெற்றே தீருவோம்... என முழு முயற்சியோடு எந்த ஒரு நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமல் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள்.. அவர்கள் தான் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள்" என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பிகு.
இன்றைய பாக்கிஸ்தான் ஊடகங்களில் கொண்டாட்டம்,கேலி என பல நெகட்டிவ் செய்திகள் வந்ததை பார்க்க முடிந்தது. இவர்களை எந்த வகையில் சேர்க்கப் போகிறீர்கள்?
இந்த நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி..............
விக்ரம் மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெப்ப நிலை குறைவான நிலா, ஈர்ப்பு குறைவான நிலா (விழுந்து நொறுங்க வாய்ப்பில்லை),சூரிய ஒளி மீண்டும் கிடைக்கும் பட்சத்தில் செயல்பட வாய்ப்புள்ளது.
அவர்கள் செய்யும் எந்த ஒரு வேலையிலும் உறுதியாக இருப்பார்கள். தான் இறங்கிய வேலையில் வெற்றி பெற்றே தீருவோம்... என முழு முயற்சியோடு எந்த ஒரு நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமல் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள்.. அவர்கள் தான் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள்" என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பிகு.
இன்றைய பாக்கிஸ்தான் ஊடகங்களில் கொண்டாட்டம்,கேலி என பல நெகட்டிவ் செய்திகள் வந்ததை பார்க்க முடிந்தது. இவர்களை எந்த வகையில் சேர்க்கப் போகிறீர்கள்?
இந்த நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி..............
விக்ரம் மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெப்ப நிலை குறைவான நிலா, ஈர்ப்பு குறைவான நிலா (விழுந்து நொறுங்க வாய்ப்பில்லை),சூரிய ஒளி மீண்டும் கிடைக்கும் பட்சத்தில் செயல்பட வாய்ப்புள்ளது.
Guest- Guest
Re: சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு
வாஷிங்டன் / லண்டன், பிடிஐ
சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்ததையடுத்து பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து வருகின்றனர்.
இந்நிலையில் அயல்நாட்டு ஊடகங்களில் இது குறித்து கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல் சாதனையான சந்திரயான் -2 பற்றி தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி பிபிசி, தி கார்டியன் உள்ளிட்ட ஊடகங்கள் சந்திரயான் - 2 பற்றி செய்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க மேகசீன் ஒயர்டு, “சந்திரயான் 2 திட்டம் இந்தியாவின் ஆகப்பெரிய லட்சியத் திட்டமாகும் ஆனால் இன்னும் முழுமையடையவில்லை” என்று கூறியுள்ளது.
மேலும் இதே செய்தி அறிக்கையில் அந்த ஊடகம் தெரிவிக்கும் போது, “விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் தொடர்பு இழக்கப்பட்டது இந்திய விண்வெளித்திட்டத்துக்கு ஒரு அடிதான். ஆனால் அனைத்தையும் இழந்து விடவில்லை” என்று கூறியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் ஊடகம், “பொறியியல் சாதனை, ஆற்றல் பல பத்தாண்டுகளான விண்வெளி வளர்ச்சி” என்று பாராட்டியதோடு ‘இந்தியா தன் லேண்டிங் முயற்சியில் முதல் முறை சரியாக அமையாமல் இருந்திருக்கலாம் ஆனால் பல பத்தாண்டுகளின் விண்வெளி ஆய்வு வளர்ச்சி, அதன் உலகளாவிய லட்சியங்களுடன் கூடிய இந்தியாவின் ஆற்றலை முக்கியாம்சப்படுத்துகிறது. சந்திரயான் திட்டத்தின் பகுதியளவு தோல்வி நிலவின் மேற்பகுதியைத் தொட்ட பிற உயர் நாடுகளின் லீகில் இந்தியா இணைவதை தாமதப்படுத்தியுள்ளது. ஆனால் ஆர்பிட்டர் ஆப்ரேஷனில்தான் உள்ளது” என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நாளேடான தி கார்டியன், “இந்தியாவின் நிலவைத் தொடும் திட்டம் கடைசி நிமிட தொடர்பிழப்பினால் பாதிப்படைந்துள்ளது” என்று தலைப்பிட்டு பிரான்ஸ் விண்வெளி முகமை சி.என்.இ.எஸ்.இன் இந்தியப் பிரதிநிதி மாத்யூ வெய்ஸ் என்பவர் கூறிய “அடுத்த 20, 50 அல்லது 100 ஆண்டுகளில் நிலவில் மனிதன் குடியேறும் வாய்ப்புள்ளதை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட், நிலவில் லேண்டர் இறங்குவதில் முதல் முயற்சி தோல்வியடைந்தது போல் தெரிகிறது ஆனால் மிகப்பெரிய தேசியப் பெருமைக்கான ஆதாரம் என்று எழுதியுள்ளது.
பிபிசி சந்திரயான் பற்றி கூறும்போது, “அவெஞ்ச்ர்ஸ் எண்ட்கேம் பட்ஜெட் 356 மில்லியன் டாலர்களாக எதிர்பார்த்ததை விட இருமடங்குக்கும் அதிகம். ஆனால் சந்திரயான் 2 குறைந்த செலவில் அனுப்பப்பட்டதுதான் உலகத்தை கவர்ந்தன. ஆனால் இது முதல் முறையல்ல, இந்தியாவின் செவ்வாய் கிரக திட்டமும் 74 மில்லியன் டாலர்கள் செலவில்தான் நடந்தேறியது. அமெரிக்காவின் மேவன் ஆர்பிட்டரை ஒப்பிடும் போது 10-ல் ஒரு பங்குதான் இந்தச் செலவினமாகும்.
பிரான்ஸின் புகழ் பெற்ற ‘ல மோண்ட்’ பத்திரிகை தன் கட்டுரையை ‘உடைந்த கனவு’ என்று தொடங்கியுள்ளது.
எனவே இந்திய முயற்சிக்கு அயல்நாட்டு முன்னணி ஊடகங்களில் பெருமையும் வருத்தமும் தோய்ந்த புகழாரங்கள் என்று கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.
நன்றி ஹிந்து தமிழ்
ரமணியன்
சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்ததையடுத்து பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து வருகின்றனர்.
இந்நிலையில் அயல்நாட்டு ஊடகங்களில் இது குறித்து கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல் சாதனையான சந்திரயான் -2 பற்றி தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி பிபிசி, தி கார்டியன் உள்ளிட்ட ஊடகங்கள் சந்திரயான் - 2 பற்றி செய்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க மேகசீன் ஒயர்டு, “சந்திரயான் 2 திட்டம் இந்தியாவின் ஆகப்பெரிய லட்சியத் திட்டமாகும் ஆனால் இன்னும் முழுமையடையவில்லை” என்று கூறியுள்ளது.
மேலும் இதே செய்தி அறிக்கையில் அந்த ஊடகம் தெரிவிக்கும் போது, “விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் தொடர்பு இழக்கப்பட்டது இந்திய விண்வெளித்திட்டத்துக்கு ஒரு அடிதான். ஆனால் அனைத்தையும் இழந்து விடவில்லை” என்று கூறியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் ஊடகம், “பொறியியல் சாதனை, ஆற்றல் பல பத்தாண்டுகளான விண்வெளி வளர்ச்சி” என்று பாராட்டியதோடு ‘இந்தியா தன் லேண்டிங் முயற்சியில் முதல் முறை சரியாக அமையாமல் இருந்திருக்கலாம் ஆனால் பல பத்தாண்டுகளின் விண்வெளி ஆய்வு வளர்ச்சி, அதன் உலகளாவிய லட்சியங்களுடன் கூடிய இந்தியாவின் ஆற்றலை முக்கியாம்சப்படுத்துகிறது. சந்திரயான் திட்டத்தின் பகுதியளவு தோல்வி நிலவின் மேற்பகுதியைத் தொட்ட பிற உயர் நாடுகளின் லீகில் இந்தியா இணைவதை தாமதப்படுத்தியுள்ளது. ஆனால் ஆர்பிட்டர் ஆப்ரேஷனில்தான் உள்ளது” என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நாளேடான தி கார்டியன், “இந்தியாவின் நிலவைத் தொடும் திட்டம் கடைசி நிமிட தொடர்பிழப்பினால் பாதிப்படைந்துள்ளது” என்று தலைப்பிட்டு பிரான்ஸ் விண்வெளி முகமை சி.என்.இ.எஸ்.இன் இந்தியப் பிரதிநிதி மாத்யூ வெய்ஸ் என்பவர் கூறிய “அடுத்த 20, 50 அல்லது 100 ஆண்டுகளில் நிலவில் மனிதன் குடியேறும் வாய்ப்புள்ளதை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட், நிலவில் லேண்டர் இறங்குவதில் முதல் முயற்சி தோல்வியடைந்தது போல் தெரிகிறது ஆனால் மிகப்பெரிய தேசியப் பெருமைக்கான ஆதாரம் என்று எழுதியுள்ளது.
பிபிசி சந்திரயான் பற்றி கூறும்போது, “அவெஞ்ச்ர்ஸ் எண்ட்கேம் பட்ஜெட் 356 மில்லியன் டாலர்களாக எதிர்பார்த்ததை விட இருமடங்குக்கும் அதிகம். ஆனால் சந்திரயான் 2 குறைந்த செலவில் அனுப்பப்பட்டதுதான் உலகத்தை கவர்ந்தன. ஆனால் இது முதல் முறையல்ல, இந்தியாவின் செவ்வாய் கிரக திட்டமும் 74 மில்லியன் டாலர்கள் செலவில்தான் நடந்தேறியது. அமெரிக்காவின் மேவன் ஆர்பிட்டரை ஒப்பிடும் போது 10-ல் ஒரு பங்குதான் இந்தச் செலவினமாகும்.
பிரான்ஸின் புகழ் பெற்ற ‘ல மோண்ட்’ பத்திரிகை தன் கட்டுரையை ‘உடைந்த கனவு’ என்று தொடங்கியுள்ளது.
எனவே இந்திய முயற்சிக்கு அயல்நாட்டு முன்னணி ஊடகங்களில் பெருமையும் வருத்தமும் தோய்ந்த புகழாரங்கள் என்று கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.
நன்றி ஹிந்து தமிழ்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்
» சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ அறிவிப்பு
» சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்
» சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|