புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
62 Posts - 39%
heezulia
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
10 Posts - 6%
prajai
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
3 Posts - 2%
mruthun
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
21 Posts - 5%
prajai
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
7 Posts - 2%
mruthun
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_m10நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 28, 2019 9:11 pm


தஞ்சாவூரில் தொழிலாளி ஒருவர் அழிந்துவரும் சிட்டுக்குருவி
இனங்களைக் கூடுகள் அமைத்து காத்து வருவதால் அவை
பெருகி வருகின்றன.

இதை அறிந்த மக்கள் அந்தத் தொழிலாளியை சிட்டுக்
குருவிகளின் காதலன் எனப் பெருமிதத்தோடு பாராட்டி
வருகிறார்கள்.
-
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Vikatan%2F2019-08%2Fbf5817a2-0339-46fd-bcb1-c9301746eab1%2F13680c8c_e344_4e4b_a4e9_88180ee26b67
-
நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Vikatan%2F2019-08%2F4d812c36-b1fc-4cb7-9c81-6e5336f970bb%2Fcf35c722_982b_420e_ba23_f1369d8caacd
-

சிட்டுக்குருவி இனங்கள் கடந்த பல வருடங்களாகவே
அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. மேலும்,
அவற்றைப் பார்ப்பதே தற்போது அரிதாகிவிட்ட
சூழ்நிலையில் தஞ்சாவூரில் சலவைத் தொழிலாளி ஒருவர்
இரண்டு வருடமாகக் கூடுகள் அமைத்து, அதற்குரிய
தீவனங்கள் வைத்து சிட்டுக்குருவிகளைத் தன் குழந்தைகள்
போல் எண்ணி காத்து வருகிறார்.

இதனால் அவை பெருகி வருகின்றன. இதை அறிந்தவர்கள்
அனைவரும் அந்தத் தொழிலாளியை சிட்டுக்குருவிகளின்
காதலன் எனப் பெருமிதத்தோடு பாராட்டி வருகிறார்கள்.

தஞ்சாவூர் - பட்டுக்கோடை பைபாஸ் சாலையில்
கீழவஸ்தாசாவடி அருகே சலவைத் துணிக்கடை நடத்தி
வருபவர் ரமேஷ். இவர் அழிந்துவரும் சிட்டுக்குருவி
இனங்களைப் பாதுகாக்கின்ற வகையிலும் அதைப்
பெருக்குகிற முயற்சியோடும் செயல்பட்டு வருவதுடன்,
சிட்டுக்குருவிகளின் காதலனாகவும் திகழ்ந்து வருகிறார்.

அவர் கடை அமைந்துள்ள வணிக வளாகத்தில் வரிசையாகப்
பத்துக்கும் மேற்பட்ட தேவையற்ற அட்டைப் பெட்டிகளைக்
கொண்டு குருவிகள் வந்து செல்லும் வகையில் துளையிட்டு
கூண்டு போல் கட்டி வைத்துள்ளார்.

அந்த அட்டைப் பெட்டிக்குள் சிட்டுக்குருவிகள் தானாகவே
கூடு அமைத்து வாழ்ந்து வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட
சிட்டுக்குருவிகள் வருவதும் போவதுமாக இருக்கிறது.

50-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் அங்கேயே வசித்து
வருகின்றன. இந்தக் குருவிகளுக்கு உணவு வைப்பது
தொடங்கி ஒரு அகண்ட பாத்திரத்தில் குளிப்பதற்கும்
குடிப்பதற்கும் தண்ணீர் வைப்பது வரை குருவிகளைத் தன்
குழந்தைபோல எண்ணி அக்கறையோடு கவனித்து வருகிறார்
ரமேஷ்.

அருகில் கடை வைத்திருப்பவர்களும் சிட்டுக்குருவிகளைக்
காப்பதற்கு ஒத்தாசையாக இருப்பதால் தனக்கே உரித்தான
சுறுசுறுப்போடு மெல்லிய சத்தம் மூலம் அந்த சந்தோஷத்தை
எழுப்பி வெளிப்படுத்தி கொண்டவாறே தன்னுடைய
இனத்தைப் பெருக்கி வருகின்றன சிட்டுக்குருவிகள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 28, 2019 9:13 pm

நூறு சிட்டுக்குருவிகளின் காவலன்! - தஞ்சாவூரில் 2 வருட நெகிழ்ச்சிக் கதை Vikatan%2F2019-08%2F44e20e23-2cea-46d2-bb90-94250f66f71e%2F9a06a099_2054_4b30_82d0_61de502dd7b7
-
ரமேஷ்
---------

இது குறித்து ரமேஷிடம் பேசினோம்.
``ரெண்டு வருடத்துக்கு முன்பு மூன்று நாள் கடையைப் பூட்டி
விட்டு வெளியூருக்குப் போயிருந்தேன். திரும்பி வந்து
கடையைத் திறந்தபோது கதவின் மேல் பக்கத்தில் இருந்து
புதிதாகக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு கீழே விழுந்துவிட்டது.

சற்று நேரத்தில் அந்த இடத்துக்கு இரண்டு சிட்டுக்குருவிகள்
வந்ததுடன் கீழே கிடந்த கூடைப் பார்த்து சுற்றிக்கொண்டே
இருந்ததுடன் மேலே பார்த்தபடியே ஏக்கத்தோடு சத்தமிட்டுக்
கொண்டிருந்தன. இதைக் கண்டதும் என் மனதுக்குக் கஷ்டமாகி
விட்டது.

`யாருமே இல்லை என நினைத்துதானே இங்கு கூடு கட்டினோம்.
நம்ம வீட்டை இடித்துவிட்டார்களே' என்பதுபோல் அவற்றின்
சத்தங்கள் இருந்ததை நான் உணர்ந்தேன்.

உடனே குருவிகள் தங்கக்கூடிய வகையிலான அட்டைப் பெட்டி
ஒன்றை எடுத்து உள்புறத்தின் மேல் பகுதியில் கட்டி வைத்தேன்.
நமக்காகத்தான் இதைச் செய்கிறார் என்பது அந்த இரண்டு
குருவிகளும் புரிந்து கொண்டதுபோல் கீழே விழுந்த கூட்டில்
இருந்த நார் உள்ளிட்டவற்றை எடுத்து அட்டைப் பெட்டிக்குள்ளேயே
மீண்டும் கூடு தயார் செய்ததுடன் அதில் வசிக்கவும் தொடங்கின.
பின்னர், அந்தக் குருவிகள் குஞ்சுகள் பொறிக்கத் தொடங்கி
அவை வளர்ந்து பெரியவையானது.

அப்போது ஒரு பெட்டி மட்டும் இருந்ததால் அது குருவிகளுக்கு
பத்தாது என அறிந்த நான் எட்டு அடி இடைவெளிவிட்டு பத்துக்கும்
மேற்பட்ட அட்டைப் பெட்டிகளைக் கட்டி வைத்தேன். அதன் உள்ளே
இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீடு போல் அழகாகக் கூடுகளை
அமைத்துக்கொண்டன குருவிகள்.

அதன் பிறகு, சிட்டுக்குருவிகள் படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை குருவி குஞ்சு
பொறித்திருக்கின்றன. நூறு குருவிகள் வருவதும் போவதுமாக
இருக்கின்றன. ஒரு கூட்டுக்கு இரண்டு குருவிகள் வீதம் 50 குருவிகள்
வரை இங்கேயே நிரந்தரமாக வசிக்கின்றன.

அவை ஷட்டர்ஸ் கதவின் உள் பக்கத்தில் பல இடங்களிலும்
கூடுகள் அமைத்தும் தங்கியிருக்கின்றன.

நெல், அரிசி போன்றவை அவற்றுக்கு உணவாகக் கூண்டுக்குள்
வைப்பேன். அதைக் குருவிகள் சாப்பிடும். மேலும், குடிப்பதற்கு
பாத்திரத்தில் தண்ணீரும் வைத்துவிடுவேன். குடிப்பதற்கு
மட்டுமல்ல அந்தத் தண்ணீரிலேயே அவை ஆனந்தமாகக்
குளிக்கவும் செய்யும்.

என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதைப்
பார்த்து அதிசயித்து வியந்து என்னைப் பாராட்டிவிட்டுச்
செல்வார்கள். சிலர், கம்பு உள்ளிட்ட தீவனங்களை வாங்கிக்
கொடுத்தும் சாப்பிட வைகக்ச் சொல்வார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 28, 2019 9:14 pm




நான் சிறுவனாக இருக்கும்போது சிட்டுக்குருவிகள் அதிகமாக
இருக்கும். அவற்றின் செயல்களைப் பார்க்கும்போதே நமக்கு
ஒரு தனி சந்தோஷம் வரும். நம்மை அறியாமல் ஒரு சுறுசுறுப்பு
எல்லோரையும் தொற்றிக்கொள்ளும்.

ஆனால், கடந்த 10 வருடமாக சிட்டுக் குருவிகள் அழிந்து
வருகின்றன. எல்லா இடங்களிலும் இருந்த குருவிகள் தற்போது
சில இடங்களில் மட்டும் இருக்கின்றன. அவையும் மிகக்
குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.

சாலைக்கு அருகில் வாகனங்கள் அதிகமாகச் செல்லக்கூடிய
எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த இடத்திலேயே
சிட்டுக் குருவிகள் வசிக்கின்றன இனப்பெருக்கம் செய்து பெருகி
வருகின்றன.

ஆனால், அவை வாழ்வதற்கு, பெருகுவதற்கு ஏற்ற சூழல்கள்
இருக்கும் இடத்தில் இதுபோன்று சிறு முயற்சியை நாம் செய்தால்
நிச்சயம் அவை அழியாமல் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் ஒரு இனத்தைக் காக்கின்ற மன நிறைவு நமக்கு
இருக்கும். காலை, மாலை வேளைகளில் இந்த இடமே சிட்டுக்
குருவிகளின் சேட்டைகளால் சந்தோஷம் நிரம்பி வழியும்
இடமாக மாறி வருகிறது.

நான் குருவிகள் தங்குவதற்கு மட்டுமே ஏற்பாடு செய்தேன்.
அவை தானாகப் பெருகி வருகின்றன. சாதாரணமாக செய்யத்
தொடங்கிய இந்தச் செயலை எல்லோரும் மனதாரப்
பாராட்டுகின்றனர். அவை இன்னும் இந்தக் குருவிகளைக்
காப்பதற்கு எனக்கு உந்துசக்தியைக் கொடுக்கிறது'' என்றார்.
-
------------------------------------
கே.குணசீலன்
புகைப்படம்-ம.அரவிந்த்
-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக