Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
Page 1 of 1
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
![அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி | Population](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/original/population.jpg)
ஆயிரம் கட்சிகள் பிறந்தாலும்
மறைந்தாலும் ஒற்றுமையாய்
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு
ஒலிவு மறைவின்றி பளிச்சிட்டு
உங்களுக்காகவே நாங்கள் என்ற
இணக்கம் கொள்ளளே அரசியல்
-
மக்களை சார்ந்தது மக்களை போய்
சேர்ந்திடச் செய்தலே அரசியல்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுதல் இல்லாதிருத்தல் அரசியல்
கொடுப்பதொன்றை மறைப்பது
இரண்டை ஆகாது என்று மரசியல்
-
உள்ளுக்குள்ளே குத்தல் குடைச்சல்
அதற்கு பெயரில்லை அரசியல்
இடத்திற்கு இடம் நிறம் மாரும்
பச்சோந்து போலில்லை அரசியல்
-
-------------------------
- வே. சகாய மேரி, திருக்க அரியலூர்
Re: அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
**
தாமரை மலர்ந்தது. அரசியல். சேற்றில்
வாமனன். உலகளந்து. நிமிர்ந்தது போன்று
தாமோதரனால் ஓங்கி உயர்ந்தது பாரதம்
நாமோ , “வாழ்க நமோ ! “ என்றனமே .
அன்றொரு நரேந்திரன் உள்ளம். நிறைத்தான் !
இன்றொரு நரேந்திரன் புண்ணியம் காத்தான் !
என மகிழ்வுற்று பாரத தாயும், “ வாழ்க , வாழ்க “
என வாழ்த்தினள் தவ புதல்வர்களையே .
பாரத அன்னைக்கு. கிரீடம் சூட்டினான்
பாரத முத்தன்ன நம் தலைவன் மோதி
எங்கும் வளர்ச்சி ! எங்கும் மகிழ்ச்சி !
சங்கு முழங்கி ஆனந்த கூத்திடுவோமே .
தங்கும் வளம் என்றும். பொங்கிட
ஓங்கும். புகழ் என்றும் நிலைத்திட
வாழ்க பாரதம். ! வளர்க. பாரதம் !
வாழ்க, வாழ்க ! எம் தாயே !
- ராணி பாலகிருஷ்ணன்
Re: அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
**
சமூகத்தின் வாழ்வாதாரங்களின் மேல்
அக்கரை கொண்டு சேர வேண்டியதை
சேர வேண்டியவரிடம் சேர்க்க குறுக்கே
நிற்கும் தடை முடையினை உடைத்து
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே
சேர்த்திடும் மைய்யமே அரசியலாகும்
மக்கள் உரிமை காக்கப்பட வரையப்பட்ட
சாசனங்களில் நிறைவின்மை
குறைபாட்டினை பாராளுமன்ற துணையோடு
குறைவை திருத்தி ஷரத்தை மாற்றி
வேண்டாததை அகற்றி புதிதாக தீட்டி
மக்களிடம் சேர்ப்பது அரசியல்
நோக்கர் அரசியல் நிகழ்வுகளை
கவனித்துக் கருத்துக் கூறுபவர்
கூடும் நியாய ஆலயமே அரசியல்
கரைபடா கரங்களங்கே தெய்வங்கள்
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்
Re: அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
**
அன்றைய அரசியல் அடிமைத் தளையொழித்து
அடிப்படை வசதிகளை அனைவரும் பெற்றிடவே
அறவழியில் போராடி அஹிம்சை துணைகொண்டு
உள்ளத்தால் பொய்யாது உத்தம வழிகளிலே
கடைக்கோடி மக்களுமே கண்ணியமுடன் வாழ
தன்னலங் கருதாத தருமமிகு தலைவர்களை
கொண்டே இலங்கிற்று!கொடுப்போர் தாம்மட்டுமே
தலைவர்களாய் இருந்தார்கள்! தருமத்தைக் காத்தார்கள்!
ஓட்டுக்குப் பணமளித்து ஒட்டுமொத்த மக்களையே
தம்வலையில் வீழவைத்துத் தரணியாள வந்திட்டார்!
ஊழல் கமிஷனென்று ஒவ்வொன்றிலும் பணம் சேர்த்து
இயற்கை வளத்தையெல்லாம் இவர்வாழ்வு சிறப்பதற்கே
அரசியல் ஆயுதத்தை அற்புதமாய்ப் பயன்படுத்தி
நாட்டை அழித்திட்டார்!நலவாழ்வைக் கெடுத்திட்டார்!
மக்கள் விழித்திடணும்! மறுமலர்ச்சி வந்திடணும்!
தப்பைக் குறைத்திடணும்! தரணியை உயர்த்திடணும்!
- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி
Re: அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
**
காட்டில் திரிந்து வேட்டையு மாடி
கழனி திருத்தி ஊராய்க் கூடி
உழவு புரிந்து உற்பத்தி செய்து
இல்லறம் நடத்தி இன்புற வாழ்ந்து
இனிய மொழியுடன் கல்வி பயின்று
இனிதாய் வாழக் கலைகளும் கற்று
சீராய் நடக்கச் சிந்தனை செய்து
அறிவு விரித்து ஆற்றல் பெருக்கி
குற்றந் தடுக்கச் சட்டங்கள் இயற்றி
சதுரங்கம் ஆடிடும் ஆட்டம் இதையே
அரசியல் என்பார் அறிந்தவர் பலரும்
அதில் நீதிதுறந்து நெறிகள் தவறி
ஊழலும் பிழைகளும் செய்திடு வோர்க்கு
அறமல்லாது வேறெவன் கூற்று?
- கு. இரா, வடக்கு அயர்லாந்து
Re: அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
**
சிறுக விதைத்து
பெருக அறுக்கும்
இயந்திரமாம்,
மண்புழுவை வெறுத்து
சாக்கடைப் புழுவை வைத்து
மீன் பிடிக்கும்
தூண்டில்;
முன்னோரைப் பழித்து
இன்னோரைப் புகழ்ந்து
பையை நிரப்பும்
தஞ்சைத் தாலாட்டுகள்;
பாகு செய்த வீட்டில்
பாசானம் செய்யும்
பங்காளிகள்;
சாதியும் மதமும்
தன் உயர்வுக்கு
மோதவிடும் மேதாவிக்
கூட்டங்கள்.......
- சுழிகை ப.வீரக்குமார்
Re: அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
**
கொள்ளை கோஷ்டிகளாய் களம் புகுந்து
வெள்ளை வேஷ்டிகளை தரிப்பது!
ஏசி காரில் ஊர் சுற்றி - வலம் வந்து
ஓசி சோறில் உண்டு செரிப்பது!
ராக்கெட் செலவில் அடம்பரமாய்
பாக்கெட் மணிகளை எறிவது!
சட்டசபையில் தூங்கி விழுந்து
சுட்டபூரியாய் வீங்கி திரிவது
ஊடகம் மெச்சும்படி -சேவை
நாடகம் ஒன்றை அரங்கேற்றுவது
போலி வாக்குறுதியில் வென்று-ஒரு
ஜாலி வாழ்க்கையை கரம்பற்றுவது!
புழுவையும் கல்லையும் சேர்த்து
புழுங்கல் அரிசி போட்டதை தவிர
இந்த அரசியல் என்ன செய்தது எங்களுக்கு?
-அ.அம்பேத் ஜோசப்
Re: அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
**
முன்னோர் வகுத்த
நெறிகளை மறைத்து
சின்னோர் பிரித்த
சிறு வணிகக் கூடாரம்;
உருட்டும் எலியா?
மிரட்டும் பூனையா?
தெரியாமல் திரியும்
விலங்கின சமூகம்;
நற் சிந்தனையுடைய
நல்லோர் தந்ததை
சிற் சிந்தனை கொண்டு
எல்லாம் கெடுக்கும்
காவலனாய் மாற்றும்
அசாத்திய பதவி தரும்
அரசியலால்.......
- முகில் வீர உமேஷ், திருச்சுழி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல் எழுதிய கவிதையின் தமிழாக்கம்
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
» மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!}
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
» மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|