ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!

2 posters

Go down

19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Empty 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!

Post by ayyasamy ram Fri Aug 16, 2019 5:31 am

19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Armyday13

பத்தொன்பது ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு,
பாதுகாப்புத் துறையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த
முப்படைத் தளபதி பதவியை மத்திய அரசு
உருவாக்கியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த
1999-ஆம் ஆண்டு கார்கில் போர் மூண்டது. இதில்,
இந்தியாவின் முப்படைகளான ராணுவப் படை,
விமானப் படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த
வீரர்கள் பங்கேற்று, இந்தியாவுக்கு வெற்றி தேடித்
தந்தனர்.

இருந்தபோதிலும், இந்தப் போரின்போது முப்படைகளுக்கு
இடையேயான தகவல் தொடர்பில் சிறிது தொய்வு காணப்
பட்டதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, இது குறித்து ஆராய உயர்நிலைக் குழு ஒன்று
அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது, முப்படைகளின்
செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க முப்படைத் தளபதி
பதவியை உருவாக்க வேண்டுமென முதன் முதலில்
வலியுறுத்தியது.

இருந்தபோதிலும், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்
தலைமையிலான பாஜக அரசு இது குறித்து எந்த முடிவும்
எடுக்கவில்லை.

இதன்பிறகு, தேசியப் பாதுகாப்பு அமைப்பில் ஏற்படுத்தப்பட
வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட
அமைச்சர்கள் குழுவும், முப்படைத் தளபதி பதவியை
உருவாக்க ஆதரவு தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2012-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட
நரேஷ் சந்திரா தலைமையிலான சிறப்புக் குழு, முப்படைத்
தளபதிகளின் குழுவை அமைக்கப் பரிந்துரைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ராணுவப்படை,
விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் தலைமைத்
தளபதிகளைக் கொண்ட முப்படைத் தளபதிகளின் குழுவை
அமைத்தது. முப்படைகள் இடையேயான ஒருங்கிணைப்பு
தொடர்பான விவகாரங்களில் இக்குழு முடிவெடுத்து
வருகிறது.

மூன்று தளபதிகளில் மூத்தவர், இக்குழுவின் தலைவராகச்
செயல்பட்டு வருகிறார். தற்போது, விமானப்படைத்
தலைமைத் தளபதி பி.எஸ். தனோவா இக்குழுவின்
தலைவராகச் செயல்பட்டு வருகிறார். வரும் செப்டம்பர் 30-
ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெறுகிறார். அவரையடுத்து,
ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத், அக்குழுவின்
தலைவராகச் செயல்படுவார்.

உயர்நிலைக் குழு: இந்நிலையில், முப்படைகளும்
ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாட்டின் பாதுகாப்பை மேலும்
உறுதிசெய்யும் நோக்கில், முப்படைத் தளபதி பதவி
உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர
தின உரையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முப்படைத் தளபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான
வழிமுறைகளை உருவாக்க உயர்நிலைக் குழுவை அமைக்கும்
பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இக்குழுவானது,

முப்படைத் தளபதி தேர்ந்தெடுக்கப்படும் முறை, அவரது
பதவிக்காலம், அவரது அதிகாரங்கள் மற்றும் அங்கீகாரம்
உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யும்.

முப்படைத் தளபதிகளின் குழுவைப் போல, வயதின்
அடிப்படையில் முப்படைத் தளபதி தேர்ந்தெடுக்கப்பட்டால்,
நாட்டின் முதல் முப்படைத் தளபதியாகும் வாய்ப்பு ராணுவத்
தளபதி விபின் ராவத்துக்கே அதிகம் என்று அவர்கள்
தெரிவித்தனர்.

வரவேற்பு: முப்படைத் தளபதி பதவி உருவாக்கப்படுவதற்கு
பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலர் வரவேற்பு
தெரிவித்துள்ளனர். ராணுவத்தின் முன்னாள் தலைமைத்
தளபதி வி.பி. மாலிக் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில்,
வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவெடுத்த பிரதமர் மோடிக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது முப்படைகளின் ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்
என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கடற்படையின் முன்னாள் தலைமைத்
தளபதி சுனில் லாம்பா கூறுகையில், நீண்டகாலக்
கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்
மூலம், பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட், திட்டமிடுதல்
உள்ளிட்டவற்றை எளிதில் மேற்கொள்ள முடியும் என்றார்.

விமானப்படை முன்னாள் துணைத் தளபதி
மன்மோகன் பகதூர், ராணுவத்தின் முன்னாள் செயலாளர்
சையது அட்டா ஹஸ்னைன் உள்ளிட்டோரும் வரவேற்பு
தெரிவித்துள்ளனர்.
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி! Empty Re: 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 16, 2019 11:16 am

முப்படைக்கும் தளபதி அனைத்தும் அறிந்தவராக திறமையானவராக இருக்க வேண்டும்
அப்போது தான் போர் காலங்களில் செம்மையாக செயல்பட முடியும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து : இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 12 பேர் உயிரிழப்பு!
» கொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் தளபதி ரமேஷ்!
» `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
» மின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum