புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
32 Posts - 52%
heezulia
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
32 Posts - 52%
heezulia
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பொன்மனம் முத்துக்காளை Poll_c10பொன்மனம் முத்துக்காளை Poll_m10பொன்மனம் முத்துக்காளை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மனம் முத்துக்காளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 5:28 pm

பொன்மனம் முத்துக்காளை 18
-
பொன்மனம் படைத்தவர்கள் இல்லை என்றால் இந்த
முத்துக்காளை இல்லை. சொந்த ஊர் ராஜபாளையம்
அருகில் உள்ள சங்கம்பட்டி என்கிற திருகோதையாபுரம்.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது முதன்முதலாக
ஒரு பொன்மனசுக்காரரை சந்தித்தேன்.

அப்போது சத்துணவுக்கு என்று தனியாக ஆயாமார்கள்
கிடையாது. ஆயாக்களுக்கு பதிலாக சில சமயம் நான்
சமையல் பணிக்கு உதவியாக இருப்பேன். அதற்கு
பிரதிபலனாக எனக்கு பாஸ்மார்க் கிடைத்தது.
என்னை பாஸாக்கிவிட்ட அந்த பொன்மனசுக்காரர்
வீராச்சாமி என்ற ஆசிரியர்.

இளம் வயதிலேயே எனக்குள் சினிமா மோகம் ஆக்கிரமித்தது.
சினிமாவில் ஸ்டண்ட்மேனாக சேரவேண்டும் என்பதுதான்
அப்போதைய லட்சியமாக இருந்தது. அதற்காகவே கராத்தே
போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ள
ஆரம்பித்தேன்.

கராத்தே மாஸ்டர்ஸ் எம்.ஆர்.கணபதி, மோகன், ரவி ஆகிய
மூன்று பொன்மனசுக்கார்கள்தான் என்னுடைய சினிமா
கனவுக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள்.

பிளாக் பெல்ட் வாங்கியபிறகு நானே மாணவர்களுக்கு
கராத்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். என் மாணவர்கள்
என்னைவிட கெட்டிக்காரர்கள். அவர்களை வைத்து
சினிமாவுக்கான சண்டைக் காட்சிகளை நானே கம்போஸ்
பண்ணிப் பார்ப்பேன்.

அப்போது நான் எங்க ஊர்ல உள்ள ஆறுமுகா குரூப் என்ற
பஞ்சு மில் நிறுவனத்தில் சில காலம் மிஷின் தறி ஓட்டுபவனாக
வேலை செய்தேன்.

காலையில் வேலை மாலையில் வகுப்பு என்ற நிலையில்
சில சமயம் நிர்வாகம் எனக்கு சிறப்பு அனுமதி கொடுத்து
கராத்தே பயிற்சி வகுப்புக்கு அனுப்பியதுண்டு.

அந்தவகையில் எனக்கு வேலையும் கொடுத்து என்னுடைய
ஆர்வத்தையும் உற்சாகப்படுத்திய ஆறுமுகா நிறுவனத்தினரும்
பொன்மனம் படைத்தவர்கள்தான்.

ஒரு கட்டத்தில் சொந்தமா டைலர் ஷாப் நடத்தினேன்.
இங்குதான் வாழ்க்கையில் மறக்கமுடியாத இரண்டு
பொன்மனதுக்காரர்களைச் சந்தித்தேன். ஏன்னா, அவர்கள்
இப்போதும் என்னுடைய நலனில் அக்கறை காட்டுகிறார்கள்.

டைலர் ஷாப்பில் கட்டிங், ஸ்டிச்சிங் மட்டும்தான் என்னுடைய
வேலை. கோமதிசங்கர், கடற்கரை என்ற அந்த இரண்டு
நண்பர்கள் மீதமுள்ள வேலையைச் செய்வார்கள். தீபாவளி,
பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வீட்டுக்குப்
போகாமல்கூட எனக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 5:29 pm

பொன்மனம் முத்துக்காளை 18a
-


தொண்ணூறுகளில் சினிமா கனவுகளுடன் சென்னைக்கு
வந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகு வழக்கம்போல்
பல போராட்டங்கள். அதைச் சொல்லி பக்கத்தை வீணாக்க
விருப்பமில்லை.சென்னை வாழ்க்கையில் நான் சந்தித்த
முதல் பொன்மனசுக்காரர் விஸ்வநாதன். அவர் மாருதி
டெய்லர், மாருதி டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ற இரண்டு
நிறுவனங்களை நடத்திவந்தார்.

சினிமாவில் வாய்ப்பு தேடும் பலருக்கு அவருடைய கடைதான்
சரணாலயம்.

இயக்குநர் வசந்தபாலன், சூரி போன்ற இப்போதைய
பிரபலங்கள் அவருடைய கடையின் தொலைபேசி
எண்ணைத்தான் பி.பி. நம்பராகக் கொடுத்திருப்பார்கள்.
அந்தக் கடையில் சில சமயம் மறைந்த இயக்குநர்
பாலுமகேந்திரா சாரை அடிக்கடி பார்க்கலாம்.

ஒருசில நாளில் மணிக்கணக்கில் அங்கு பொழுதைக்
கழித்ததும் உண்டு. ஸ்டண்ட்மேனாக வரவேண்டும் என்ற
கனவை நிஜமாக்கியதில் விஸ்வநாதன் அண்ணனுக்கு
பங்கு உண்டு.

ஸ்டண்ட் யூனியனில் என்னைச் சேர்த்துக்கொள்ள அனுமதி
கிடைத்தபோது என்னிடம் பணம் இல்லை. அப்போது
விஸ்வநாதன் அண்ணன்தான் எனக்கு பணம் ஏற்பாடு செய்து
கொடுத்தார். மெம்பராக சேர்ந்தபிறகு நான் வேலை பார்த்த
படம் ‘காதலுக்கு மரியாதை’.

சினிமாவில் நான் மறக்கவே முடியாத மூன்று பேர்
இருக்கிறார்கள். ‘பொன்மனம்’ பட இயக்குநர்
எஸ்.பி.ராஜ்குமார், நடிகர் பிரபு, ஸ்டண்ட் மாஸ்டர் சிவா.

இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் பார்வையில் நான் படாமல்
இருந்திருந்தால் சினிமாவில் நடிகனாக என்னைப் பார்த்திருக்க
முடியாது. ஒருவேளை ஸ்டண்ட்மேனாக இருந்திருப்பேன்.
எஸ்.பி.ராஜ்குமாரின் தேர்வுக்கு அங்கீகாரம் கொடுத்தது
பிரபு சார்.

ஏன்னா, நான் பண்ணிய ரோல் கனல் கண்ணன் மாஸ்டர்
பண்ணவேண்டிய ரோல். அவர் வரமுடியாத சூழல் ஏற்பட்ட
போது அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் ஸ்டண்ட்
சிவா மாஸ்டர் முக்கியமானவர். இந்த மூன்று நல்ல
உள்ளங்கள்தான் ‘பொன்மனம்’ என்ற டைட்டிலுக்கு
சொந்தக்காரர்கள்.

சினிமாவில் சண்டைக்காரனாக இருந்த என்னை
காமெடியனாக மாற்றிய வகையில் கவுண்டமனி
அண்ணனும் பொன்மனசுக்காரர்தான். ‘என் உயிர் நீதானே’
என்ற படத்தில் நடித்தபோது எனக்கு காமெடி வரும் என்று
அடையாளப்படுத்தியது கவுண்டர் அண்ணன்தான்.

அவருடன் ஏழு சீன்கள் நடித்தது பெரிய அனுபவம். நான்
டைமிங் காமெடி பண்ணுவதை அவர் வெகுவாகப் பாராட்டியதை
மறக்க முடியாது.

எனக்கு இன்றளவும் புகழைக் கொடுத்து வருவது
‘என் புருஷன் குழந்த மாதிரி’ படத்துல வரும் ‘செத்து செத்து
விளையாடுவோமா’ என்ற காமெடி. இந்த காமெடி வரவில்லை
என்றால் 200க்கும் மேற்பட்ட படங்கள் பண்ணியிருக்க முடியாது.

அந்தப் படத்தில் வடிவேல் சாரை புரட்டி எடுத்திருப்பேன்.
அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுக்கவிலை என்றால்
என்னுடைய நடிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்காது.
அந்தப் படத்துக்குப் பிறகுதான் நான் காமெடி நடிகனாக
அங்கீகரிக்கப்பட்டேன்.

அந்தப் படத்தில் நடிக்க காரணமாக இருந்த படம்
‘வாட்டாக்குடி இரணியன்’. இயக்குநர்
வின்சென்ட் செல்வாவின் பொன்மனதால்தான் எனக்கு அந்த
வாய்ப்பு கிடைத்தது. அவர் மட்டும் நான் புதுமுகம் என்று
அவாய்ட் பண்ணியிருந்தால் வடிவேல் எனும் மகா நடிகனுடன்
இணைந்து நடித்திருக்க முடியாது.

நான் கிராமத்திலிருந்து வந்தவன். என்னுடைய திருமணம்
ஊரில் நடந்தது. சென்னையில் நடந்த ரிசப்ஷனுக்கு சினிமாவின்
அத்தனை ஜாம்பவான்களும் வந்தார்கள். வாழ்த்த வந்த
அனைவருமே பொன்மனம் படைத்தவர்கள்.

நான் சென்னைக்கு வந்த புதுசுல ஏவி.எம்.நிறுவனத்தில்
கார்ப்பெண்டராக வேலை செய்திருக்கிறேன்.

அப்போது சம்பளம் கொடுத்த முதலாளி ஏவி.எம். சரவணன்.
அவர் என் ரிசப்ஷனுக்கு வந்தது அவர் பொன்மனதைக்
காண்பித்தது. விஜயகாந்த், சரத்குமார், வடிவேல், விவேக்
என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் தங்கள் வருகையால்
என்னை மகிழவைத்ததை வாழ்நாளில் மறக்க முடியாது.

‘சிவாஜி’ படத்தில் நடித்தபோது ரஜினி சாரின்
பொன்மனதைப் பார்க்க முடிந்தது. படப்பிடிப்பு சமயத்தில்
என்னை பக்கத்தில் உட்கார வைத்து என்னுடைய முதல்
படத்திலிருந்து சமீபத்திய படம் வரை என்னுடைய நடிப்பை
சுட்டிக்காட்டி பாராட்டிப் பேசியபோது நெகிழ்ந்து போனேன்.

எனக்கு நான்கு தங்கைகள். ஒரு அண்ணன். வீட்டுக்கு என்று
எதுவும் செய்ததில்லை. அண்ணன்தான் எல்லா பொறுப்பையும்
ஏற்றுக் கொண்டார். அவரும் பொன்மனசுக்கார்தான்.

சென்னையில் நான் சந்தித்த பொன்மனசுக்கார்கள்
பட்டியலில் மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், உதவி
இயக்குநர் பாவை ஆகியோருக்கு பங்கு உண்டு. இதில்
நண்பர் கோவிந்தராஜ் என்னுடைய ஆல்பத்தை வைத்துக்
கொண்டு எனக்காக பல கம்பெனிகளில் வாய்ப்புக்காக
படி ஏறியிருக்கிறார்.

இப்போது எனக்கு வரும் படங்களில் நல்ல பெயர்
வாங்குமளவுக்கு உழைத்து வருகிறேன்.

என்னுடைய தகுதிக்கு ஏற்றமாதிரி என்னால் முடிந்த
உதவிகளைச் செய்து வருகிறேன். முத்தாய்ப்பாக, எனது
நடிப்பை ரசித்து பாராட்டிவரும் அனைத்து ரசிகப்
பெருமக்களும் பொன்மனதுக்குச் சொந்தக்காரர்கள்தான்.
=======================
தொகுப்பு: சுரேஷ்ராஜா
வண்ணத்திரை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக