ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

2 posters

Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 8:22 am

புதுடெல்லி:
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை
தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும்,
அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில
போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும்
தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய
சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா
மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான,
‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’
(உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது
(என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில
போலீசாரின் முன் அனுமதி பெறாமல், தீவிரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள
முடியும்.

இதன்மூலம், தீவிரவாதத்திற்கு உதவி செய்பவர், தீவிரவாத
செயல்களை ஊக்குவிப்பவர்களையும் தீவிரவாதியாக கருதி
அவரிடம் விசாரணை நடத்தவும், மாநில போலீசின் முன்
அனுமதியின்றி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும்
முடியும். இச்சட்ட திருத்தம் என்ஐஏ.வுக்கு அதிக பலத்தை
தரக்கூடியது.

இதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தெலங்கானா எம்பி அசாசுதீன் ஓவைசி பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் எதிரானது. இதன் மூலம், நீதிமன்ற உரிமைகள்
மறுக்கப்படும்,’’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில்,
‘‘காங்கிரஸ் ஆட்சியில் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது,
குஜராத் முதல்வராக இருந்த மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான சட்ட திருத்தம் என்றார்.
இச்சட்ட திருத்தத்தால் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படக் கூடும்,’’
என்றார்.

திரிணாமுல் எம்பி மொய்திரா பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக
பயன்படுத்தப்படும். இது மக்களுக்கும், அரசியலமைப்புக்கும்
எதிரான சட்ட திருத்தம். அரசுக்கு எதிராக யார் பேசினாலும்
அவர்கள் தேச துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

அரசு கொண்டு வரும் சட்டங்களை நாங்கள் எதிர்த்தாலும் இதே
போன்று முத்திரை குத்தப்படுகிறோம்,’’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
பேசுகையில், ‘‘இது அரசை எதிர்ப்பவர்களை அடக்குவதற்கு
உதவும். அரசியல் களத்தில் பழிவாங்க பயன்படுத்தக் கூடும்,’’
என்றார்.

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் ஆதரித்து பேசுகையில்,
‘‘இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு வழி தவறிச் சென்றுவிடாமல்
இச்சட்டம் பாதுகாக்கும்,’’ என்றார். இச்சட்ட திருத்தத்தை
ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை
விடுத்தது.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 8:22 am


இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

தீவிரவாதத்தின் ஆணி வேரை அகற்ற வேண்டுமெனில்,
தீவிரவாதத்துடன் தொடர்புடைய நபரையும் தீவிரவாதியாக கருதி
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது. தீவிரவாதத்தை
வேரறுக்க மட்டுமே பயன்படுத்தப்படும். இதை மத, இன ரீதியாக
பிரித்து பார்ப்பதும் தவறானது.உண்மையிலேயே இச்சட்டத்தில்
திருத்தம் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய
ஐமு கூட்டணி அரசுதான்.

காங்கிரஸ் கொண்டு வந்தால் சரி, நாங்கள் கொண்டு வந்தால்
தவறா? இந்த அரசு தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறது.
இந்த விஷயத்தில் எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்பது ஒரு
பொருட்டல்ல. நியாயப்படி இச்சட்ட திருத்தத்தை காங்கிரஸ்
தனது ஆட்சியில் கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஆனால், வாக்கு வங்கிக்கு பயந்து அமல்படுத்தவில்லை. நாங்கள்
தற்போது இதை கொண்டு வருகிறோம்.

தீவிரவாதத்திற்கு எதிராக கட்சிகளை கடந்து நாம் ஒன்று சேர
வேண்டும். சிலர் சித்தாந்தத்தின் அடிப்படையில் நகர்புற நக்சல்
தீவிரவாதத்தை பரப்பி வருகிறார்கள். கொள்கைக்காக என்றிருந்த
மாவோயிசம், பின்னாளில் பொதுமக்களை கொல்ல ஆரம்பித்தது.

அவர்கள் மீது இந்த அரசு கருணை காட்டாது. அதை வேரோடு
அழிப்பதே இந்த அரசின் நோக்கம். தீவிரவாதத்திற்கு எதிராக
கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து சட்ட திருத்த மசோதா
மீதான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
ஒட்டு மொத்தமாக புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 287 எம்பி.க்களும், எதிராக
8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, உ.பா. சட்ட திருத்த
மசோதா நிறைவேற்றப்பட்டது.
-
-----------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by Guest Thu Jul 25, 2019 11:49 am

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு 1571444738
சபாஷ்.இனி போறவன் வாறவன் எல்லாம், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும், தடா கோடா வில் உள்ளே போவான்.ஒரு சிலரால் பலரும் பாதிக்கப்படப் போகிறார்கள்.

சர்வாதிகாரத்தின் ஆரம்பம்.
avatar
Guest
Guest


Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by T.N.Balasubramanian Thu Jul 25, 2019 3:10 pm

sakthi18 wrote:சபாஷ்.இனி போறவன் வாறவன் எல்லாம், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும், தடா கோடா வில் உள்ளே போவான்.ஒரு சிலரால் பலரும் பாதிக்கப்படப் போகிறார்கள்.

அப்பிடி இல்லையே. just like that யாரையும் உள்ளே போடமுடியாது. நீதி மன்றம் சென்றால் பேர் ரிப்பேர் ஆகிவிடும்.வரைமுறைகளை மீறினால் மட்டுமே தீவிரவாதி என கூறப்படுவார். முன்பு குழுவாக இருந்தது. இப்போது தனி நபரையும் அதற்குள் கொண்டுவந்துள்ளனர்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by Guest Thu Jul 25, 2019 5:38 pm

அப்படியா? அப்போ எதிர்கட்சிகள் எல்லாம் வெறி பிடித்து (அந்த வெறி இல்ல) வெளிநடப்பு செய்தார்களே!. வழக்கமான வெளிநடப்பு தானா?ஒருவேளை தளபதி-தலைவர் ட்ரெயினிங்கா இருக்குமோ?

வெளிநடப்பு செய்பவர்கள்,அவைக்கு அடிக்கடி வராமல் விடுபவர்களுக்கு சம்பளம் கட் ஆகுமா?அல்லது மொத்தமாக கொடுத்து விடுவார்களா?மக்கள் பணமாயிற்றே அதனால் கேட்டேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
» மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி
» இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
» நேரடி ஒளிபரப்பை நிறுத்திய பின்... தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum