ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!

Go down

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்! Empty ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!

Post by ayyasamy ram Tue Jul 23, 2019 2:00 pm

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்! Aadi_month
-

தமிழ் மாதங்களில் “ஆடிக்கும், “மார்கழிக்கும் தனிப் பெருமை
உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே
நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ஆடி மாதத்தில்
அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும்
கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடைபெறுகிறது.

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்
படுகிறது. சரி ஆடி செவ்வாயில் கொண்டாடப்படும் அவ்வையார்
நோன்பு எவ்வாறு கடைப்பிடிப்பது என்று தெரிந்துகொள்வோம்.

ஆடியில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் தலை
குளித்து அம்மனை வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம்
கூடும். இதுதவிர ஆடி செவ்வாயில் அவ்வையாருக்கு மேற்
கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது.

இந்த அவ்வை நோன்பைக் கடைப்பிடிப்பதால் விரைவில்
திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு
அந்த பாக்கியம் கிடைக்கும்.

அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் முறை

ஆடிச் செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் அனைவரும்
ஒன்றுகூடி இந்த நோன்பைக் கடைப்பிடிப்பர். பச்சரி மாவில்
வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்துப் படைப்பர்.
அன்றைய தினம் செய்யும் நிவேதனங்களில் உப்பு சேர்க்க
மாட்டார்கள். அதன்பின் அம்மனை நினைத்து விளக்கேற்றி
பூஜைகள் செய்வார்கள்.

பிறகு, அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல
மற்றவர்கள் பத்தியோடு கேட்பர். அதன்பின் ஒரு நீர் நிரப்பிய
பாத்திரத்தில் மாங்கல்யத்தைக் காட்டுவார். நீரில் தெரியும்
பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர்.

கன்னியாகுமரி, தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார்
அம்மன் கோயிலில், இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்! Empty Re: ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!

Post by ayyasamy ram Tue Jul 23, 2019 2:01 pm

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?

இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும்,
விரதமிருந்தவர்கள் உண்பார்கள். இந்த விரதம் ஆண்கள்
யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை.
பூஜை முடிந்த உடனேயே வழிபாடு செய்த இடத்தை தூய்மைப்
படுத்தி விடுவார்கள். இந்த விரதம் ஒவ்வொரு ஆடி செவ்வாய்க்
கிழமைகளில் ஒவ்வொருவரின் வீட்டில் கடைப்பிடிப்பர். இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது
ஐதீகம்.

ஆடிச் செவ்வாய் தேடிக்குளி என்ற பழமொழிக்கு ஏற்ப
இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. செவ்வாய்க் கிரகம்
சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை
ஏற்படுத்தக் கூடியது.

செவ்வாய் சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாகச்
சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் தீவிரமாகத்
தாக்குகின்றன. இதனால் ஜாதகர் உடல், மன ரீதியாக பெரும்
பாதிப்பைப் பெறுகின்றார். எனவே ஒருவரின் ஜாதகத்தில்
செவ்வாய் பலமாக இருத்தல் அவசியம்.

அவ்வாறு பலம் பெற்று இருக்கும் ஜாதகர் வாழ்வில் சகல
வசதிகளும், அதாவது,சொந்த வீடு, வாசல், சொத்து என்று
வசதியாக இருப்பர். செவ்வாய் பலம் இழந்து காணப்பட்டால்,
செவ்வாய் தோஷம், வாழ்க்கையில் பிரச்னை, திருமணத்
தடை ஆகியவை ஏற்படும்.

எனவே செவ்வாயின் பலம் வாழ்வில் மிகவும் அவசியம்.
செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும்,
துர்க்கையம்மனையும் பூஜித்து வந்தால் செவ்வாய் பலம்
பெறும்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» விநாயகர் சதுர்த்தி: விரதம் அனுஷ்டிக்கும் முறையும், சொல்ல வேண்டிய மந்திரங்களும்
» உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
» உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?
» அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்!
» இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum