ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Go down

காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  Empty காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Post by ayyasamy ram Thu Jul 18, 2019 10:30 am

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும்,
பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டு
பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புற்றுநோய்க்கான மேன்மைமிகு மையம்

அ.தி.மு.க. அரசு, புதுப்புது சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி
மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது.
மக்களுக்கு மேலும் தரமான மருத்துவ சேவைகள் கிடைத்திடும்
வகையில், நடப்பாண்டில் பின்வரும் புதிய திட்டங்களை
இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

காஞ்சீபுரம் மாவட்டம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு
புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேன்மைமிகு
மையம் ஒன்று ரூ.120 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

நோய்த் தடுப்பு, நோய் குறைத்தல், வலி நிவாரணம், புனர்வாழ்வு,
சிகிச்சை தரம் உயர்த்துதல் போன்ற 12 ஒருங்கிணைந்த சுகாதார
சேவைகள் வழங்குவதற்காக, மாநிலத்தில் உள்ள கூடுதல் ஆரம்ப
சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
ரூ.105 கோடி செலவில் நலவாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும்.

உலகத்தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை மையம்

“அனைவருக்கும் நலவாழ்வு” திட்டத்தின் கீழ், 296 துணை சுகாதார
மையங்களுக்கு ரூ.79 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்
கட்டப்படும். ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்
நரம்பியல் பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு,
கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு,
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு,
சிறுநீரக சிகிச்சை பிரிவு, சீமாங்க் பிரிவு போன்ற உயர் சிறப்பு சிகிச்சை
அளிக்க, ரூ.67 கோடியே 76 லட்சம் செலவில் உயர் சிறப்பு மருத்துவமனையாக
மேம்படுத்தப்படும்.

விபத்துகளில் தலைக்காயம் அடையும் நபர்களை காக்க விபத்து நடந்த
முதல் ஒரு மணி நேரம் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. இந்தக்
காலத்தில் உரிய முதலுதவியும், சிகிச்சையும் அளிக்கப்பட்டால்,
இறப்புகளை தவிர்க்கலாம். அந்த வகையில், தமிழ்நாடு விபத்து மற்றும்
அவசர சேவைத் திட்டத்தின் கீழ் 32 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவமனை
வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உலகத் தரம்
வாய்ந்த ஒரு தீவிர சிகிச்சை மையம் ரூ.49 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில்
அமைக்கப்படும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  Empty Re: காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Post by ayyasamy ram Thu Jul 18, 2019 10:30 am


புதிய சுகாதார மாவட்டமாகிறது ஆத்தூர்

விபத்திற்கு பின் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் நாள்பட்ட
நோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பதற்காக சென்னை
கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் வளர்ந்த நாடுகளுக்கு
இணையாக நவீன வசதிகள் மற்றும் நவீன உபகரணங்களுடன்
ரூ.40 கோடி செலவில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.

புற்றுநோய் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம், அரசு மோகன் குமாரமங்கலம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நடப்பாண்டில் ஒரு
‘லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி’ ரூ.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக 22 மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லா ‘104’ தொலைபேசி சேவை
வழியாக ஆலோசனை வழங்கும் மையம், ரூ.6 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில்
அமைக்கப்படும். சேலம் சுகாதார மாவட்டம், மக்கள் தொகையிலும்,
பரப்பளவிலும் பெரிய மாவட்டமாக உள்ளது.

எனவே, சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை
தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும்.

2 ஆயிரம் புதிய பஸ்கள்


காசநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி
செய்வதற்காக, 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும்
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 5 நகர்ப்புற சுகாதார
மையங்களில் புதிய முயற்சியாக, 28 வகையான மருந்துகள் வழங்கும்
32 தானியங்கி இயந்திரங்கள் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளின் சேவையை மேலும் மேம்படுத்தும் விதத்தில்,
ஒரு புதிய முயற்சியாக, ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்களின் சமூக
பங்களிப்புடன் “எனது மருத்துவமனை எனது பெருமை” என்ற பெயரில்
அரசு மருத்துவமனைகள் புதுப் பொலிவுடன் செயல்படும் வகையில்
நடவடிக்கை தொடங்கப்படும்.

தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பஸ்களை பொதுமக்களின்
சேவைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும், புதியதாக 2 ஆயிரம்
பஸ்கள், ரூ.600 கோடி மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில்,
அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக்
கழக பணிமனைகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்
-
---------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» செங்கல்பட்டில் ரூ.96 கோடியில் சர்வதேச யோகா மையம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» பால் விலை உயர்த்தப்படும் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நீடிக்கும் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum