புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:26 pm

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Photo-1524024973431-2ad916746881
-


வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு
சுட்டி ஆடாகவே இருக்கும் !
மழையில் அது நனைந்தாலும்
சிலிர்த்து குதிக்கும் மகிழ்ச்சியில் !

ஆட்டுக்கு தெரியும் மழை அதை
நனைக்குமே தவிர சிதைக்காது ஒருபோதும்
என்று ...! மழை ஒரு ஓநாயும் அல்ல
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !

ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள்
மனித வடிவில் நம் வீட்டு செல்லக்
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !

எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ?
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத் தெரியும்
நாய் எது ஓநாய் எது என்று !

நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும்
அல்ல ...நமக்கே தெரிவதில்லையே
மனித வடிவில் மிருகம் யார் நம்
அருகில் என்று ?
-
-------------------------

- K .நடராஜன்
கவிதைமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:27 pm

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Lamb-in-the-rain-tracy-saunders
---
பதுங்கு குழிகளா..? சவக்குழிகளா...? என்கிற அளவில்
அளவில்லாமல் அள்ளப்பட்டிருந்த மணல் ஆற்றினைப்
பக்குவமாய் கடந்து ஆடுகளை மேய்த்திருந்தேன் -
அக்கறையில் உள்ள மேய்ச்சல் நிலத்தினில்......

உச்சி வெயில்தனில் - இளைப்பாரவும் உணவருந்தவும்
இருந்த மரங்கள்யாவும்  ஏழ்மைக்கு விலைபோயிருந்தன -
வரவேண்டிய மழையும் - புதுவாகன ஓட்டிப்போல்
இடக்கரம் கைபோட்டு வலக்கரம் திரும்பிவிடுகிறது...

மாலையில் - தீடீரென மேகங்கள் சூழ்ந்ததால் -
மேய்த்த ஆடுகளோடு இல்லம் திரும்பினேன் -
இல்லமடைந்த பிறகு - ஆட்டுக்குட்டி ஒன்றுக்காணாமல் -
வந்தவழியிலும் - மணலெடுத்த குழிகளிலும் தேடிச்சென்றேன்...

அப்பொழுதுவந்த தீடீர்மழையானது  -ஆற்றினை நனைக்காமல்
'ஆட்டிக்குட்டியை நனைத்த மழை'யாகவே இருந்தது...
குழியிலகப்பட்ட ஆட்டினை மீட்டெடுத்துவிட்டேன் - ஆனால்
இன்றுவரையிலும் மீட்கமுடியவில்லை  என் ஆற்றினை...!!!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:27 pm


**
"மழையே" என் "மழையே"
ஒவ்வொரு துளிகளும் என் "உயிரே"
நனைந்தேன் நான் நனைந்தேன்!
மழை வரும் போதெல்லாம் நான் நனைந்தேன்!

மழையே என் மழையே
ஏன் நனைத்தாய் என் ஆட்டுக்குட்டியை -
எங்களின் வறுமை வாசலைத் திறக்கிறாயா!
ஆட்டுக் கொட்டகை ஓட்டை என்று!!

வாடினேன்! நான் வாடினேன்!
என் ஆட்டுக்குட்டி வாடுகையில்!
இச்சிறு மழையிலே உணர்ந்தேன் மழையால்
ஒரு ஜீவன் நடு நடுங்கயைிலே!
இறைவா கொடுத்திடு நீ கொடுத்திடு
உலக ஜீவன்களுக்கு
எதையும் அளவாய்.......

- செந்தில் குமார்.மு. ஓமன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:28 pm


மரகத புற்பரப்பில்
மணிக்கழுத்தை கவிழ்த்தபடி
ஆழ்ந்த மேய்ச்சலில்
மூழ்கிய அச்செம்மறியை!

நீல் வானின்
நிரமற்ற நீர்த்துளிகள்
ஆட்டுக்குட்டியின்
ரோம வயல்களில்
தூங்கி வழிந்த
வெண்ணிற மயிர்களை
சொட்டு சொட்டாய்
தட்டித் தட்டி எழுப்புகின்றன !

தூக்கம் களைந்த
வெள்ளை மயிர்கள்
சிங்கப் பிடரியாய்
சிலிர்த்தபடி,
கூதைக் காற்றில்
கூண்குருகி
நிச்சலமாய் நிற்கும்
அக்குட்டிக்கு
பாவமென்று போர்வைதனை
போத்திவிட்டுச் சென்ற
அந்த பேகன் யாரோ ?

அந்த அழகு செம்மறியை
நனைக்காத ஒவ்வொரு
மழைத்துளிகளும்
சபிக்கப்பட்டவைகள் !

-அம்பேத் ஜோசப்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:28 pm


வாடும் பயிர்கள்
நாடி நிற்கும் பருவமழைக்காக
நாளும் தாகம் தணிக்க
தேடி அலையும் விலங்குகள்
நாடுவதோ தண்ணீர்!

மாட்டுக் கொட்டிலில்
மயங்கி சோர்ந்து நின்றது
வெயிலின் கொடுமையில்
வெள்ளை ஆட்டுக்குட்டி!

அது விரும்பியது குளுமை
அங்கு வீசியது வெம்மை
ஆட்டுக்குட்டி ஏங்கியது
சொட்டுபோடும் மழைக்காக!

இடிமுழக்கம் காணும்
கோடைமழை கண்டு
ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி
மழைநீரில் நனைந்தது!

குடத்துடன் அலையும் மக்கள்
தாகம் தணிக்கும்
கோடைமழை கண்டு
குதுகூலம் கொள்வர்!

மழைத்துளிகள் கண்டபின்
குளுமை தேடி
கொடைக்கானல் ஊட்டி
மக்கள் அலையமாட்டார் !

குமுறும் கோடைமழை
வியர்வைத்துளிகளை
விரைவில் நலமுடன்
துடைக்கும் மழைத்துளிகள்!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:29 pm


**

விரைந்தோடும் கருவுற்ற கார்முகில்கள்
காதலி(மரங்கள்) இல்லா வெற்றிடம் கண்டு
நெஞ்சம் குமுறி சிந்திய கண்ணீர்த் துளிகளே
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !!

மழை பொய்த்து போக - மண் வறண்டு
சோலைவனங்களும் பாலைவனங்களாக
வெப்ப சலனத்தால் பெய்த மழை
ஆட்டுக்குட்டியை மட்டுமே நனைத்து சென்றதே !

வஞ்சகமாய் வீசிய வலையில் சிக்குண்ட நாம்
நஞ்சென தெரிந்தும் பெப்சி கோக்குக்கு அடிமையாக,
ஆழ்துளைக் கேணிகள் தரணியை ஆட்கொள்ள
நிலத்தடி நீர் வற்றி போனதே !

மண் குளிர் பொழியவும் மறந்ததே மழை !
பொய்த்த மழையும் தூவானமாக,
ஆட்டுக்குட்டியை நனைத்த மழையானதே !

- தனலட்சுமி பரமசிவம்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:30 pm



கருவறையில் தண்ணீர் குடத்தில்
என்னை பொத்தி வைத்தாள்,
பின்பு மார்பிலே கட்டி அணைத்தாள் ,

வளரும் பொழுது தன் கட்டுப்பாட்டுக்குள்
ஒரு ஆட்டுக்குட்டியாய் அணைத்து வைத்தாள்!

பருவ வயதில் என்னை என் போக்கில் விடு
நான் துள்ளி ஓடியபொழுது ,
வாழ்க்கையின் சுக துக்கம், நல்லது கேட்டது
என்னை தாக்கியது!

உணர்ந்தேன்,
இந்த ஆட்டுக்குட்டியையும் நனைத்தது மழை என!
அம்மாவின் ஆரவணைப்புக்கு ஏங்கினேன், மீண்டும்!!
-
------------------
- ப்ரியா ஸ்ரீதர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:30 pm



வாட்டும் வெயிலில் வதைந்தாலும் வரிந்தே புல்லைத் தான்மேயும் !
கூட்டும் கொடுமை என்றாலும் கூட்டுக் குள்ளே அடங்காது !
நோட்டம் விட்டே ஓடோடும் நொடியும் எங்கும் தங்காது !
ஆட்டுக் கூட்டம் அதனோடே அழகுக் குட்டி பலஓடும் !

அங்கும் இங்கும் கூட்டத்தில் அழகாய் ஓடி முந்திவரும் !
தொங்கும் மரத்தில் செடிகொடியில் துணிவாய் நின்றே தழைதின்னும் !
எங்கே பசுமை என்றேதான் எங்கும் ஓடி ஏமாறும் !
தங்க நிழலும் இல்லாமல் தவித்தே கத்தித் தடுமாறும் !

தண்ணீர் இன்றி ஊரெல்லாம் தவியாய்த் தானே தவிக்கிறது !
கண்ணீர் விட்டு மக்களுமே கலங்கி வானம் பார்க்கின்றார் !
கண்ணில் காணும் குளம்குட்டை காண வில்லை காய்ந்தெங்கும் !
மண்ணில் தண்ணீர் இல்லாமல் மாயும் உயிர்கள் கணக்கில்லை !

மண்ணில் உயிர்கள் படும்பாட்டை மனதில் எண்ணித் தான்வதைந்தே
கண்ணீர் விட்டு வானம்தான் கதறி மழையாய்ப் பெருகிற்றே !
அன்பு ஆட்டுக் குட்டியதும் அடடா மழையில் நனைந்தோடி
இன்பத் தோடு குதிக்கிறதே இனிதே குளித்து சிலிர்க்கிறதே !

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:31 pm


**

பூக்களின் கீழிருந்த காம்பினையும்,
மீசைக்குக் கீழிருந்த உதடுகளையும்,
கைகளால் குடைபிடிக்கப்பட்ட நெற்றியையும்,
சேலை முந்தானையால் மறைக்கப்பட்ட குழந்தையையும்,

நெகிழிப்பையால் மூடப்பட்ட இட்லிகளையும்,
குடைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டுமல்லியையும்,
மாடத்தில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கையும்,
தொப்பையின் நிழலில் ஒளிந்திருந்த கட்டை விரலையும்,

நனைக்காமலே போய் விட்டது
வா, வா, என்றழைத்த ஏழை
விவசாயியின் வேண்டுகோளை விலக்கியும்
வராதே, வராதே என்று வேண்டிக்கொண்ட
தெரு வியாபாரிகளின் வேண்டுதலை ஏற்றும்
வராமலே நின்று விட்டது
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:31 pm

**

வெண்ணிற மயிர் சிலுப்பி
வெளிவந்த செம்மறிக்குட்டி
பச்சை வனாந்தரத்தில்
அங்குமிங்கும் திரிந்து மேய்கையில்!

செவ்வரக்கு வானம்
மெல்ல களைந்தோடி
கார்குழலின் இருளைவாங்கி
மேனி முழுதும் தடவிக்கொண்டன
நீர்க் கொப்பளங்கள் !

கொப்பளங்களுக்குள் இருக்கும்
நீர் மூட்டைகளின் முடிச்சு
மெல்ல அவிழ்கையில்
நுனிப்புல்லை கீறிமேயும்
அக்குட்டியும்,
புற்களை போத்திய
அந்த பச்சைக்காணியும்
தலை குளிக்கையில் !

அங்கே ! விழுந்து விழுந்து
உயிர் விடும், ஒவ்வொரு
மழைத்துளியையும் கண்டு
மெல்ல மெல்ல வெளிவருகின்றன
ஆட்டுக்குள் ஒளிந்திருந்த குளிரும் !
காட்டுக்குள் ஒளிந்திருந்த தளிரும் !

- அம்பேத் ஜோசப்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக