ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர்

2 posters

Go down

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Empty டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர்

Post by ayyasamy ram Sun Jun 30, 2019 3:40 pm

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Statue_2_11544
-
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Statue_3_11345
குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில்,
சர்தார் சரோவர் அணையின் அருகே 2,989 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபபாய்
படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது.

3,400 பணியாளர்கள், 250 பொறியாளர்கள் இணைந்து
இரவுபகலாக வேலை செய்து 42 மாதங்களில் கட்டி
முடிக்கப்பட்டது இந்த உலகின் மிக உயரமான சிலை.

படேல் சிலை

வல்லபபாய் படேலின் 143-வது பிறந்த தினமான அக்டோபர்
31, 2018 அன்று சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
பிரதமர் மோடி. அந்தச் சிலை திறக்கப்பட்டது முதல் பல்வேறு
சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. `

நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும் போது 3,000 கோடி
ரூபாய் செலவில் இந்தச் சிலை தேவையா?’ என எதிர்க்
கட்சிகள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இது ஒரு புறம் இருந்தாலும், படேல் சிலை திறக்கப்பட்ட
பிறகு அந்தப் பகுதி முழுவதும் சுற்றுலா தளமாக
மாறியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து
சிலையைப் பார்த்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் சிலையில் உள்ள பார்வையாளர்கள்
கேலரியின் மேற்கூரை வழியாக மழை நீர் உள்ளே
வருவதாக சுற்றுலாப்பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

படேல் சிலை கேலரி

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டுக்கான பருவ மழை
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கியது.
அதனால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் கன மழை
பெய்து வருகிறது. படேல் சிலை உள்ள பகுதிகளிலும்
கன மழை பெய்து வருகிறது.

சர்தார் வல்லபபாய் படேல் சிலையைப் பார்க்க வருபவர்கள்
அங்கிருந்து நர்மதை நதியின் அழகைக் கண்டு ரசிக்கும்
படியாக சிலையின் உள்ளே 153 அடி உயரத்தில்
பார்வையாளர்கள் கேலரி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கன மழையால் அந்த கேலரியின்
மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுகுவதாகச் சுற்றுலா
பயணிகள் தெரிவித்துள்ளனர். சிலையின் உள்ளே நீர்
வெளியேறும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி
வைரலாகி வருகிறது.

படேல் சிலை திறக்கப்பட்ட பிறகு வரும் முதல் பருவ மழை
என்பதால் `முதல் மழைக்கே 3000 கோடி ரூபாய் சிலை
தாங்கவில்லை’ என்பது போன்ற பல கருத்துகளை
நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

கேலரி

ஒற்றுமைக்கான சிலையின் தலைமை நிர்வாக அதிகாரி
ஐ.கே படேல் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியன்
எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``படேல்
சிலையின் உள்ளே 153 அடி உயரத்தில் பார்வையாளர்கள்
கேலரி அமைக்கப்பட்டுள்ளனர்.

அந்த கேலரியின் பின் பகுதியில் நின்று பார்த்தால்
இயற்கையின் மொத்த அழகும் தெரியும். அங்கு பொது
மக்களின் பாதுகாப்புக்கான கண்ணாடிச் சுவர்
அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பின் பகுதியில் மழைநீர்
வர வாய்ப்புகள் இல்லை.

அதுவே படேல் சிலையின் முன் பகுதியில், அதாவது
சிலையில் மார்பு பகுதியில் நின்று பார்த்தால் நர்மதை
ஆற்றின் அழகு தெரியும். அங்கு கண்ணாடிச் சுவர்
இல்லாமல், பாதுகாப்புக்காகக் கம்பிகள் அமைக்கப்
பட்டுள்ளன.

சிலையின் வடிவமைப்பே அப்படிதான் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக மழை மற்றும் காற்றின் வேகத்தினால் மழை நீர்
கம்பிகள் வழியாக உள்ளே வருகிறதே தவிர கேலரியின்
கூரையில் எந்தப் பிரச்னையும் இல்லை. கேலரியின் எந்தப்
பகுதியிலும் மழைநீர் ஒழுகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

படேல் சிலைக்குக் கீழே உள்ள அருங்காட்சியகத்திலும்
இதே போன்று மழை ஒழுகுவதாகக் குற்றச்சாட்டுகள் எ
ழுந்துள்ளன
-
-----------------------------
சத்யா கோபாலன்
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Empty Re: டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர்

Post by T.N.Balasubramanian Sun Jun 30, 2019 4:13 pm

நேரிடையாக சென்று பார்த்தது இல்லை. தவிர்ப்பதற்கு சில அதிகப்படியான glass sheet வேலை செய்யப்படவேண்டுமெனில் செய்யலாம். கட்டுமான நிலையில் இதை பற்றி நினைத்திருக்கமாட்டார்கள்.

 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்த போது   கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை பார்த்து ரசிக்கும் போது கடல் அலைகள் தெற்கு புறத்தில் இருந்து வேகமாக வந்து மோதி அதிக அளவில் நீர்த்திவலைகள்  தரை எல்லாம் படர்ந்து ஜனங்கள் நடக்கும்போது வழுக்கி விழும் நிலை உள்ளது.இப்போது ஏதும் செய்திருக்கிறார்களா தெரியாது.

கொடுக்கின்ற feed back களை ஆராய்ந்து, அதிகாரிகள் மக்கள் நலன் கருதி, ஆவண செய்தால் நல்லது.

feed back  ஐ தமிழில் எப்பிடி  கூறலாம்?  

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வல்லபாய் படேல் சிலை
» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
» வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை
» ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum