புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
17 Posts - 3%
prajai
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_m10துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 26, 2019 5:52 am

துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! MGR_AS_SUPPORTING_ACTOR
-

-
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே,
கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை
உரமாக்கி உயர்ந்தவர்.

அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும்
சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய்
மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்

நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த
'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற
கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது.

திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும்
மகிழ்ச்சியை அளித்தது.

கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி.
படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு
காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன்
விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில்
மயங்கிவிழுவார்.

கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்
செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த  அன்றைய தினம் எம்.ஜி.ஆர்
ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்க
முடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி
குமுதினியின் கணவர் கோபமடைந்து, 'ஒரு புதுமுக நடிகரை
நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான்
என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி
எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா”
என்று சத்தம் போட, எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும்
வேதனையும் அடைந்தார்.
-----------------------

இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட
தயாரிப்பாளர், எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து,
“கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம்
வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே
இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.

இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக
இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும்
அறிவர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 26, 2019 5:53 am


அதேபோல், அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் டங்கன், தான்
இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன
எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி”
படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு
கௌரவ குறைச்சலாகப் பட்டது.

எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி,
எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு புண்படுத்த முடியுமோ அந்த
அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.

அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங்,
எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும்
காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு
மெல்லிய டாக்கா மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார்.

அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட்
வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி,
கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை
தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.

எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல்,
டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை
என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச்
சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.

வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே
வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில்
எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை
முடிகிறார்.

டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி
செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன்
துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.

உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள்
“தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து
எடுக்கிறார். எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று
காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம்
வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.

1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல்
பலித்து விடுகிறது.

அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில்
அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.

உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார்
என்ற செய்தியை சொல்கிறார்.

எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை
வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன்
வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே,
உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட,
“கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை
அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே
அழைத்துச் செல்கிறார்.

“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக
வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய
கம்பி போல் நுழைகிறது.

“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து,
எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக
இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை
நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை
மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.

“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை
நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும்
ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில
சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்”
என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர
வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து
வரப்படுகிறார்.

“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது.
அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’
என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.

நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா?
மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர்
வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து,
தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை
திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.
-
-------------------------------
By வழக்கறிஞர் சி.பி. சரவணன்
நன்றி-தினமணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 26, 2019 11:03 am

Code:

“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை
நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும்
ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில
சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்”
என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர
வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து
வரப்படுகிறார்.

“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது.
அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’
என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.

நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா?
மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர்
வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து,
தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை
திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.
-


ரொம்ப நெகிழ்ச்சியான விசயம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக