புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
==============================
எட்டு வகையான மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் . அவையாவன :
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப .
இவற்றுள் நகை என்பது சிரிப்பு . அழுகை என்பது அவலம் . இளிவரல் என்பது இழிபு . மருட்கை என்பது வியப்பு . அச்சம் என்பது பயம் . பெருமிதம் என்பது வீரம் . வெகுளி என்பது சினம் . உவகை என்பது காமம் முதலான மகிழ்ச்சி .
மெய்ப்பாடுகளை சுவை என்றும் குறிப்பர் . ஒவ்வொரு சுவையும் பிறப்பதற்கு நான்கு நிலைக்களன்களை தொல்காப்பியர் காட்டியுள்ளார் . ஆக எட்டு சுவைகள் பிறப்பதற்கு முப்பத்திரண்டு நிலைக்களன்களை தொல்காப்பியர் சுட்டுகிறார் . இந்த எண்வகை மெய்ப்பாடுகளைத் திருவள்ளுவர் எவ்வாறு தம் நூலில் காட்டியுள்ளார் என்று விரிவாகக் காண்போம் .
நகை :
=======
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப .
சிரிப்பானது எள்ளல் , இளமை , பேதைமை , மடமை ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டு தோன்றும் என்று ஆசிரியர் கூறுகிறார் .
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் . ( 1040 )
போதிய நிலத்தை வைத்துக்கொண்டு , சிலர் அதில் பயிரிடாமல் சோம்பியிருப்பர் . யான் வறியவன் என்று சொல்லித் திரிவர் . இப்படிப்பட்ட சோம்பேறிகளைக் கண்டு அந்த நிலமகளே எள்ளி நகையாடுவாளாம் .
இது எள்ளல் பற்றித் தோன்றிய நகையாம் .
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் . ( 1094 )
தலைவனை நேருக்கு நேர் நோக்க முடியாமல் நாணம் தடுக்கிறது . அவன் தன்னை நோக்கும்போது , அவள் நிலத்தை நோக்குகிறாள் . அவன் தன்னைப் பார்க்காத போது , அவனழகைக் கண்டு ரசித்து தன்னுள் மெல்ல நகைக்கிறாள்
இது தலைவியின் பேதைமை காரணமாகப் பிறந்த நகையாம் .
அழுகை ;
=========
இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே .
இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியன் ஆதல் . இழவு என்பது ஒன்றை இழத்தல் . அசைவு என்பது முன்பிருந்த நிலைமை மாறி வருந்துதல் , வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத நிலை . இவை நான்கு பாட்டானும் அழுகை வரும் என்று தொல்காப்பியர் உரைப்பார் .
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று . ( 1318 )
தலைவனுக்குத் தும்மல் வருகிறது . அதை அவன் மறைக்க முயலுகிறான் . அதைக்கண்ட தலைவி , " உமக்கு உறவான பெண் ஒருத்தி உம்மை நினைக்கிறாள் . அதை யான் அறியாதவாறு மறைக்க முயல்கிறீர் " என்று கூறி தலைவி அழுகிறாளாம் .
இது தலைவன் தன்னை இகழ்ந்தான் எனத் தலைவி கருதியமையால் பிறந்த அழுகையாதலின் , இதனை இளிவு பற்றி வந்த அழுகை என்னலாம் .
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் . ( 1227 )
காலைப் பொழுதில் தலைவி நல்ல மனநிலையில் இருக்கிறாள் . ஆனால் மாலைப் பொழுது நெருங்க நெருங்க காம நோய் வருத்தத் துன்புறுகிறாள் . இது முன்னை நிலை மாறியது குறித்துப் பேசுதலின் , இது அசைவு காரணமாக வந்த அவலச் சுவைக்கு எடுத்துக்காட்டு என்னலாம் .
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது . ( 1049 )
நெருப்பிலே கூட ஒருவன் உறக்கம் கொள்ள இயலும் ; ஆனால் இந்த வறுமை வந்துவிட்டால் , ஒருவன் படுகின்ற துன்பம் சொல்லி மாளாது . வறுமையால் வாடி நலிவான் ஒருவனின் உணர்விலிருந்து பிறக்கும் இச்ச்சொற்கள் , அவ்வறுமைத் துன்பத்தின் மிகுதியால் நேர்ந்த அவலத்தினை உருக்கமாக உணாத்துகின்றன .
( தொடரும் )
==============================
எட்டு வகையான மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் . அவையாவன :
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப .
இவற்றுள் நகை என்பது சிரிப்பு . அழுகை என்பது அவலம் . இளிவரல் என்பது இழிபு . மருட்கை என்பது வியப்பு . அச்சம் என்பது பயம் . பெருமிதம் என்பது வீரம் . வெகுளி என்பது சினம் . உவகை என்பது காமம் முதலான மகிழ்ச்சி .
மெய்ப்பாடுகளை சுவை என்றும் குறிப்பர் . ஒவ்வொரு சுவையும் பிறப்பதற்கு நான்கு நிலைக்களன்களை தொல்காப்பியர் காட்டியுள்ளார் . ஆக எட்டு சுவைகள் பிறப்பதற்கு முப்பத்திரண்டு நிலைக்களன்களை தொல்காப்பியர் சுட்டுகிறார் . இந்த எண்வகை மெய்ப்பாடுகளைத் திருவள்ளுவர் எவ்வாறு தம் நூலில் காட்டியுள்ளார் என்று விரிவாகக் காண்போம் .
நகை :
=======
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப .
சிரிப்பானது எள்ளல் , இளமை , பேதைமை , மடமை ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டு தோன்றும் என்று ஆசிரியர் கூறுகிறார் .
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் . ( 1040 )
போதிய நிலத்தை வைத்துக்கொண்டு , சிலர் அதில் பயிரிடாமல் சோம்பியிருப்பர் . யான் வறியவன் என்று சொல்லித் திரிவர் . இப்படிப்பட்ட சோம்பேறிகளைக் கண்டு அந்த நிலமகளே எள்ளி நகையாடுவாளாம் .
இது எள்ளல் பற்றித் தோன்றிய நகையாம் .
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் . ( 1094 )
தலைவனை நேருக்கு நேர் நோக்க முடியாமல் நாணம் தடுக்கிறது . அவன் தன்னை நோக்கும்போது , அவள் நிலத்தை நோக்குகிறாள் . அவன் தன்னைப் பார்க்காத போது , அவனழகைக் கண்டு ரசித்து தன்னுள் மெல்ல நகைக்கிறாள்
இது தலைவியின் பேதைமை காரணமாகப் பிறந்த நகையாம் .
அழுகை ;
=========
இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே .
இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியன் ஆதல் . இழவு என்பது ஒன்றை இழத்தல் . அசைவு என்பது முன்பிருந்த நிலைமை மாறி வருந்துதல் , வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத நிலை . இவை நான்கு பாட்டானும் அழுகை வரும் என்று தொல்காப்பியர் உரைப்பார் .
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று . ( 1318 )
தலைவனுக்குத் தும்மல் வருகிறது . அதை அவன் மறைக்க முயலுகிறான் . அதைக்கண்ட தலைவி , " உமக்கு உறவான பெண் ஒருத்தி உம்மை நினைக்கிறாள் . அதை யான் அறியாதவாறு மறைக்க முயல்கிறீர் " என்று கூறி தலைவி அழுகிறாளாம் .
இது தலைவன் தன்னை இகழ்ந்தான் எனத் தலைவி கருதியமையால் பிறந்த அழுகையாதலின் , இதனை இளிவு பற்றி வந்த அழுகை என்னலாம் .
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் . ( 1227 )
காலைப் பொழுதில் தலைவி நல்ல மனநிலையில் இருக்கிறாள் . ஆனால் மாலைப் பொழுது நெருங்க நெருங்க காம நோய் வருத்தத் துன்புறுகிறாள் . இது முன்னை நிலை மாறியது குறித்துப் பேசுதலின் , இது அசைவு காரணமாக வந்த அவலச் சுவைக்கு எடுத்துக்காட்டு என்னலாம் .
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது . ( 1049 )
நெருப்பிலே கூட ஒருவன் உறக்கம் கொள்ள இயலும் ; ஆனால் இந்த வறுமை வந்துவிட்டால் , ஒருவன் படுகின்ற துன்பம் சொல்லி மாளாது . வறுமையால் வாடி நலிவான் ஒருவனின் உணர்விலிருந்து பிறக்கும் இச்ச்சொற்கள் , அவ்வறுமைத் துன்பத்தின் மிகுதியால் நேர்ந்த அவலத்தினை உருக்கமாக உணாத்துகின்றன .
( தொடரும் )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நகை பெண்களுக்கு மிக அவசியம் என்பது சரியாக புரிந்து கொள்ளாமல்
நகை என்றால் ஆபரணம் ஒன்றுதான் சிரிப்பு இல்லை என பெண்களை நினைக்க வைத்து
நகைக்கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
ரமணியன்
நகை என்றால் ஆபரணம் ஒன்றுதான் சிரிப்பு இல்லை என பெண்களை நினைக்க வைத்து
நகைக்கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இளிவரல் :
===========
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே .
இளிவரல் என்பது இரக்கம் .
இது முதுமை , நோய் , வருத்தம் , ஆற்றல் குறைவு ஆகியவற்றால் வரும் என்பர் .
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு .( 1269 )
நெடுந்தொலைவு சென்ற துணைவர் , வரும் நாளை மனத்து வைத்து ஏங்குபவர்க்கு , ஒருநாள் செல்லுதல் ஏழுநாள் செல்லுதல்போல் நீண்டு கழியும் .
தலைவன் பிரிவு காரணமாகத் தலைவி மாட்டுத் தோன்றும் வருத்தத்தைப் புலப்படுத்துதலின் , இது வருத்தம் காரணமாக வந்த இளிவரல் சுவைக்கு எடுத்துக்காட்டாகும் .
மருட்கை :
==========
மருட்கை என்பது வியப்பாகும் .
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே .
புதுமையானது , முன்பு காணாத புதிய பொருள் , பெருமை என்பது மிகப்பெரிய ஒன்று , சிறுமை என்பது மிகச்சிறிய ஒன்று , ஆக்கமாவது ஒன்று மறறொன்றாய் திரிந்தது . இவை நான்கு காரணமாக வியப்பு அல்லது அற்புதம் உண்டாகும் .
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு . ( 1081 )
தலைவன் , தலைவியுடைய அழகைப் பார்த்து அதிசயிக்கிறான் . " இவள் தெய்வப் பெண்ணோ ! அழகிய மயிலோ ! திரண்ட கூந்தலையுடைய மாதோ !
என் நெஞ்சம் அறியாமல் மயங்குகிறது . " என்று கூறுகிறான் .
இது புதுமை காரணமாகத் தோன்றிய மருட்கையாகும் .
தொடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ . ( 1159 )
இது காமத்தீயின் தனித்தன்மை குறித்து வியந்தவாறாம் . இயல்பான தீ தொட்டால்தான் சுடும் . ஆனால் காமத்தீயோ தொட்டால் சுடாது ; விட்டால்தான் சுடும் . இது இயற்கைக்கு மாறாக இருக்கும் ஆக்கநிலை மருட்கையாகும் .
( தொடரும் )
===========
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே .
இளிவரல் என்பது இரக்கம் .
இது முதுமை , நோய் , வருத்தம் , ஆற்றல் குறைவு ஆகியவற்றால் வரும் என்பர் .
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு .( 1269 )
நெடுந்தொலைவு சென்ற துணைவர் , வரும் நாளை மனத்து வைத்து ஏங்குபவர்க்கு , ஒருநாள் செல்லுதல் ஏழுநாள் செல்லுதல்போல் நீண்டு கழியும் .
தலைவன் பிரிவு காரணமாகத் தலைவி மாட்டுத் தோன்றும் வருத்தத்தைப் புலப்படுத்துதலின் , இது வருத்தம் காரணமாக வந்த இளிவரல் சுவைக்கு எடுத்துக்காட்டாகும் .
மருட்கை :
==========
மருட்கை என்பது வியப்பாகும் .
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே .
புதுமையானது , முன்பு காணாத புதிய பொருள் , பெருமை என்பது மிகப்பெரிய ஒன்று , சிறுமை என்பது மிகச்சிறிய ஒன்று , ஆக்கமாவது ஒன்று மறறொன்றாய் திரிந்தது . இவை நான்கு காரணமாக வியப்பு அல்லது அற்புதம் உண்டாகும் .
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு . ( 1081 )
தலைவன் , தலைவியுடைய அழகைப் பார்த்து அதிசயிக்கிறான் . " இவள் தெய்வப் பெண்ணோ ! அழகிய மயிலோ ! திரண்ட கூந்தலையுடைய மாதோ !
என் நெஞ்சம் அறியாமல் மயங்குகிறது . " என்று கூறுகிறான் .
இது புதுமை காரணமாகத் தோன்றிய மருட்கையாகும் .
தொடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ . ( 1159 )
இது காமத்தீயின் தனித்தன்மை குறித்து வியந்தவாறாம் . இயல்பான தீ தொட்டால்தான் சுடும் . ஆனால் காமத்தீயோ தொட்டால் சுடாது ; விட்டால்தான் சுடும் . இது இயற்கைக்கு மாறாக இருக்கும் ஆக்கநிலை மருட்கையாகும் .
( தொடரும் )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:நகை பெண்களுக்கு மிக அவசியம் என்பது சரியாக புரிந்து கொள்ளாமல்
நகை என்றால் ஆபரணம் ஒன்றுதான் சிரிப்பு இல்லை என பெண்களை நினைக்க வைத்து
நகைக்கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
ரமணியன்
பெண்மைக்கு அழகு சேர்ப்பது புன்னகைத்தான் பொன்ன்னகை அல்ல என்பதை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.
படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது MJ அவர்களின் பதிவு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Sudharani
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அச்சம் :
========
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே . ( தொல்-மெய்ப்-8 )
அணங்கு என்பது தெய்வம் . விலங்கு என்பது சிங்கம் , புலி முதலிய அஞ்சத்தக்க விலங்குகள் , கள்வர் என்பார் தீத்தொழில் புரிவார் , இறை எனப்படுவது பெரியோர் ,தந்தையர் , ஆசிரியர் , அரசர் முதலானோரைக் குறிக்கும் . இந்த நான்கின் காரணமாக ஒருவனுக்கு அச்சம் ஏற்படும் .
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு . ( 1048 )
நாள்தோறும் வறுமையால் வாடி துன்புற்ற ஒருவன் , " நேற்றுத் துன்புறுத்தி வாட்டிய அந்த வறுமை , இன்றும் என்னிடம் வருமோ ? " என்று அச்சம் கொள்கிறான் . அந்த அச்சத்தின் விளைவே இந்தக் குறட்பா ஆகும் .
( தொடரும் )
========
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே . ( தொல்-மெய்ப்-8 )
அணங்கு என்பது தெய்வம் . விலங்கு என்பது சிங்கம் , புலி முதலிய அஞ்சத்தக்க விலங்குகள் , கள்வர் என்பார் தீத்தொழில் புரிவார் , இறை எனப்படுவது பெரியோர் ,தந்தையர் , ஆசிரியர் , அரசர் முதலானோரைக் குறிக்கும் . இந்த நான்கின் காரணமாக ஒருவனுக்கு அச்சம் ஏற்படும் .
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு . ( 1048 )
நாள்தோறும் வறுமையால் வாடி துன்புற்ற ஒருவன் , " நேற்றுத் துன்புறுத்தி வாட்டிய அந்த வறுமை , இன்றும் என்னிடம் வருமோ ? " என்று அச்சம் கொள்கிறான் . அந்த அச்சத்தின் விளைவே இந்தக் குறட்பா ஆகும் .
( தொடரும் )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|